ஐடிஐ சேர்க்கைக்கு கடைசி தேதி நெருங்குகிறது! ஜூன் 3-க்குள் விண்ணப்பிப்பது எப்படி?
"காஞ்சிபுரம் மாவட்ட தொழிற் பயிற்சி நிலையங்கள் மாணவர்கள் சேர்வதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2026-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
உதவி மையம் மற்றும் இலவசப் பதிவு
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விண்ணப்பிக்கும் செயல்முறையை எளிதாகக் கையாளும் வகையில், தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விண்ணப்பங்களை எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகப் பதிவு செய்வதற்கு, ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரத்யேகச் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
காலக்கெடு மற்றும் தொடர்புக்கு
இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதித் தேதிக்குள் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தொழிற்பயிற்சி நிலையச் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 9499937448, 9677778505 அல்லது 9445943451 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்





















