மேலும் அறிய

Engineering Admission: இத்தனை ஆயிரம் மாணவர்களுக்கு கல்லூரி, விடுதிக் கட்டணம் கிடையாது; அமைச்சர் பொன்முடி தகவல்

7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேரும் 28,425 மாணவர்களுக்கு கல்லூரியில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் கிடையாது என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேரும் 28,425 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்லூரியில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் கிடையாது என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி மதியம் 12 மணிக்கு வெளியிட்டார். மாணவர்கள், தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். 

அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்கள் 27,866 பேருக்கு தரவரிசைப் பட்டியலும் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி பேசும்போது, ''அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 5842 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவீத அளவுக்கு அதிகமாகும். இது புதுமைப் பெண் திட்டத்துக்குக் கிடைத்த வெற்றி ஆகும். 

28,425 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லை

அரசுப் பள்ளி மாணவர்கள் 31,441 பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த நிலையில், அகாடமிக் மற்றும் தொழிற்கல்விப் பிரிவில் மொத்தம் 28,425 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இதில் 13,284 பேர் புதுமைப் பெண் திட்டத்தின் நிதி வாங்கத் தகுதியான மாணவிகள் ஆவர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 15,136 ஆண்களுக்கும் 5 மூன்றாம் பாலினத்தவருக்கும் கல்லூரியில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் கிடையாது.

பொறியியல் படிப்புகளுக்கு வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் ஆண்கள் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 384 பேர், பெண்கள் 72 ஆயிரத்து 558 பேர், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 17 பேர்.  இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பொறியியல் தரவரிசை பட்டியலில் மொத்தம் முதல் மூன்று இடங்களை மாணவிகளே பெற்றுள்ளனர்.

மாணவிகளே முதல் 3 இடங்கள்

தூத்துக்குடியைச் சேர்ந்த நேத்ரா 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தர்மபுரியைச் சேர்ந்த ஹர்னிகா, திருச்சியைச் சேர்ந்த ரோஷினி பானு ஆகியோர் முறையே 2 மற்றும் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர். மாணவிகளே முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை மாணவிகளே அதிக இடம் பிடித்துள்ளனர். சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகாலட்சுமி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். நாகப்பட்டினத்தை சேர்ந்த மாணவி நிவேதிதா, கோயம்புத்தூரை சேர்ந்த மாணவர் சரவணகுமார் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்'' என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
IAAC: விண்வெளி ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! சர்வதேச வானியல் போட்டி: பரிசு & சான்றிதழ்கள் வெல்லலாம்!
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
பல்லி விழுந்த மதிய உணவு விவகாரம்... 3 பேர் இடைநீக்கம்...
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Embed widget