மேலும் அறிய

Half Yearly Holidays: தொடங்கிய அரையாண்டு விடுமுறை: சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை- ஜன.2 பள்ளிகள் திறப்பு

அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் (டிச.23) அரையாண்டு விடுமுறை தொடங்கி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் (டிச.23) அரையாண்டு விடுமுறை தொடங்கி உள்ளது. ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

தமிழக பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 11ஆம் தேதிக்குத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 11 முதல் 21ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை இன்று (டிச.23) தொடங்கி உள்ளது. . ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை

தமிழக பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் இயக்குநர் இது குறித்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.


Half Yearly Holidays: தொடங்கிய அரையாண்டு விடுமுறை: சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை- ஜன.2 பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

இதற்கிடையே தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அரையாண்டு விடுமுறையில் எந்த வகுப்புகளும் நடத்தப்படக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மீறி நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கன மழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களால், முழுமையாக அரையாண்டுத் தேர்வுகளை எழுத முடியவில்லை. 6 முதல் 10ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய தேர்வுகளும், 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட தேர்வுகளும் இன்னும் நடைபெறவில்லை.

அவர்களுக்கும் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் ஜனவரி 2 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டதும் எஞ்சிய பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget