மேலும் அறிய

11th Public Exam: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. முழு விவரம் இதோ..

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 7 லட்சத்து 88 ஆயிரத்து 064 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 7 லட்சத்து 88 ஆயிரத்து 064 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 7.73 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 224 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 40 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் நாளான இன்று மொழி பாடம் தேர்வு நடைபெறுகிறது. 

மார்ச் 16 - ஆங்கிலம்

மார்ச் 20 - இயற்பியல், பொருளாதாரம்

மார்ச் 24 - உயிரியல், தாவரவியல், வரலாறு

மார்ச் 28 - வேதியல், கணக்குப்பதிவியல்

மார்ச் 30 - கணினி அறிவியல்

ஏப்ரல் 5 - கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறுகிறது.

11ஆம் வகுப்பு தேர்வு 12ஆம் வகுப்பு தேர்வை போலவே 10 மணிக்கு தொடங்கி 1.15 மணி வரை நடைபெறுகிறது. 10 மணிக்கு புகைப்படம், பதிவெண் (regiter number/roll number), பாடம் முதலான விவரங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். இவற்றை சரிபார்த்த பின் 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 ஆயிரத்து 870 ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் 4 ஆயிரத்து 235 பேர் பறக்கும் படை மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் மொபைல் அல்லது மின் சாதன பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அதேபோல் ஆள்மாறாட்டம், அருகில் இருக்கும் மாணவர்களை பார்த்து தேர்வை எழுதுவது உள்ளிட்ட செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிள்ஸ் 2 மாணவர்களுக்கு மொழித்தாள் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் வினாத்தாள் எளிதாக இருந்ததாக கூறினர். ஆனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்றும், 2 தேர்வர்கள் முறைகேடு செய்ததாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொது வெளியில் தேர்வு எழுத அனுப்பினால் அவர்களுக்கு தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் பலரும் தேர்வு எழுதாமல் இருந்தனர். இதனால் கொரோனா தொற்று இருந்த போது அரசு 100 சதவீதம் தேர்ச்சி என அறிவித்தது. ஆனால் தற்போதும் இந்த நிலை தொடர்வது வருத்தமளிக்கும் விஷயமாக கருதுகின்றனர். 

10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்குகிறது.  ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

ஏப்ரல்  6 - மொழித்தாள்

ஏப்ரல் 10 - ஆங்கிலம்

ஏப்ரல் 13-  கணிதம்

ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள்

ஏப்ரல் 17- அறிவியல்

ஏப்ரல் 20- சமூக அறிவியல் 

தேர்வு மையங்களில் மாணவர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை, இருக்கை என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வை அச்சமின்றி, டென்ஷன் இல்லாமல் அணுக வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணர்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

Chennai Food Street : உணவு பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. சென்னைல ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ வரப்போகுது.. எங்கே எப்போன்னு தெரியுமா? முழு விவரம் இதோ..

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan joins DMK | தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் U TURN!மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?
Tirunelveli thief Letter |‘’வீட்டுல ஒரு ரூபாய் இல்லைஎதுக்கு யா இத்தனை CCTV.. ’’திருடன் எழுதிய LETTER
DMK MP helps Student |‘’சார் HELP பண்ணுங்க’’ உதவி கேட்ட சிறுவன் வியந்து பார்த்த MP
கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Dharmapuri Power Cut (27-11-2025): ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
Embed widget