மேலும் அறிய

TN 12th Public Exams: தமிழ்நாட்டில் நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம் - என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியாகியிருந்தது. 

பொதுத்தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு ஆசிரியர்களும் மாதிரி தேர்வுகள் என அனைத்து மாணவர்களையும் தயார் செய்து வந்தனர். தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வை 4,03,156 மாணவர்களும், 4,33,436 மாணவிகளும் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 23,747 பேர் தனித்தேர்வர்கள் ஆவார்.  மாற்றுத் திறனாளிகள் 5,206 பேரும்,  மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும்,  சிறை கைதிகள் 90 பேரும் தேர்வு எழுதுகின்றனர். 

புதுச்சேரி:

இதேபோல் புதுச்சேரியில் 6,982 மாணவர்களும், 7,728 மாணவிகளும் என மொத்தம் 14, 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.மொத்தம் 3, 225 மையங்களில் பொதுத்தேர்வானது நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை கண்காணிப்பு பணிகளில் 46,870 ஆசிரியர்களும், முறைகேடுகளைத் தடுக்க 4,235 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  

ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்லவும், ஹால் டிக்கெட்டில் இடம் பெற்றுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

இதேபோல் விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் தான் எழுத வேண்டும். கலர் பென்சில், பேனாக்களை உபயோகிக்கக்கூடாது. மேலும் விடைத்தாளில் ஏதேனும் குறியீடு, பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வர்களின் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள் முதன்மை விடைத்தாளுடன் இணைந்து வழங்கப்படும். அதனைச் சரிபார்த்து தேர்வர்கள் கையெழுத்து போட்டால் போதும். மேலும் அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 

இதனைத் தொடர்ந்து 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் 7,73,688 மாணவர்களும், புதுச்சேரியில் 14,376 மாணவர்களும் எழுதவுள்ளனர். இதில் மாற்றுத் திறனாளிகள் 5,835 பேர், மாற்றுத்திறனாளிகள் 4 பேர், சிறைக்கைதிகள் 125 பேர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
Google Fellowship: ஊக்கத்தொகையுடன் கூகுள் சம்மர் பெல்லோஷிப்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்- பொன்னான வாய்ப்பு!
Google Fellowship: ஊக்கத்தொகையுடன் கூகுள் சம்மர் பெல்லோஷிப்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்- பொன்னான வாய்ப்பு!
உயர பறந்த குழந்தைகள்... விமானத்தில் சென்ற காப்பக மாணவர்கள் மகிழ்ச்சி
உயர பறந்த குழந்தைகள்... விமானத்தில் சென்ற காப்பக மாணவர்கள் மகிழ்ச்சி
ABP Premium

வீடியோ

Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
Stalin warns DMK leaders : குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
கட்சியில் குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
IPL 2026: ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
iPhone 17 Pro Max Discount: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் அதிரிபுதிரி டிஸ்கவுண்ட்; இவ்ளோ தள்ளுபடியா.! வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க.!
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் அதிரிபுதிரி டிஸ்கவுண்ட்; இவ்ளோ தள்ளுபடியா.! வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க.!
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
தனியார் மருத்துவமனை டாக்டரை ஏமாற்றி ரூ.6.90 லட்சம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தனியார் மருத்துவமனை டாக்டரை ஏமாற்றி ரூ.6.90 லட்சம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
Embed widget