மேலும் அறிய

'எப்படியாச்சும் படிச்சிடுங்க'- நிஜ சிங்கப் பெண்களின் நெகிழ்ச்சிக் கதை!

வளரிளம் பருவத்தினரை ஊக்கப்படுத்த க்ரை அமைப்பு இன்று நடத்திய ‘பெண் குழந்தைகளுக்காக பெண் குழந்தைகளால்’ நிகழ்ச்சியில் நிஜ சிங்கப் பெண்கள் தங்களின் போராட்டக் கதைகளைப் பகிர்ந்தனர். 

வளரிளம் பருவத்தினரை ஊக்கப்படுத்த க்ரை அமைப்பு இன்று நடத்திய ‘பெண் குழந்தைகளுக்காக பெண் குழந்தைகளால்’ நிகழ்ச்சியில் நிஜ சிங்கப் பெண்கள் தங்களின் போராட்டக் கதைகளைப் பகிர்ந்தனர். 

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, க்ரை என்று அழைக்கப்படும் குழந்தை உரிமைகளும் நீங்களும் (CRY) அமைப்பு சென்னை, எழும்பூரில் ‘பெண் குழந்தைகளுக்காக பெண் குழந்தைகளால்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்த சந்திப்பில் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் ஒன்றுகூடி தங்களின் வாழ்க்கைசார் மன உறுதி, நெகிழ்திறன் மற்றும் வெற்றிக் கதைகளை பகிர்ந்ததன் மூலம் சக பெண் தோழிகள் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டு, தங்களின் கனவுகளை வென்றடைய ஊக்கப்படுத்தினர்.

பள்ளியிலிருந்து இடைவிலகல், குழந்தைத் தொழில் மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு தள்ளப்படுதல் என சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்ட அவர்கள் அனைவரும் ஒரு தளத்தில் ஒன்றிணைந்து, பிறருக்கு நம்பிக்கையளிக்கும் முன்னுதாரணமாய் வெளிப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரம்மதேசம் கிராமத்தில் வசிக்கும் 21 வயது இளம்பெண் எசக்கியம்மாள். 10ஆம் வகுப்பு முடித்தவுடன் வறுமை காரணமாக ஜவுளித் தொழிலில் வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டுத் திருப்பூருக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், CRY-யுடன் இணைந்து செயல்படும் ‘மனித உரிமை களம்’ அமைப்பின் உறுப்பினர்கள், அவரின்  சூழ்நிலையை அறிந்து, அவரது பெற்றோருக்கு ஆலோசனை அளித்து,  அவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்படுவதை உறுதி செய்தனர். 

டிவிஎஸ்-ல் பணி 

அவர்களின் உதவியுடன், டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார். கல்வியை வெற்றிகரமாக முடித்த பிறகு, எசக்கியம்மாள் சென்னையில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் பணி கிடைத்தது. தற்போது அவர் ஊருக்குச் செல்லும் போதெல்லாம், தனது சமூகத்தில் உள்ள மற்ற பெண்களை உயர்கல்வியைத் தொடர ஊக்கப்படுத்துகிறார், வழிகாட்டுகிறார். 
 
“பொதுவாக பெண் குழந்தைகள் 10 அல்லது 12-ஆம் வகுப்பை முடித்த பிறகு ஜவுளித் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். இதனால் பல பெண் குழந்தைகள் குழந்தை திருமணம் செய்துகொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.  இப்போது CRY-யுடன் இணைந்து செயல்படும் ‘மனித உரிமை களம்’ அமைப்பின் வழிகாட்டுதலுடன், அப்பெண்கள் உயர் கல்விக்குச் செல்கிறார்கள், மேலும் பெண் குழந்தைகள் திருமணம் செய்து வைக்கப்படுவதும் தடுக்கப்படுகிறது” என்று எசக்கியம்மாள் கூறினார்.


எப்படியாச்சும் படிச்சிடுங்க'- நிஜ சிங்கப் பெண்களின் நெகிழ்ச்சிக் கதை!

17 வயதில் திருமண ஏற்பாடு

திருநெல்வேலி மாவட்டம் , தேவர்குளம் கிராமத்தில் முத்துலட்சுமி என்ற 20 வயது இளம்பெண் மற்றும் அவரது மூன்று சகோதரிகள் வசித்து வருகின்றனர். முத்துலட்சுமி இரண்டாவதாகப் பிறந்தவர். அவர் 12-ஆம் வகுப்பை முடித்தவுடன், 17 வயதாக இருந்தபோது, தினசரி கூலி வேலை செய்யும் அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

‘மனித உரிமை களம்’ அமைப்பின் தலையீட்டால், அவரது திருமணம் தடுக்கப்பட்டது. அவர்கள், முத்துலட்சுமியின் பெற்றோருக்கு ஆலோசனை அளித்து, முத்துலட்சுமியை கல்லூரியில் சேர்த்தனர். தற்போது மானூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்துலட்சுமி இரண்டாம் ஆண்டு B.Sc கணினி அறிவியல் மாணவியாக வெற்றிகரமாக வலம் வருகின்றார்.

“நான் பள்ளி  பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவியாக விளங்கினாலும், பொருளாதார நெருக்கடி அதிகமாக இருந்தது. எனது பெற்றோர் எங்கள் அனைவருக்கும் உணவளிக்க முடியாத நிலையில் எனக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர். நான் எனது கனவினை கைவிட தயாராக இல்லை. சரியான வழிகாட்டுதலால், இப்போது உயர் கல்வியில் பயில்கின்றேன். என்னைப்போன்று மற்ற பெண்களும் தங்களது கனவினை கைவிடாது முயன்று உயர் கல்வியை தொடர நான் தூண்டுகோலாக அமைவேன்” என்று முத்துலட்சுமி தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.