மேலும் அறிய

'எப்படியாச்சும் படிச்சிடுங்க'- நிஜ சிங்கப் பெண்களின் நெகிழ்ச்சிக் கதை!

வளரிளம் பருவத்தினரை ஊக்கப்படுத்த க்ரை அமைப்பு இன்று நடத்திய ‘பெண் குழந்தைகளுக்காக பெண் குழந்தைகளால்’ நிகழ்ச்சியில் நிஜ சிங்கப் பெண்கள் தங்களின் போராட்டக் கதைகளைப் பகிர்ந்தனர். 

வளரிளம் பருவத்தினரை ஊக்கப்படுத்த க்ரை அமைப்பு இன்று நடத்திய ‘பெண் குழந்தைகளுக்காக பெண் குழந்தைகளால்’ நிகழ்ச்சியில் நிஜ சிங்கப் பெண்கள் தங்களின் போராட்டக் கதைகளைப் பகிர்ந்தனர். 

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, க்ரை என்று அழைக்கப்படும் குழந்தை உரிமைகளும் நீங்களும் (CRY) அமைப்பு சென்னை, எழும்பூரில் ‘பெண் குழந்தைகளுக்காக பெண் குழந்தைகளால்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்த சந்திப்பில் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் ஒன்றுகூடி தங்களின் வாழ்க்கைசார் மன உறுதி, நெகிழ்திறன் மற்றும் வெற்றிக் கதைகளை பகிர்ந்ததன் மூலம் சக பெண் தோழிகள் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டு, தங்களின் கனவுகளை வென்றடைய ஊக்கப்படுத்தினர்.

பள்ளியிலிருந்து இடைவிலகல், குழந்தைத் தொழில் மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு தள்ளப்படுதல் என சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்ட அவர்கள் அனைவரும் ஒரு தளத்தில் ஒன்றிணைந்து, பிறருக்கு நம்பிக்கையளிக்கும் முன்னுதாரணமாய் வெளிப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரம்மதேசம் கிராமத்தில் வசிக்கும் 21 வயது இளம்பெண் எசக்கியம்மாள். 10ஆம் வகுப்பு முடித்தவுடன் வறுமை காரணமாக ஜவுளித் தொழிலில் வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டுத் திருப்பூருக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், CRY-யுடன் இணைந்து செயல்படும் ‘மனித உரிமை களம்’ அமைப்பின் உறுப்பினர்கள், அவரின்  சூழ்நிலையை அறிந்து, அவரது பெற்றோருக்கு ஆலோசனை அளித்து,  அவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்படுவதை உறுதி செய்தனர். 

டிவிஎஸ்-ல் பணி 

அவர்களின் உதவியுடன், டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார். கல்வியை வெற்றிகரமாக முடித்த பிறகு, எசக்கியம்மாள் சென்னையில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் பணி கிடைத்தது. தற்போது அவர் ஊருக்குச் செல்லும் போதெல்லாம், தனது சமூகத்தில் உள்ள மற்ற பெண்களை உயர்கல்வியைத் தொடர ஊக்கப்படுத்துகிறார், வழிகாட்டுகிறார். 
 
“பொதுவாக பெண் குழந்தைகள் 10 அல்லது 12-ஆம் வகுப்பை முடித்த பிறகு ஜவுளித் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். இதனால் பல பெண் குழந்தைகள் குழந்தை திருமணம் செய்துகொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.  இப்போது CRY-யுடன் இணைந்து செயல்படும் ‘மனித உரிமை களம்’ அமைப்பின் வழிகாட்டுதலுடன், அப்பெண்கள் உயர் கல்விக்குச் செல்கிறார்கள், மேலும் பெண் குழந்தைகள் திருமணம் செய்து வைக்கப்படுவதும் தடுக்கப்படுகிறது” என்று எசக்கியம்மாள் கூறினார்.


எப்படியாச்சும் படிச்சிடுங்க'- நிஜ சிங்கப் பெண்களின் நெகிழ்ச்சிக் கதை!

17 வயதில் திருமண ஏற்பாடு

திருநெல்வேலி மாவட்டம் , தேவர்குளம் கிராமத்தில் முத்துலட்சுமி என்ற 20 வயது இளம்பெண் மற்றும் அவரது மூன்று சகோதரிகள் வசித்து வருகின்றனர். முத்துலட்சுமி இரண்டாவதாகப் பிறந்தவர். அவர் 12-ஆம் வகுப்பை முடித்தவுடன், 17 வயதாக இருந்தபோது, தினசரி கூலி வேலை செய்யும் அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

‘மனித உரிமை களம்’ அமைப்பின் தலையீட்டால், அவரது திருமணம் தடுக்கப்பட்டது. அவர்கள், முத்துலட்சுமியின் பெற்றோருக்கு ஆலோசனை அளித்து, முத்துலட்சுமியை கல்லூரியில் சேர்த்தனர். தற்போது மானூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்துலட்சுமி இரண்டாம் ஆண்டு B.Sc கணினி அறிவியல் மாணவியாக வெற்றிகரமாக வலம் வருகின்றார்.

“நான் பள்ளி  பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவியாக விளங்கினாலும், பொருளாதார நெருக்கடி அதிகமாக இருந்தது. எனது பெற்றோர் எங்கள் அனைவருக்கும் உணவளிக்க முடியாத நிலையில் எனக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர். நான் எனது கனவினை கைவிட தயாராக இல்லை. சரியான வழிகாட்டுதலால், இப்போது உயர் கல்வியில் பயில்கின்றேன். என்னைப்போன்று மற்ற பெண்களும் தங்களது கனவினை கைவிடாது முயன்று உயர் கல்வியை தொடர நான் தூண்டுகோலாக அமைவேன்” என்று முத்துலட்சுமி தெரிவித்தார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு.. ஏமாந்த ஆண்கள்!
குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு.. ஏமாந்த ஆண்கள்!
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Parasakthi Twitter Review : இந்த வருஷமும் ஏமாற்றம்தான்...பராசக்தி பார்த்த ரசிகர்கள் புலம்பல்..சோசியல் மீடியா விமர்சனம் இதோ
Parasakthi: பராசக்தியை சீண்ட ஆளில்லை.. முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?
Parasakthi: பராசக்தியை சீண்ட ஆளில்லை.. முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?
Embed widget