மேலும் அறிய

Tamil Nadu 10th Result 2024: 12 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி: சாதித்த தஞ்சை பார்வை திறன் குறையுடையோருக்கான பள்ளி

பிரெய்லி எழுத்து மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் நடத்தப்பட்டது. தேர்வுகளை ஆசிரியர்களின் உதவியோடு மாணவர்கள் எழுதினர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வரும் பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கின. இத்தேர்வு ஏப்.8ம் தேதி வரை நடந்தது. இதற்காக தஞ்சை மாவட்டத்தில் 134 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் தேர்வை எழுதினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை மாணவர்கள் 14,402 பேர் எழுதினர். மாணவிகள் 14,513 பேர் எழுதினர். மொத்தம் மாணவ, மாணவிகள் 28,915 தேர்வு எழுதி இருந்தனர்.


Tamil Nadu 10th Result 2024: 12 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி: சாதித்த தஞ்சை பார்வை திறன் குறையுடையோருக்கான பள்ளி

மொத்தம் 93.40 சதவீத தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் 13,032 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 13,974 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் மாணவ, மாணவிகள் 27,006 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் தேர்ச்சி 90.49 சதவீதமும்,  மாணவிகள் தேர்ச்சி  96.29 சதவீதமும் பெற்றனர். மொத்தம் 93.40 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

67 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு 92.16 சதவீதம் பெற்று மாநில அளவில் 17-ம் இடத்தை பிடித்திருந்தது. இந்த ஆண்டு இரண்டு இடம் முன்னேறி 15-ம் இடத்தை பிடித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 228 அரசு பள்ளிகளில் மாணவர்கள் 6,019 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். மாணவிகள் 6,380 பேர் தேர்வு எழுதியிருந்தனர். மொத்தம் 12,399 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 11,267 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 90.87 சதவீதம் ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் 67 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி

அந்த வகையில் தஞ்சாவூர் மேம்பாலம் அருகே, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் கீழ், பார்வை திறன் குறையுடையோருக்காக இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது. இப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பத்தாம் வகுப்பு தேர்வினை ஐந்து மாணவிகளும், 14 மாணவர்களும் என மொத்தம் 19 பேர் தேர்வு எழுதினர். 19 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்றுள்ளது.

பிரெய்லி எழுத்து மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது

தொடர்ந்து இப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடதக்கது. இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் செ.மாணிக்கராஜ் கூறுகையில், எங்களது பள்ளியில் பார்வை திறன் குறையுடைய மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பிரெய்லி எழுத்து மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் நடத்தப்பட்டது. தேர்வுகளை ஆசிரியர்களின் உதவியோடு மாணவர்கள் எழுதினர்.

இந்தாண்டு தேர்வு எழுதிய 19 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்களது பள்ளி தொடர்ந்து 12 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Embed widget