மேலும் அறிய

நான்கில் ஒரு பங்கு இடம் காலி; ஆண்டுதோறும் குறையும் அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கை- எழும் கேள்விகள்!

ஆண்டுக்கு ஆண்டு அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும் உயர்கல்வித்துறையை  சீரழித்ததுதான் திமுக அரசின் சாதனை எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் சாடியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்து உள்ளதாவது:

''தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் மாதம் நிறைவடைய வேண்டிய மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், நான்கில் ஒரு பங்கு இடங்கள் நிரம்பாமல் காலியாக கிடக்கின்றன. தனியார் கல்லூரிகளில் போட்டிப் போட்டுக் கொண்டு சேரும் மாணவர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.

1.26 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள்

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 15 கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளது. அந்தக் கல்லூரிகளில் ஒட்டு மொத்தமாக 1.26 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அவற்றுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த மே 7ஆம் நாள் தொடங்கின.

ஜூன் மாதமே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், மாணவர் சேர்க்கை இடங்கள் நிரம்பாமல் இருந்ததால் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட இதுவரை 96 ஆயிரம், அதாவது 76.2% இடங்கள் மட்டும்தான் நிரம்பியுள்ளன. மீதமுள்ள மாணவர்கள் அனைவரும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து விட்டதால் அரசு கல்லூரிகளில் மீதமுள்ள 30 ஆயிரம் இடங்கள் நிரம்புவதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை.

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25% இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.

உயர்கல்வித்துறையின் வீழ்ச்சி

தமிழ்நாடு அரசே வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2022& 23ஆம் ஆண்டில் 170 அரசுக் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில், ஒரு லட்சத்து 8,748 மாணவர்கள் சேர்ந்தனர். அதற்கு அடுத்த ஆண்டில் 171 கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5,258 ஆகக் குறைந்தது.

அதற்கு அடுத்த ஆண்டில், 172 அரசுக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 98,885 மாணவர்கள் மட்டும் தான். நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மேலும் குறைந்து 96,000 ஆக குறைந்திருப்பது உயர்கல்வித்துறையின் வீழ்ச்சியை மெய்ப்பிக்கிறது.

அதேநேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனியார் கலை & அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2023&24ஆம் ஆண்டில்  தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளின் முதலாம் ஆண்டில் ஒரு லட்சத்து 94,306 பேர் சேர்ந்திருந்தனர். கடந்த ஆண்டில் அது 2 லட்சத்து 53,528 ஆக அதிகரித்திருக்கிறது. நடப்பாண்டில் தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை 2.60 லட்சத்தைக் கடந்து அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் வெறும் 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தான் இருந்தன. அவற்றில் 2015&16ஆம் ஆண்டில் 76,973 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்ந்தனர். இப்போது அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ள நிலையில், மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்து 66,929 ஆக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், கிட்டத்தட்ட அதில் பாதி அளவுக்குத்தான்  மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர் என்பதிலிருந்தே அரசு கலைக் கல்லூரிகள் சீரழிந்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். உயர்கல்வி நிறுவனங்களின் சீரழிவுக்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

காலியாக இருக்கும் முதல்வர் பணியிடங்கள்

அரசு கலைக்கல்லூரிகளின் சீரழிவுக்கான காரணங்களைக் கண்டறிய ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள 180 அரசு கலைக்கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இரு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாகக் கிடக்கும் முதல்வர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அதேபோல், மொத்தமுள்ள சுமார் 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் சுமார் 9000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு கல்லூரிகளில் பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்களே இல்லாத நிலையில், அரசு கல்லூரிகளில் தங்களின் பிள்ளைகளைச் சேர்க்க எந்த பெற்றோர் முன்வருவார்கள்? என்பதை அரசுதான் விளக்க வேண்டும்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளிக்கல்வியை தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கூட பட்டப்படிப்பை அரசு கல்லூரிகளில் தான் படிக்க விரும்புவார்கள். அதற்குக் காரணம் அரசு கலைக் கல்லூரிகளில் கல்வித்தரம் சிறப்பாக இருக்கும் என்பதும், கல்வி உதவித் தொகையுடன் இலவசக் கல்வி வழங்கப்படும் என்பதும் தான். ஆனால், இப்போது லட்சக்கணக்கில் கல்விக் கட்டணம் செலுத்தினால் கூட பரவாயில்லை என்று, இலவசக் கல்வி வழங்கும் அரசுக் கல்லூரிகளை விடுத்து, தனியார் கலைக் கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் செல்லும் அளவுக்கு அரசு கல்லூரிகள் சீண்டத்தகாதவையாக மாறி உள்ளன. அரசு கல்லூரிகளை இப்படி சீரழித்ததற்காக தமிழக ஆட்சியாளர்கள் தலை குனிய வேண்டும்.

அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் வலிமையாக இல்லாவிட்டால், தமிழககத்தின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் வேகமாகக் குறையும். ஆனால், இதையெல்லாம் உணரும் மனநிலையோ, சீரமைக்கும் திறனோ விளம்பரத்தில் திளைக்கும் திராவிட மாடல் அரசுக்கு இல்லை. தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் திமுக அரசை அகற்றி விட்டு, உயர்கல்வி மீது அக்கறை கொண்ட அரசை அமைக்க வேண்டும்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Nissan Magnite: பட்ஜெட் விலையில் மேக்னட் போல இழுக்கும் Nissan Magnite! தரமும், மைலேஜும் எப்படி?
Nissan Magnite: பட்ஜெட் விலையில் மேக்னட் போல இழுக்கும் Nissan Magnite! தரமும், மைலேஜும் எப்படி?
Embed widget