TN 12th Result 2026: மீண்டும் 'பின்தங்கிய மாவட்டம்' முத்திரை? இந்த மாவட்டத்திற்கு இப்படி ஒரு அவலமா ?
Tamil Nadu 12th Result 2026: கடந்த முறை மாநில அளவிலான தரவரிசையில் 18-வது இடத்தைப் பிடித்திருந்த விழுப்புரம் மாவட்டம், இந்த முறை பெரும் பின்னடைவைச் சந்தித்து 38-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் 2026 மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை, மாநிலம் முழுவதும் 3,412 மையங்களில் நடைபெற்றன. தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுடன் தேர்வுகள் தொடங்கின. இந்தத் தேர்வெழுத 7.99 லட்சம் பள்ளி மாணவர்கள் மற்றும் 27,783 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,27,475 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 85.92%
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 21,924 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 18,837 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 85.92%ஆகும். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் விழுப்புரம் மாவட்டம் சமீபகாலமாக 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பேச்சு சதவீதத்தில் விழுப்புரம் மாவட்டம் குறைந்துள்ளது. கடந்த முறை 18 இடத்தை பிடித்த நிலையில், தற்போது மாநில அளவில் 38 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது .
பாலினம் ரீதியாக, இத்தேர்வினை மாணவர்கள் 10,982 பேரும், மாணவிகள் 10,942 பேரும் என மொத்தமாக 21,924 பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில் மாணவர்கள் 8,924 மாணவிகள் 9,913 மொத்தம் 18,837 என மொத்தம் 85.92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்களின் தேர்ச்சி 81.26% சதவிகிதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 90.26%சதவிகிதமாகவும் தேர்ச்சி பெற்றுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 85.92 சதவீதம் மாணவ,மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் விழுப்புரம் மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக கல்வித் தரத்தில் முன்னேற்றம் கண்டு வந்தது. இருப்பினும், இந்த ஆண்டு மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை மாநில அளவிலான தரவரிசையில் 18-வது இடத்தைப் பிடித்திருந்த விழுப்புரம் மாவட்டம், இந்த முறை பெரும் பின்னடைவைச் சந்தித்து 38-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது மாவட்டக் கல்வித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த சரிவைச் சரி செய்யவும், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும் வரும் கல்வியாண்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
www.tnresults.nic.in , www.dge.tn.gov.in , results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
தேர்வர்கள் மேற்காண் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
வாட்ஸப் மூலம் காண்பது எப்படி?
- Whatsapp செயலி வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
- வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைக்கவும்.
- அந்த எண்ணில் "Hi" எனப் பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர் மற்றும் தேர்வர்களின் வகுப்பினை தெரிவு செய்யவும்.
- தொடர்வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து அனுப்பவும்.
- அதில் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே Whatsapp செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம்.
இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் Whatsapp செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















