மேலும் அறிய

தனியார் பல்கலைக்கழக திருத்த சட்டம் ரத்து: திரும்பப் பெறுவதாக அறிவிப்பு- பின்னணி என்ன?

2025ஆம் ஆண்டின் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்ட முன்வரைவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் வாபஸ்: சமூக நீதிக்கு எதிரான திமுக அரசை மக்கள் வாபஸ் வாங்கும் காலம் நெருங்கி விட்டது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதிக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப் பெறுவதாக திமுக அரசு அறிவித்திருக்கிறது. சமூகநீதியை படுகொலை செய்யும் செயலுக்கு எதிராக பா.ம.க. எழுப்பியக் குரலைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பை  சமாளிக்க முடியாமல் இவ்வாறு செய்துள்ளது.

2019ஆம் ஆண்டின் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன் வரைவை கடந்த 15ஆம் நாள் சட்டப்பேரவையில் திமுக அரசு தாக்கல் செய்தது. தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகநீதியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த சட்ட முன்வரைவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 16ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையில், தமிழக அரசின் சட்டத் திருத்தம் கல்வியை எந்த அளவுக்கு வணிகமயமாக்கும்? சமூகநீதியை எந்த அளவுக்கு அழிக்கும்? ஏழைகளிடமிருந்து உயர்கல்வி வாய்ப்புகளை எவ்வாறு தட்டிப் பறிக்கும்? என்பது குறித்தெல்லாம் அதில் விரிவாக விளக்கியிருந்தேன். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அக்டோபர் 17ஆம் தேதி விவாதமின்றி, குரல் வாக்கெடுப்பின் மூலம் அவசரமாக திமுக அரசு நிறைவேற்றியது.

திமுக அரசின் இந்த சமூக அநீதிக்கு எதிராக முதன்முதலில் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பிய குரல், தமிழகத்தின் கல்வியாளர்கள், பேராசிரியர் அமைப்புகள், சமூகநீதியாளர்கள் மற்றும் சில கட்சியினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி, கொந்தளிப்பாக மாறியது.

சட்ட முன்வரைவை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு

அது அடக்க முடியாத எதிர்ப்பு சுனாமியாக மாறிவிடும் என்பதை உணர்ந்த திமுக அரசு, இப்போது தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் 2025ஆம் ஆண்டின் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்ட முன்வரைவை திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது. சமூகநீதிக்கு எதிரான சதித் திட்டங்கள் வெற்றி பெறாது என்பதை இந்த நடவடிக்கை நிரூபித்திருக்கிறது.

இப்போதும் கூட கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல நல்ல நோக்கத்திற்காகவே இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது போலவும், இந்த சட்டத் திருத்தத்தால் சமூகநீதியும், ஏழைகளின் கல்வியும்  எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதைப் போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அரசு முயன்றுள்ளது. திமுக அரசு எந்த அளவுக்கு மக்களை ஏமாற்றும்? எந்த அளவுக்கு மோசடி செய்யும்? என்பதற்கு இதுவே சான்று.

கீழ்க்கண்ட பாதிப்புகள்  ஏற்படுமா, இல்லையா?

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் கீழ்க்கண்ட பாதிப்புகள்  ஏற்படுமா, இல்லையா? என்பதை அரசு விளக்க வேண்டும்.

1. மருத்துவம் தவிர்த்த பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.

2. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு அரசின் நிதியுதவி நிறுத்தப்படும்.

3. புதிதாக சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும்.

4. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இப்போது வழங்கப்படும் ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் தொடர வேண்டும் என சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும்  நிறுத்தப்பட்டிருக்கும்.

5. தனியார் கல்லூரிகள் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களாக மாறி விடும்.

6. இவை அனைத்துக்கும் மேலாக, கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய தனியார் பல்கலைக்கழகங்களை  உருவாக்குவதற்கு மட்டுமே கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டம் வகை செய்த நிலையில், ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்லூரிகளையும் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிப்பதற்கு  அரசு துடித்தது ஏன்?

ஏராளமான தனியார் கல்லூரிகள் என்ன விலை கொடுத்தாவது தனியார் பல்கலைக்கழகமாக மாற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த நிலையில், அவற்றின் விருப்பத்தை நிறைவேற்றவே திமுக அரசு இந்த சட்டத் திருத்த முன்வரைவை கொண்டு வந்திருப்பதாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். எதிர்ப்பு மட்டும் எழாமல் இருந்திருந்தால், இந்த சட்டத்தை செயல்படுத்தி உள்ள தனியார் கல்லூரிகள் அனைத்தையும் பல்கலைக்கழகங்களாக்கி கட்டணக் கொள்ளை கூடங்களாக திமுக அரசு மாற்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் &2023 உள்பட சமூகநீதிக்கும், இயற்கைவளப் பாதுகாப்புக்கும் எதிராக ஏராளமான சட்டங்களையும், திட்டங்களையும் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் திமுக கொண்டு வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. திமுக அரசு குற்ற உணர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரே ஒரு சட்டத்தை மட்டும் திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால், திமுகவின் துரோகங்களை மன்னிக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை. அவர்கள் அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் கடந்த கால தவறுகளை உணர்ந்து திமுக அரசையே திரும்பப் பெறுவார்கள். அதை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடும்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Embed widget