மேலும் அறிய

பள்ளி ஆசிரியர்கள் சாதி பாகுபாடு காட்டினால் உடனே மாற்றம்; அதிரடி உத்தரவு! சாதி அடையாளத்துக்கும் நோ!

சாதி எண்ணத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும்‌ ஆசிரியர்‌ மீது பெறப்படும்‌ புகார்‌ குறித்து உடனடி விசாரணை மேற்கொண்டு, மேற்படி ஆசிரியர்‌ உடனடியாக அப்பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றப்படல்‌ வேண்டும்‌.

சாதி எண்ணத்துடன் செயல்படும் பள்ளி ஆசிரியர்களை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே சாதி இன உணர்வுகள்‌ காரணமாக உருவாகும்‌ வன்முறைகளைத்‌ தவிர்க்கவும்‌, நல்லிணக்கம்‌ ஏற்படுத்தவும்‌ வழிமுறைகளை வகுக்கவும்‌ சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர்‌ கே.சந்துரு  தலைமையில்‌ ஒரு நபர்‌ குழு அமைத்து அரசால்‌ஆணையிடப்பட்டது. இவ்வரசாணையின்‌ அடிப்படையில்‌ மேற்படி ஒரு நபர்‌ குழுவானது தனது அறிக்கையினை 18.06.2025 அன்று அரசுக்கு சமர்ப்பித்தது.

மேற்படி ஒரு நபர்‌ குழுவால்‌ பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையினை, 18.08.2025 அன்று அரசு தலைமைச்‌ செயலாளர்‌, தலைமையில்‌ நடைபெற்ற கூட்டத்தில்‌ விவாதிக்கப்பட்டு, அதில்‌ தொடர்‌ நடவடிக்கை எடுக்க வேண்டிய பரிந்துரைகளின்‌ மீது உடன்‌ உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில்‌, சாதிய ரீதியான மோதல்களை தவிர்க்கவும்‌மாணவர்களிடையே ஒற்றுமையை பேணவும்‌ எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌:

பள்ளிகளில் சாதி ரீதியான பாகுபாடு

சாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை வெளிப்படுத்தும்‌ அல்லது தீங்கு விளைவிக்கும்‌ வகையில்‌ எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்‌ ஆசிரியர்கள்‌ தொடர்ந்து அப்பள்ளியில்‌ தொடர அனுமதிக்கப்படும்‌ நிலையில்‌, பள்ளிகளின்‌ நம்பகத்தன்மை குறைந்து பள்ளி வளாகத்தில்‌ பதட்டம்‌ அதிகரிக்கும்‌ வாயப்பு உள்ளது. எனவே, சாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும்‌ ஆசிரியர்‌ மீது பெறப்படும்‌ புகார்‌ குறித்து முதன்மைக்‌ கல்வி அலுவலர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, மேற்படி ஆசிரியர்‌ உடனடியாக அப்பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றப்படல்‌ வேண்டும்‌.

சாதிய அடையாளங்களை மந்தனமாக வைத்திருத்தல்‌ (Confidentiality of Caste Identity):

மாணவர்களுக்கு மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறை மூலம்‌ வழங்கக்கூடிய தேவையான கல்வி உதவித்தொகை விஷங்கள்‌ மந்தனமாக பராமரிக்கப்படல்‌ வேண்டும்‌. இதுபோன்ற விவரங்களை சேகரிக்கும்போதோ அல்லது உதவித்‌ தொகைகள்‌ வழங்கப்படும்‌ போதோ, சார்ந்த மாணவர்கள்‌ தனித்தனியாக தலைமை ஆசிரியர்‌ அலுவலகத்திற்கு நேரில்‌ அழைக்கப்பட்டு இவ்விவரங்கள்‌ தெரிவிக்கப்படல்‌ வேண்டும்‌. மேலும்‌, இதுதொடர்பாக பேணப்படும்‌ பதிவேடு உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக பொதுவெளியில்‌ தெரியும்‌ வண்ணம்‌ காட்சிப்படுத்துதல்‌ கூடாது எனவும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

பள்ளிகளில்‌ மாணவர்களுக்கு தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை (Ban on Mobile Phones in Schools)

பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ தொலைபேசி பயன்படுத்துவது முற்றிலும்‌ தடை செய்யப்பட்டு, தற்போது இந்நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும்‌, பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ தொலைபேசி பயன்படுத்துவதை அறியப்படும்‌ நிலையில்‌, அத்தொலைபேசி தலைமை ஆசிரியராலோ/ வகுப்பு ஆசிரியராலோ பறிமுதல்‌ செய்யப்பட்டு, அத்தொலைப்பேசியினை சார்ந்த பெற்றோரிடம்‌ ஒப்படைத்தல்‌வேண்டும்‌. மாணவர்கள்‌ தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பாக தக்க அறிவுரையினை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
Embed widget