மேலும் அறிய

புதுச்சேரி: பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை; அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டம்!

புதுச்சேரி : தலைமை செயலகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கல்விதுறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசு செயலாளர்கள் அருண், வல்லவன், கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், மாநில சுகாதார திட்ட இயக்குனர் ஸ்ரீராமுலு, கொரோனா பொறுப்பு அதிகாரி ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, கொரோனா 3-வது அலை வரக்கூடும் என்பதால் தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று சுகாதாரத் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.


புதுச்சேரி: பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை; அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டம்!

 

அதன் பின் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது;-

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். கொரோனா 3-வது அலை எப்போது வரும் என்று தெரியாத சூழ்நிலையில், தற்போது 3 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள், 10 லட்சத்துக்கும் மேல் உள்ளனர். இதுவரை 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். முதலில் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள்,  ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். தற்போதைய நிலையில் 85 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போடாதவர்களுக்காக வருகிற 11, 12, 13-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

 


புதுச்சேரி: பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை; அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டம்!

 

 

பின்னர் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக வரும் 15-ந் தேதிக்கு பிறகு ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். ஏனெனில் 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்கிறார்கள். தற்போது கொரோன தாக்ககம் படிபடியாக குறையா தொடங்கிஉள்ளது,  3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால்  இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது.  இதற்காக தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதையும் மீறி கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க குழு அமைக்கப்படும். கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளிக்க தனியாக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என கல்வி துறை  அமைச்சர் நமச்சிவாயம் அவர் கூறினார்.

சுவரை உடைக்க சத்து இல்லாமல் பாதியில் சென்ற திருடர்கள்; வங்கி லாக்கர் தப்பியது!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
100 நாள் சவால்- அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் சோதனை- கல்வித்துறை அறிவிப்பு
Embed widget