மேலும் அறிய

”பள்ளி மாணவர்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய்” வந்தது அதிரடி அறிவிப்பு..!

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதோடு தேர்வுக் கட்டணமாக 50 ரூபாயையும் சேர்த்து வரும் 09-12-2024ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவ / மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என ஒரு கல்வி ஆண்டிற்கு இனி 10 ஆயிரம் ரூபாயை மாணவர்கள் சுளையாக பெற முடியும்.

10 ஆயிரம் ரூபாயை வாங்க என்ன செய்ய வேண்டும் ?

இந்த பத்தாயிரம் ரூபாயை பெற, அரசு பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணக்கர்கள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ”தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வை”எழுதி வெற்றி பெற வேண்டும்.

தேர்வு எப்போது ?

இந்த திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி அதாவது 25 – 01 – 2025ல் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

யார், யார் விண்ணப்பிக்கலாம் ?

இந்த திறனாய்வு தேர்வு எழுத, தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் நடைமுறையில் உள்ள, இடஒதுக்கீட்டின் அடிப்படையில், ஆயிரம் மாணக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு (500 மாணவர்கள் / 500 மாணவிகள்),  அவர்களுக்கு ஊக்கத் தொகையாக ஒரு கல்வி ஆண்டில் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். அதாவது, ஒரு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் என பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் 

தேர்வு எப்படி நடத்தப்படும் ? எதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் ?

தமிழ்நாடு அரசின் ஒன்பது மற்றும் 10ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்கள் அடிப்படையில், தேர்வு இருதாள்களாக நடத்தப்படும். முதல் தாளில் 60 மதிப்பெண்களுக்கு கணிதம் தொடர்புடைய கேள்விகளும் இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும்.

தேர்வு நேரம் எப்போது ?

இந்த தேர்வுக்கான நேரமாக முதல் தாள், காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், இரண்டாம் தாள், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி ?

இந்த தேர்வு எழுத விருப்பப்படும் மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம், வரும் 30 – 11- 2024 முதல், 09 – 12 – 2024 வரை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் கிடைக்கும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதோடு தேர்வுக் கட்டணமாக 50 ரூபாயையும் சேர்த்து வரும் 09-12-2024ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க வேண்டும்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
லக்கா? பிசினஸ் ட்ரிக்கா? ரூ.334 கோடியை அள்ளிய பெண் - யார் என்று தெரிகிறதா? சட்டம் கொடுத்த ஷாக்
லக்கா? பிசினஸ் ட்ரிக்கா? ரூ.334 கோடியை அள்ளிய பெண் - யார் என்று தெரிகிறதா? சட்டம் கொடுத்த ஷாக்
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
லக்கா? பிசினஸ் ட்ரிக்கா? ரூ.334 கோடியை அள்ளிய பெண் - யார் என்று தெரிகிறதா? சட்டம் கொடுத்த ஷாக்
லக்கா? பிசினஸ் ட்ரிக்கா? ரூ.334 கோடியை அள்ளிய பெண் - யார் என்று தெரிகிறதா? சட்டம் கொடுத்த ஷாக்
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
சாதித்த ஸ்டாலின்: பள்ளிக் கல்விக்கு புதிய பாதை! இல்லம் தேடிக் கல்வி முதல் வெளிநாட்டு சுற்றுலா வரை - முழு விவரம்!
சாதித்த ஸ்டாலின்: பள்ளிக் கல்விக்கு புதிய பாதை! இல்லம் தேடிக் கல்வி முதல் வெளிநாட்டு சுற்றுலா வரை - முழு விவரம்!
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.
சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.
Embed widget