மேலும் அறிய

தருமபுரி அருகே நடந்த தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த பள்ளிக் குழந்தைகள்

மக்கள் பிரதிநிதிகளில் பணிகள், தேர்தல் நடைமுறைகளை மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் தேர்தல்.

தருமபுரி அருகே தேர்தல் ஆணைய விதிமுறையின்படியே நடைபெற்ற அரசு பள்ளி மாணவர் மன்ற தேர்தலில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 
 
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த உம்மியம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 340-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 10 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளி தலைமை ஆசிரியர் மாணவ, மாணவிகளுக்கு கல்வியோடு, வாழ்வியல் உள்ளிட்ட பல்வேறு கல்வி முறைகளை கற்பிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்கள் தலைவரை தேர்ந்தெடுக்க மாணவர் மன்ற தேர்தல் நடத்தி, தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டும், 14 துறை அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிப் பணிகளை பிரித்து கொடுத்து பராமரித்து வருகின்றனர். 

தருமபுரி அருகே நடந்த தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த பள்ளிக் குழந்தைகள்
 
இந்நிலையில் இந்த ஆண்டு பள்ளி மாணவர் தலைவர்களை தேர்ந்தெடுக்க மாணவர் மன்றத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கலோடு தொடங்கியது. இதில் 18 மாணவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். ஆனால் மூன்று மாணவர்களின் மனுக்களில், சிறு தவறு ஏற்பட்டதால், அவைகள் நிராகரிக்கப்பட்டது. மேலும் ஒருவர் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றுள்ளார்.
 
இந்நிலையில் இன்று காலை பள்ளி மாணவர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு, பள்ளியிலேயே நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவிற்கு வாக்குச்சாவடியில், வாக்குச்சாவடி அலுவலர்கள், முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 14 வேட்பாளர்களுக்கான சின்னங்களை ஒதுக்கி, 266 மாணவ, மாணவிகள் வாக்களித்தனர். தொடர்ந்து இந்த வாக்குகள் எண்ணப்பட்டு மாணவர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனை அடுத்து பதவியேற்பு விழாவில் மாணவர் மன்ற தலைவர் துணைத் தலைவர்களோடு 14 துறை அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். இதில் 14 துறை அமைச்சர்களுக்கு தனித்தனியாக துறைகள் ஒதுக்கி, பள்ளிப் பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தேர்தல் ஆணையம் நடத்துகின்ற தேர்தலை போன்று விதிமுறைகளைக் கொண்டு முறைப்படி தேர்தல் நடத்துவதால், பள்ளி மாணவர்களுக்கு தேர்தலின்  முக்கியத்துவம் புரிகிறது. அதேபோல் தேர்தலில் வாக்களிக்கிறோம் என்று மகிழ்ச்சி அடைகின்றனர்.

தருமபுரி அருகே நடந்த தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த பள்ளிக் குழந்தைகள்
 
மேலும், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பணி என்னென்ன என்பதை மாணவர்களுக்கு பள்ளிப்பருவத்திலே தெரியப்படுத்த முடியும் என்பதற்காக தேர்தல் விதிமுறைகளின் படி இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் தேர்தலில் வாக்களித்த மாணவ, மாணவிகள் நேர்மையானவர்களை, நல்ல வாக்குறுதி கொடுத்தவர்களுக்கு வாக்களித்துள்ளனர். தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளியில் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகவே வைத்துள்ளனர். தருமபுரி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த தேர்தலில் வாக்களித்த மாணவி, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்தல் அலுவலராக தலைமையாசிரிய நரசிம்மன், வாக்குஞ்சாவடி அலுவலர்களாக ஆசிரியர் ராதாகிருஷ்ணன், எழிலரசி, நிர்மலா ரோஸ்லின், நிர்மலா தேவி, புஷ்பா, ஜெயபாரதி, செண்பகம், ரோசலின், மேனகா, ஷர்மிளா உள்ளிட்ட ஆசிரியைகள் பணியாற்றினர்.

தலைப்பு செய்திகள்

மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
Embed widget