மேலும் அறிய

கதையின் நாயகனாகவே மாறி பாடம் நடத்தும் தமிழ் ஆசிரியர் - ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வேடம்

கொரோனாவிற்கு பின்னர் மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையே இடைவெளி அதிகமாக இருந்த காரணத்தினால் தினந்தோறும் மாணவர்களின் சீருடை அணிந்து பள்ளிக்கு வரும் தமிழ் ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கும் துரைப்பாண்டி என்பவர் பாடத்தில் வரும் சுதந்திர போராட்ட வீரர்கள், வரலாற்று மன்னர்கள் வேடமணிந்து மாணவ- மாணவிகள் மத்தியில் பாடம் எடுத்து அசத்தி வருகிறார். பாடங்களை மனப்பாடம் செய்வதை தடுத்து, புரிந்து படிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 4 ஆண்டுகளாக இந்த முயற்சியை மேற்கொண்டு தமிழ் ஆசிரியர் துரைப்பாண்டி வெற்றியும் கண்டுள்ளார்.


கதையின் நாயகனாகவே மாறி பாடம் நடத்தும் தமிழ் ஆசிரியர் - ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வேடம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வெம்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் துரைப்பாண்டி. கயத்தார் அருகேயுள்ள கம்மாப்பட்டி சொந்த ஊர் என்றாலும் தற்பொழுது கோவில்பட்டியில் இருந்து தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக துரைப்பாண்டி வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.


கதையின் நாயகனாகவே மாறி பாடம் நடத்தும் தமிழ் ஆசிரியர் - ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வேடம்

சிறுவயதில் இருந்தே சுதந்தி போராட்டா வீரர்கள், வரலாற்று மன்னர்கள் கதைகளை கேட்பதிலும், நாடகங்களை பார்ப்பதிலும் ஆர்வம் கொண்ட துரைப்பாண்டி, அந்த கதையில் வரும் கதை நாயகர்களாக தன்னை ஒப்பனை செய்து நடித்து பார்ப்பதும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்;ளார்.சிறுவயதில் அவரிடம் இருந்த ஆர்வம், துடிப்பு ஆகியவை தான் ஆசிரியராக பொறுப்பு ஏற்றதும், அதனை மாணவ-மாணவிகளின் கற்றலை ஊக்குவிக்கவும், அவர்கள் புரிந்து ஆர்வமுடன் படிப்பதற்கும் பயன்படுத்தி கொண்டார். தமிழ் பாடத்தில் வரக்கூடிய பாடல்கள், வரலாற்று மற்றும் சுதந்திர போராட்ட நாயகர்கள் வேடமணிந்து துரைப்பாண்டி பாடங்களை மாணவர்களுக்கு கற்று தந்து கொண்டு இருக்கிறார்.


கதையின் நாயகனாகவே மாறி பாடம் நடத்தும் தமிழ் ஆசிரியர் - ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வேடம்

திருவள்ளுவர், வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சி, ராஜராஜசோழன் என தான் சொல்லிக்கொடுக்கும் வகுப்பில் பாடத்தில் வரக்கூடிய முக்கிய தலைவர்களின் வேடங்களை அணிந்தவாறு பாடம் எடுத்து அசத்தி வருகிறார்.2014ம் ஆண்டு தனது ஆசிரியர் பணியை தொடங்கிய துரைப்பாண்டி வேலூர் அணைக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பள்ளிகளில் பணியாற்றி 4 வது பள்ளியாக வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.


கதையின் நாயகனாகவே மாறி பாடம் நடத்தும் தமிழ் ஆசிரியர் - ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வேடம்

கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வேடமணிந்து சென்று மாணவ-மாணவிகள் மத்தியில் பாடங்களை சொல்லி கொடுத்து அவர்களுக்கு பாடம் எளிதில் சொல்லிக்கொடுத்து வருகிறார். வேமணிய தேவையான பொருள்களுக்காக தனது ஊதியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வாங்கி வருகிறார். தொடக்கத்தில் வேடமணியும் போது கொஞ்சம் சிரமப்பட்டு வந்தாலும், துரைப்பாண்டியன் முயற்சிக்கு அப்பள்ளி மற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் உதவி புரிய தொடங்கியுள்ளனர். அவர் வேடம் போடுவதற்கு துணை புரிந்து வருகின்றனர்வேடம் அணிந்தது மட்டுமல்லு, அந்த வேடத்திற்குரிய கம்பீரத்துடன் வகுப்பில் பாடம் நடத்துவதால் மாணவர்களுக்கு பாடங்கள் எளிதில் புரிந்து கொள்ளுகின்றனர். மேலும் தேர்வுகளில் அசத்தி வருகின்றனர்.


கதையின் நாயகனாகவே மாறி பாடம் நடத்தும் தமிழ் ஆசிரியர் - ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வேடம்

ஆசிரியர் துரைப்பாண்டியிடம் கேட்டபோது, மாணவர்கள் புரிந்து கொண்டு படிக்காமல் மனப்பாடம் செய்து படிக்கும் நிலை இருப்பதை புரிந்து கொண்டேன். மேலும் காட்சி பொருளாக இருந்தால் அதனை புரிந்து கொள்கின்றனர் என்பதால் எனது வகுப்புறையில் மாற்றம் கொண்டு வர வேடமணிந்து பாடத்தினை கற்பிக்கும் முறையை கொண்டு வந்தேன். இதனால் மாணவர்கள் இடையே மனப்பாடம் செய்வது குறைந்து பாடங்களை புரிந்து கொள்ள தொடங்கினர். கொரோனாவிற்கு பின்னர் மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையே இடைவெளி அதிகமாக இருந்த காரணத்தினால் தினந்தோறும் மாணவர்களின் சீருடை அணிந்து பள்ளிக்கு வருவதாகவும், தன்னுடைய முயற்சிக்கு தங்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார்

ஆசிரியர் என்ற முகமூடியை நீக்கி விட்டு மாணவர்களுடன் மாணவராக இருந்து, பாடங்களை நடத்துவது மட்டுமின்றி, பாடத்தில் வரும் கதாபாத்திரங்களாக வேடமணிந்து உருவகப்படுத்தி காட்சியாக மாணவர்களின் கல்வி மற்றும் கற்பனை திறனை ஊக்குவித்து வரும் ஆசிரியர் துரைப்பாண்டியன் பணி பாராட்டுக்குரியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget