மேலும் அறிய

இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!

நாகப்பட்டினம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026 சேர்க்கைக்கான கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விரிவான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சேர்க்கை விபரங்கள் மற்றும் தகுதிகள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (Government ITI), மற்றும் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் 50 சதவீத (50%) அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி நிலையங்களில் 2026-ஆம் கல்வியாண்டிற்கான பல்வேறு தொழிற்பிரிவுகளில் இன்னும் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில், "நேரடி சேர்க்கை" (SPOT ADMISSION) தற்பொழுது தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான மாணவ, மாணவிகள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

முன்னதாக விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் தற்பொழுது 31.07.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மற்றும் தகுதியுடைய மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான அசல் ஆவணங்கள்

இந்த நேரடி சேர்க்கைக்கு (Spot Admission) தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் வரும் பொழுது விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரங்களுடன் பின்வரும் முக்கிய ஆவணங்களை அசல் (Original) மற்றும் நகல்களாக எடுத்து வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

* செயலில் உள்ள கைபேசி எண் (Mobile Number)

* மின்னஞ்சல் முகவரி (E-mail ID)

* ஆதார் அட்டை 

* 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (அசல்)

* மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate - அசல்)

* சாதி சான்றிதழ் (Community Certificate - அசல்)

* பாஸ்போர்ட் அளவு சமீபத்திய புகைப்படம் (Passport Size Photograph)

விண்ணப்பம் மற்றும் சேர்க்கைக் கட்டண விபரம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

ஓராண்டு தொழிற்பிரிவு: விண்ணப்பக் கட்டணம் மற்றும் சேர்க்கைக் கட்டணமாக மொத்தம் ரூ. 235 மட்டும் செலுத்த வேண்டும்.

ஈராண்டு தொழிற்பிரிவு: விண்ணப்பக் கட்டணம் மற்றும் சேர்க்கைக் கட்டணமாக மொத்தம் ரூ. 245 மட்டும் செலுத்த வேண்டும்.

அரசு வழங்கும் அள்ளிக்கொடுக்கும் சலுகைகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Government ITI) சேர்ந்து பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு விலையில்லாப் பொருட்களையும், நிதியுதவிகளையும் வழங்கி வருகிறது. 

* விலையில்லா மிதிவண்டி (சைக்கிள்)

* விலையில்லா சீருடைகள் (Uniforms)

* விலையில்லா பாடநூல்கள் மற்றும் வரைபடக் கருவிகள் (Drawing Instruments)

*விலையில்லா பாதுகாப்பு காலணிகள் (Shoes)

*விலையில்லா பேருந்து பயண அட்டை (Bus Pass)

* மாதாந்திர உதவித்தொகை: பயிற்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ. 750 உதவித்தொகையாக நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

*புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள்:

இவற்றுடன் கூடுதலாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, தற்பொழுது தொழிற்பயிற்சி நிலையங்களில் உயர்கல்வி தொடரும் மாணவ, மாணவிகளுக்குத் தமிழக அரசின் சமூக நலத்திட்டங்களின் கீழ் மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

பெண் மாணவிகளுக்கு: "புதுமைப்பெண்" திட்டத்தின் கீழ் தகுதியான மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 நிதியுதவி வழங்கப்படும்.

ஆண் மாணவர்களுக்கு: "தமிழ்ப்புதல்வன்" திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 நிதியுதவி வழங்கப்படும்.

100% வேலைவாய்ப்பு உறுதி

தொழிற்பயிற்சி நிலையங்களில் வெற்றிகரமாகப் பயிற்சியை முடிக்கும் மாணவ, மாணவிகளுக்குப் படிப்பின் இறுதியாண்டில் வளாக நேர்காணல் (Campus Interview) நடத்தப்படும். இதன் மூலம் முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். மேலும் சில முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சிகளும் (Apprenticeship with Job) மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னுரிமை மற்றும் தொடர்பு எண்கள்

இந்த நேரடி சேர்க்கையானது "ஒவ்வொரு நாளும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" (First Come, First Served) என்ற அடிப்படையில் தகுதியின்படி ஒதுக்கப்படும் என்பதால், காலியிடங்கள் நிரம்பும் முன்னரே தகுதியான மாணவ, மாணவிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகி பயிற்சியில் சேர்ந்து தங்களது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு, நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் உதவி இயக்குநரை 9499055737 மற்றும் 04365-250126 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget