மேலும் அறிய

திறப்பிற்கு தயாராகும் பள்ளிகள்: தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணி முழுவீச்சில் மும்முரம்!

நாளை முதல் முதல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கொரோனா காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் போது, செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார். அதற்கான முன்னேற்பாடு பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அனைத்து பள்ளிகளையும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.



திறப்பிற்கு தயாராகும் பள்ளிகள்: தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணி முழுவீச்சில் மும்முரம்!

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில், தூய்மை பணி தீவிரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 172 உயர்நிலைப்பள்ளிகள், 185 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 357 பள்ளிகளும் வருகிற 1-ந்தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி அனைத்து பள்ளிகளையும் தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பள்ளி வளாகம், வகுப்பறை, அறிவியல் ஆய்வகம், ஆசிரியர், தலைமை ஆசிரியர் அறைகள், கணினி அறை, குடிநீர் தொட்டி, கழிவறை ஆகியவற்றை பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் தூய்மைப்பணியை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாகம், வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் அமர வைக்க வேண்டும், சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்கலாம், மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும், பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கை கழுவுவதற்கு ஏதுவாக சோப்பும், நீரும் இருக்க வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய ஒவ்வொரு வகுப்பறையிலும் சானிடைசரை போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும், இதையெல்லாம் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மோகன் அறிவுறுத்தினார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


திறப்பிற்கு தயாராகும் பள்ளிகள்: தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணி முழுவீச்சில் மும்முரம்!

கொரோனா பரவல் குறைந்ததையடுத்து 1-ந் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 357 பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்பணிகளை கண்காணிக்க தாலுகா அளவில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று தூய்மைப்படுத்தும் பணிகள் முழுமையாக நடக்கிறதா என்று கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அலுவலர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தமுள்ள 8,941 பேரில் இதுவரை 7,869 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 88 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கும் ஓரிரு நாட்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணன், தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget