மேலும் அறிய

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 2 லட்சம் பேர் தோல்வி: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட கல்வித்துறை

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சுமார் 2 லட்சம் மாணவர் தேர்ச்சி அடையவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை ஆந்திரப் பிரதேசக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சுமார் 2 லட்சம் மாணவர் தேர்ச்சி அடையவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை ஆந்திரப் பிரதேசக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், 67.26% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் மிகவும் குறைந்த தேர்ச்சி விகிதம் இதுவாகும். 

முன்னதாக கோவிட்-19 தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால், 2019-20 மற்றும் 2020-21ஆம் கல்வியாண்டுகளில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை, 796 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை அளித்துள்ள நிலையில், 71 பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். 

பாடவாரியாகத் தேர்ச்சி அடையாத மாணவர்களின் விவரங்கள் 

கணிதப் பாடம் - 1,21,488 மாணவர்கள்
சமூக அறிவியல் -  1,14,231 மாணவர்கள்
பொது அறிவியல் பாடம்- 1,09,647 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் மொழிப் பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளனர். 

முதல் மொழிப் பாடத்தில் 50,866 மாணவர்களும் இரண்டாவது மொழிப் பாடத்தில் 18,254 மாணவர்களும் 3-ஆவது மொழிப் பாடத்தில் 12,599 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். 

பெண்களே அதிகத் தேர்ச்சி

வழக்கம்போல, ஆண்களைவிடப் பெண்களே அதிகத் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 70.70% மணவிகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் 64.02% பேரே தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 3,17,789 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.  


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 2 லட்சம் பேர் தோல்வி: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட கல்வித்துறை

தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது அரசுப் பள்ளிகளின் செயல்திறன் வீதம் குறைவாகவே உள்ளது. அதிகபட்சமாக உண்டு, உறைவிடப் பள்ளிகள் 91.10 தேர்ச்சி விகிதத்தை அளித்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 50.1 சதவீதமாக உள்ளது. 

தெலுங்கு வழிக் கல்வி கற்கும் மாணவர்கள் மிகுந்த சரிவைச் சந்தித்து 43.97% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆங்கில வழிக் கல்வி கற்போர் 77.55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

துணைத் தேர்வுகள் 

இதுகுறித்துப் பேசிய கல்வித்துறை அமைச்சர் போச்சா சத்தியநாராயணா, ’’கல்வித் துறை வரும் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி மீது அதிக கவனம் செலுத்தும். 

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூலை 6 முதல் 15ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கான கட்டணத்தை ஜூன் 7 முதல் செலுத்தலாம்’’ என்று அமைச்சர் போச்சா சத்தியநாராயணா தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Embed widget