மேலும் அறிய

Naan Mudhalvan Scheme: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு தொடக்கம்; சிறப்பம்சங்கள் என்ன?

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "போட்டித் தேர்வுப் பிரிவு" என்னும் புதிய பிரிவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார். 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "போட்டித் தேர்வுப் பிரிவு" என்னும் புதிய பிரிவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார். 

முதலமைச்சர்‌ ஸ்டாலினால்‌ துவங்கப்பட்ட மாபெரும்‌ திறன்‌ மேம்பாட்டிற்கான "நான்‌ முதல்வன்‌" திட்டத்தின்‌ கீழ்‌ "போட்டித்‌ தேர்வுப்‌ பிரிவு", இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை, சிறப்புத்‌ திட்டச்‌ செயலாக்கத்‌ துறை, வறுமை ஒழிப்புத்‌ திட்டங்கள்‌ மற்றும்‌ ஊரகக்‌ கடன்கள்‌ அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலினால்‌ சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்‌ இன்று (07.03.2023) காலை 10.00 மணியளவில்‌ தொடங்கப்பட்டு உள்ளது.

என்ன அம்சங்கள்?

"நான்‌ முதல்வன்‌" திட்டத்தின்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவின்‌ கீழ்‌, அரசுத் தேர்வுகளான SSC, Railway, Banking, UPSC, TNPSC, Defence போன்ற பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும்‌ சிறந்த முறையில்‌ பயிற்றுவிக்கும்‌ வகையில்‌ இத்திட்டம்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ இளைஞர்களிடையே துவங்கப்பட்டு உள்ளது. 

இப்போட்டித்‌ தேர்வு பிரிவில்‌ மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள்‌ மற்றும்‌ பயிற்சி வகுப்புகள்‌ இலவசமாக வழங்கப்படும்‌. இதன்‌ மூலம்‌ தமிழ்நாட்டு இளைஞர்கள்‌ போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக முடியும். 

அரசுப்பணி ஒன்றையே கனவாகக்‌ கொண்டுள்ள ஆயிரம்‌ ஆயிரம்‌ இளைஞர்களின்‌ கனவை மெய்ப்படுத்துவதே இத்திட்டத்தின்‌ நோக்கம்‌.மத்திய அரசுப்‌ பணி போட்டித் தேர்வுகளில்‌ தமிழர்களின்‌ பங்கேற்பை கணிசமான அளவில்‌ அதிகரித்து வெற்றி பெறச்‌ செய்வதோடு மட்டுமல்லாமல்‌ கூடிய விரைவில்‌ ஐஐடி, என்‌.ஐ.டி, தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள்‌, அகில இந்திய மருத்துவ நிறுவனம்‌ ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களில்‌ ஆயிரக்கணக்கான தமிழ்‌ இளைஞர்கள்‌ பயிலும்‌ வண்ணம்‌ குமரி முதல்‌ இமயம்‌ வரை நம்‌ அறிவை விரிவு செய்ய இத்திட்டம்‌ விசாலப்‌ பாதை வகுக்கும்‌ என்ற நோக்கத்தையும்‌ கொண்டு "நான்‌ முதல்வன்‌" போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.


நிகழ்ச்சியில்‌ அமைச்சர்‌  உதயநிதி ஸ்டாலின் பேசும்‌ போது கூறியதாவது:-

பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு நவீன பாடப்பிரிவுகளில்‌ பயிற்சிகள்‌ வழங்கி அவர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகள்‌ கிடைக்க வேண்டும்‌ மற்றும்‌ ஆண்டு தோறும்‌ 10 இலட்சம்‌ இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற வேண்டும்‌ என்ற தொலைநோக்குடன்‌ தமிழ்நாடு முதலமைச்சரால்‌ துவங்கப்பட்ட ஓராண்டில்‌ 483 அரசு, அரசு உதவி பெறும்‌, சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகள்‌ மூலம்‌ 4- இலட்சத்து 60 ஆயிரம்‌ மாணவ- மாணவியர்கள்‌ மற்றும்‌ 785- கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளைச்‌ சார்ந்த 8 லட்சத்து 10ஆயிரம்‌ மாணவ மாணவியர்களுக்கு தொழில்‌ சார்ந்த திறன்களில்‌ பயிற்சிகள்‌ அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில்‌ வங்கி, இரயில்வே போன்ற துறைகளுக்கான போட்டித்‌ தேர்வுகள்‌ நடத்தப்பட்டு 1.50 இலட்சம்‌ காலிப்பணியிடங்கள்‌ நிரப்பப்பட்டுள்ளன. இதில்‌ தமிழ்நாட்டைச்சார்ந்தவர்கள்‌ மிகவும்‌ குறைவு என்பது வருத்தமளிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்‌, மாற்றப்பட வேண்டும்.‌ அண்மையில்‌ பிரதமரைச் சந்தித்தபோது தமிழ்நாட்டில்‌ மத்திய அரசுப் பணிகளில்‌ தமிழ்நாடு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தியுள்ளேன்‌.

அண்ணனாக துணை நிற்பேன்

தமிழ்நாட்டில்‌ உள்ள மத்திய அரசு நிறுவனங்களில்‌ அனைத்து நிலைகளிலும்‌ தமிழர்கள்‌ அதிக அளவில்‌ பணியாற்றுகின்ற நிலை வர வேண்டும்‌. சென்னை போன்ற நகரங்களில்‌ மட்டுமே அரசுப் பணிகளுக்கான போட்டித்‌ தேர்வு மையங்கள்‌ உள்ளன. கிராமப்புற மாணவர்களால்‌ கூடுதல்‌ கட்டணம்‌ செலுத்தி இத்தகைய பயிற்சிகளை பெற முடியாது. இந்த நிலையை மாற்றி கட்டணமின்றி போட்டித்‌ தேர்வுக்கான பயிற்சிகளை அளித்திட நம்‌ முதல்வர்‌ அவர்கள்‌ இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்‌.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஏற்கெனவே மாணவர்களுக்கு தெரிவித்தவாறு, எதைப் பற்றியும்‌ கவலைப்பட வேண்டாம்‌, உங்களுக்கு தாயாக , தந்தையாக துணை நிற்பார்‌. உழைத்தால்‌ வெற்றி பெறலாம்‌. நான்‌ என்றும்‌ உங்களின்‌ அண்ணனாக துணை நிற்பேன்‌’’ என்று அமைச்சர் ஸ்டாலின் கூறினார்‌.

இந்த தொடக்க விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர்‌ பொன்முடி அவர்கள்‌ மற்றும்‌ தொழிலாளர்‌ நலன்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ சி.வி. கணேசன்‌, சிறப்புத்‌ திட்ட செயலாக்கத்‌ துறை அரசு முதன்மை செயலர்‌ உதயச்சந்திரன்‌ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
ABP Premium

வீடியோ

”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Embed widget