மேலும் அறிய

Teachers Salary: பணிநிரவல் ஆசிரியர்களுக்கு ஏன் இந்த நிலை? ஊதியத்தை கொடுங்க - அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு  4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக  அரசு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு  4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக  அரசு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பணி நிரவல் கலந்தாய்வு

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறையைச் சரிசெய்யும் வகையில் ஆசிரியர்களைப் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக வழக்கமாக நடைபெறும் ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு, ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பணியிட மாறுதல் மற்றும் பணிநிரவல் அரசாணை கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு

இந்த அரசாணை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும், உடனடியாக தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, உரிய தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தது.

இதை அடுத்து, பணி நிரவல் மாற்றத்தில் இருந்து (excess staff teachers transfer) மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையே பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு  4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக  அரசு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

''தமிழ்நாட்டில் 29.11.2022-ஆம் நாள்  நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு  இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. பணி செய்த  ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது சரியல்ல. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது!

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில்  பெரும்பான்மையினர் குடும்பத்துடன் புதிய பணியிடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்; சிலர்  தனியாக வாழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில்  அவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்!

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் (IFHRMS) பதிவேற்றம் செய்யப்படாததுதான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம். ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்ய இவ்வளவு காலம் ஆவதை ஏற்றுக்கொள்ள முடியாது!

மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் விவரங்களை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில்  பதிவேற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: மதம் சார்ந்த பரப்புரையா? ”இந்து - முஸ்லீம்னு நான் சொல்லவே இல்லையே” -  அந்தர் பல்டி அடித்த பிரதமர் மோடி
PM Modi: மதம் சார்ந்த பரப்புரையா? ”இந்து - முஸ்லீம்னு நான் சொல்லவே இல்லையே” - அந்தர் பல்டி அடித்த பிரதமர் மோடி
Accident: எமனாக வந்த மாடு..!  அப்பளம் போல் நொறுங்கிய கார்!  5 பேர்  பலி: சென்னை அருகே சோகம்!
எமனாக வந்த மாடு..! அப்பளம் போல் நொறுங்கிய கார்! 5 பேர் பலி: சென்னை அருகே சோகம்!
தந்தையை செண்ட் ஆப் செய்த குடும்பம்..! வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு..!
தந்தையை செண்ட் ஆப் செய்த குடும்பம்..! வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு..!
Rasipalan: மேஷத்துக்கு அமைதி; ரிஷபத்துக்கு மாற்றம் நிறைந்த நாள்: முழு ராசிபலன்கள் இதோ..
Rasipalan: மேஷத்துக்கு அமைதி; ரிஷபத்துக்கு மாற்றம் நிறைந்த நாள்: முழு ராசிபலன்கள் இதோ..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: மதம் சார்ந்த பரப்புரையா? ”இந்து - முஸ்லீம்னு நான் சொல்லவே இல்லையே” -  அந்தர் பல்டி அடித்த பிரதமர் மோடி
PM Modi: மதம் சார்ந்த பரப்புரையா? ”இந்து - முஸ்லீம்னு நான் சொல்லவே இல்லையே” - அந்தர் பல்டி அடித்த பிரதமர் மோடி
Accident: எமனாக வந்த மாடு..!  அப்பளம் போல் நொறுங்கிய கார்!  5 பேர்  பலி: சென்னை அருகே சோகம்!
எமனாக வந்த மாடு..! அப்பளம் போல் நொறுங்கிய கார்! 5 பேர் பலி: சென்னை அருகே சோகம்!
தந்தையை செண்ட் ஆப் செய்த குடும்பம்..! வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு..!
தந்தையை செண்ட் ஆப் செய்த குடும்பம்..! வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு..!
Rasipalan: மேஷத்துக்கு அமைதி; ரிஷபத்துக்கு மாற்றம் நிறைந்த நாள்: முழு ராசிபலன்கள் இதோ..
Rasipalan: மேஷத்துக்கு அமைதி; ரிஷபத்துக்கு மாற்றம் நிறைந்த நாள்: முழு ராசிபலன்கள் இதோ..
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறிய டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறிய டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Embed widget