மேலும் அறிய

ஆசிரியர்கள் 2வது பெற்றோர்கள்; தங்கள் குழந்தைகளைவிட மாணவர்களுடன்தான் அதிக நேரம் இருக்கிறார்கள்- அன்பில் மகேஸ்

மாணவர்களான உங்களுக்கு 10ம் வகுப்பும், 12ம் வகுப்பும் முக்கியமாக காலமாகும். 10ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் நல்ல குரூப்பும், 12ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் நல்ல கல்லுாரியும் கிடைக்கும்.

ஆசிரியர்கள் 2வது பெற்றோர்கள் எனவும் அவர்கள் தங்களின் குழந்தைகளைவிட உங்களிடம்தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


ஆசிரியர்கள் 2வது பெற்றோர்கள்; தங்கள் குழந்தைகளைவிட மாணவர்களுடன்தான் அதிக நேரம் இருக்கிறார்கள்- அன்பில் மகேஸ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட கல்வி மாவட்ட அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களை பார்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கோவில்பட்டி வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள 10ம் ஆங்கில வழி வகுப்புக்கு சென்று மாணவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்துரையாடினார்.


ஆசிரியர்கள் 2வது பெற்றோர்கள்; தங்கள் குழந்தைகளைவிட மாணவர்களுடன்தான் அதிக நேரம் இருக்கிறார்கள்- அன்பில் மகேஸ்

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடம் பேசுகையில் ‘மாணவர்களான உங்களுக்கு 10ம் வகுப்பும், 12ம் வகுப்பும் முக்கியமாக காலமாகும். 10ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் நல்ல குரூப்பும், 12ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் நல்ல கல்லுாரியும் கிடைக்கும். வாழ்க்கையில் 9ம் வகுப்பு வரை எப்படி இருந்தாலும், அதன்பின் 6 ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் பெற்றோர்கள் உங்களை சுமந்து படிக்க வைத்ததுபோல், நீங்கள் அவர்களை சுமந்து பொறுப்பானவர்களாக ஆகலாம்.

ஆசிரியர்கள் 2வது பெற்றோர்கள். அவர்கள் உங்கள் மீது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லாதவர்கள். அவர்களின் குழந்தைகளைவிட உங்களிடம்தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். ஒவ்வொரு தேர்வையும் இறுதித் தேர்வாக கருதி தேர்வு எழுதவேண்டும்’. என்றார்.


ஆசிரியர்கள் 2வது பெற்றோர்கள்; தங்கள் குழந்தைகளைவிட மாணவர்களுடன்தான் அதிக நேரம் இருக்கிறார்கள்- அன்பில் மகேஸ்

இது குறித்து தனது x தளத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவு செய்து உள்ளார். ’’1906ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டு, 1918ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்து இன்று மேனிலைப்பள்ளியாக கல்விப் பணியாற்றும் கோவில்பட்டி வ.உ.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் கீழ் 80ஆவது ஆய்வை மேற்கொண்டோம்.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி நடைப்பயிற்சி மேற்கொண்ட மைதானம் அமைந்திருக்கும் பள்ளி! அதே மைதானத்தில் 1952ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி விளையாட்டின் தந்தை மேஜர் தயான் சந்த் ஆறு நாட்களுக்கும் மேலாக விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளித்துள்ளார் என்ற புகழை தாங்கி நிற்கும் பள்ளி!


ஆசிரியர்கள் 2வது பெற்றோர்கள்; தங்கள் குழந்தைகளைவிட மாணவர்களுடன்தான் அதிக நேரம் இருக்கிறார்கள்- அன்பில் மகேஸ்

Kadambur Raju அவர்களின் தொகுதியான கோவில்பட்டியில் அமைந்துள்ள இப்பள்ளியின் மற்றுமொரு சிறப்பாக 1931ஆம் ஆண்டு அன்றைய கல்வி அமைச்சரும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவருமான திரு.குமாரசாமி ரெட்டியார்யால் திறந்துவைக்கப்பட்ட வகுப்பறை கட்டடம் இன்றும் செயல்பாட்டில் உள்ளது. அக்கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்வோம் என உறுதியளித்து, அதே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தையும், புத்தகக் கிடங்கையும் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget