மேலும் அறிய

அக்.2-ல் கிராமசபைக் கூட்டம்: தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம், மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்., 2 காந்தி பிறந்த தினம், நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் ஆகிய 6 நாட்களில், கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்தக் கூட்டங்களில், ஊராட்சிகளின் வரவு, செலவுக் கணக்கு சமர்ப்பிக்கப்படும். அரசு நலத் திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். மக்கள் தங்கள் ஊராட்சியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கைகள் வைப்பர். அதன் அடிப்படையில், முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

கிராம சபைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்

இந்த நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பள்ளி சாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்குநர்‌ அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,‌ "புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ 2022-2027” -ஆம்‌ கல்வியாண்டிற்குள்‌ "முழு எழுத்தறிவு பெற்ற நகர/ கிராம பஞ்சாயத்து” என்கிற இலக்கை அடையும்‌ வகையில்‌ வருகின்ற 02.10.2024 (அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்த நாள்‌) அன்று அனைத்து நகர மற்றும்‌ கிராம பஞ்சாயத்துகளிலும்‌ நடைபெற உள்ள கிராமசபைக்‌ கூட்டங்களில்‌ தீர்மானத்தை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உரிய அலுவலர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை அரசுப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்

நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்ட வயது வந்தோர்களுக்கு அடிப்படை எழுத்தறிவைக் கற்றுக்கொடுக்க, மத்திய அரசு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தது. 

2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தில் தன்னார்வலர்களை கொண்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் வயது வந்தோருக்குக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.