மேலும் அறிய

அரசுப்பள்ளியில் ஆர்வத்துடன் தமிழ் மொழி கற்கும் வடமாநில குழந்தைகள் - எங்கு தெரியுமா?

ஆரம்ப காலங்களில் தமிழ் கற்பது சிரமமாக இருந்தாலும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களுடன் பயிலும் போது மிக எளிதாக மொழிப்பாடங்களை கற்க முடிகிறது என நெகிழ்ச்சி.

திருப்பூர் மாவட்டத்தில் பீகார், ஒரிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் மாவட்டம் முழுவதும் தங்களது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கடந்த காலங்களில் இவர்களின் குறிக்கோள் வேலை செய்வது பணம் சம்பாதிப்பது அதை ஊருக்கு கொண்டு செல்வது என்பது மட்டுமே இருந்து வந்தது. தற்பொழுது அந்த நிலை மாறி தாங்கள் வேலை செய்தாலும் பரவாயில்லை தங்களது குழந்தைகள் நல்ல கல்வியை பெற வேண்டும் என்ற மனப்பக்குவம் அவர்களுக்கு வந்துள்ளது. 

இதன் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 15,000 மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் சேர்ப்பவர்களின் எண்ணிக்கையானது கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 10 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இங்கேயே தங்கி இருந்து பணிபுரிந்து வருவதால் அவர்களின் குழந்தைகள் தமிழை நன்றாக கற்று தமிழ் பேச வேண்டும் என்று அரசு பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். அரசுப் பள்ளிகளை பொருத்தவரை வட மாநிலத்தவர்களின் குழந்தைகளின் கல்விக்காக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வடமாநில குழந்தைகளுக்கு என தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் இந்தி மொழியில் குழந்தைகளிடம் பேசி அவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியும் ஹிந்தி மூலமாக தமிழ் வழிக் கல்வியும் கற்பித்து வருகின்றனர். 

அரசுப்பள்ளியில் ஆர்வத்துடன் தமிழ் மொழி கற்கும் வடமாநில குழந்தைகள் - எங்கு தெரியுமா?

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், முதலில் எழுத்து வடிவம் பின்னர் கதை வடிவிலான பாடங்கள் என சிறுக சிறுக அவர்களுக்கு தமிழை புரிய வைத்து அதன் பிறகு தமிழ் வழிக் கல்வியை பயில வைப்பதாகவும், ஆரம்ப காலங்களில் தமிழ் மொழி கற்க சிரமப்பட்டாலும் போகப்போக மிக எளிதாக தமிழ் வழிக் கல்வியை வட மாநில குழந்தைகள் சிறப்பாக கற்று தேர்ந்து வருவதாகவும் தமிழில் எழுதவும் படிக்கவும் நன்கு பழகி விட்டதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பணி சவாலாக இருந்தாலும் மற்ற மாநில குழந்தைகள் தமிழ் கல்வியை விரும்பி படிப்பதை காணும் போது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர். 

இது மட்டுமின்றி தற்பொழுது தமிழக அரசு சார்பில் பள்ளி கல்வி இயக்குனர் ஒரு உத்தரவு பிறப்புத்துள்ளார். அதன்படி வட மாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவு திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் வட மாநில மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவிலான வட மாநில மாணவர்கள் இந்த ஊக்கத் தொகையை பெறுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ஆசிரியர்கள் கூறினார். 

அரசுப்பள்ளியில் ஆர்வத்துடன் தமிழ் மொழி கற்கும் வடமாநில குழந்தைகள் - எங்கு தெரியுமா?

தமிழ் கற்பது தொடர்பாக வடமாநில குழந்தைகள் கூறுகையில், "ஆரம்ப காலங்களில் தமிழ் கற்பது சிரமமாக இருந்தாலும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களுடன் பயிலும் போது மிக எளிதாக மொழிப்பாடங்களை கற்க முடிகிறது. உடன் படிக்கும் சக மாணவ மாணவிகளும் தமிழிலேயே உரையாடுவதால் எங்களுக்கு அதனை கற்றுக்கொள்ள இன்னும் எளிதாக இருந்தது. அது மட்டும் இன்றி வீடுகளிலும் நாங்கள் தமிழ் மொழியிலேயே பேசிக் கொள்வதால் வெகு விரைவிலேயே சரளமாக பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டோம். வருகின்ற பொதுத் தேர்வுகளிலும் மற்ற பாடங்களைப் போலவே தமிழ் மொழி பாடங்களிலும் அதிக அளவில் மதிப்பெண்கள் பெறுவதோடு அரசு போட்டித் தேர்வுகளுக்கும் எங்களை தயார் படுத்திக் கொள்வோம்" என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget