மேலும் அறிய

Special Teachers: அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்கள்: தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கு தண்டனையா? பணி ஆணை வழங்காதது ஏன்?- ராமதாஸ் கேள்வி

அரசுப் பள்ளிகளுக்கு சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு  பணி ஆணை வழங்காதது ஏன் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

அரசுப் பள்ளிகளுக்கு சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு  பணி ஆணை வழங்காதது ஏன் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய பாடப்பிரிவுகளுக்கான சிறப்பாசிரியர் பணிக்கு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் பணியமர்த்தல் ஆணை வழங்கப்படவில்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் எந்த காரணமும் இல்லாமல் பணி ஆணை வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய  பாடங்களுக்கு 1,325 சிறப்பாசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 26.07.2017-ஆம் நாள் வெளியிடப்பட்டு, 23.09.2017-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடத்தப் பட்டன. அதனடிப்படையில் தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியர் பணியிடங்கள் கடந்த  2019-ஆம் ஆண்டும், உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்கள் 2020-ஆம் ஆண்டும் நிரப்பப்பட்டன. ஆனால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு மட்டும் 5 ஆண்டுகளுக்கும் மேலாகியும் பணி ஆணை வழங்காமல் தேர்வு வாரியம் தாமதித்து வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இவ்வளவு நீண்ட தாமதத்திற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை.

கைவிடப்பட்ட தெரிவுப் பட்டியல் 

சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்ட போதே, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப் பட்டது. ஆனால், அதை எதிர்த்து சிலர் வழக்கு தொடர்ந்ததையடுத்து தெரிவுப்பட்டியல் கைவிடப்பட்டது. அதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் சரியானவையே. அவற்றை குறை கூற முடியாது.

ஆனால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட்டன. உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்க முடியும். ஆனால், இரு ஆண்டுகள் ஆகியும் தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.

தேர்வுகளை எழுதிவிட்டு, அவற்றின் முடிவுகளுக்காக காத்திருப்பதை விட கொடுமையான அனுபவம் வேறு எதுவும் இல்லை. அதிலும் குறிப்பாக அரசு பணிக்கு விண்ணப்பித்து, தேர்வு எழுதி, தேர்ந்தெடுக்கப் பட்டு, பணி ஆணை கிடைக்குமா, கிடைக்காதா? என்ற ஐயத்துடனும், குழப்பத்துடனும் வாழ்வது பெரும் தண்டனைக்கு இணையானது ஆகும். அத்தகைய தண்டனையைத் தான்  தமிழ்வழியில் படித்த தேர்வர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியிருக்கிறது. இதை நியாயப்படுத்த முடியாது.

தவிக்கும் தேர்வர்கள்

சிறப்பாசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு  ஐந்தாண்டுகள் நிறைவடைந்து விட்டன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன. அதன்படி தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், திடீரென ஒரு நாள் அந்தப் பட்டியல்  திரும்பப் பெறப்பட்டு விட்டது. புதிய பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டால், அதிலும் தங்களின் பெயர்  இருக்கக் கூடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இத்தகைய சூழலில் வேறு போட்டித்தேர்வுகளையும் எழுத மனமில்லாமல், ஐந்தாண்டுகளாக தேர்வர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிலையில்  இருந்து தேர்வர்களுக்கு விடுதலை கொடுக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும்.

தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து விட்டது. இதுதொடர்பான நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. அதனால், தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பாசிரியர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட எந்தத் தடையும் இல்லை. எனவே, தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக  தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அவர்களுக்கான பணியமர்த்தல் ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஊதியத்துடன் இன்டர்ன்ஷிப்; மாதம் ரூ.30,000 உதவித்தொகை- டிஆர்டிஓ அறிவிப்பு- கலந்துகொள்வது எப்படி?
ஊதியத்துடன் இன்டர்ன்ஷிப்; மாதம் ரூ.30,000 உதவித்தொகை- டிஆர்டிஓ அறிவிப்பு- கலந்துகொள்வது எப்படி?
497, 494, 492! - மயிலாடுதுறையில் சாதனைக் கொடி நாட்டிய காவலர் வீட்டுப் பிள்ளைகள். முழு விவரம் உள்ளே! 
497, 494, 492! - மயிலாடுதுறையில் சாதனைக் கொடி நாட்டிய காவலர் வீட்டுப் பிள்ளைகள். முழு விவரம் உள்ளே! 
புத்தகங்கள் நனையாமல் இருக்க மழைநீரோடு போராட்டம்.. 10-ஆம் வகுப்பில் 473 மதிப்பெண் அள்ளிய அபர்ணா!
புத்தகங்கள் நனையாமல் இருக்க மழைநீரோடு போராட்டம்.. 10-ஆம் வகுப்பில் 473 மதிப்பெண் அள்ளிய அபர்ணா!
TN 10th Result 2026: நீரில் மூழ்கி இறந்த மாணவர் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை; எவ்வளவு மார்க் தெரியுமா? - கண்ணீரில் பெற்றோர்
நீரில் மூழ்கி இறந்த மாணவர் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை; எவ்வளவு மார்க் தெரியுமா? - கண்ணீரில் பெற்றோர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Officers Transfer: வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
Trump Vs Iran: “ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
“ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
US Iran War: செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
Honda Activa e Vs TVS iQube: ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? டிவிஎஸ் ஐக்யூப்-ஆ.? விலை, மைலேஜ், அம்சங்களில் எது சிறந்தது.? தெரிஞ்சுக்கோங்க
ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? டிவிஎஸ் ஐக்யூப்-ஆ.? விலை, மைலேஜ், அம்சங்களில் எது சிறந்தது.?
Tata-Jeep Partnership: 'வெளிநாட்டு ஸ்டைல், உள்நாட்டு உணர்வு'; டாடா உடன் கைகோர்த்த ஜீப்; நம்ம ஊரில் தயாராகும் புதிய SUV
'வெளிநாட்டு ஸ்டைல், உள்நாட்டு உணர்வு'; டாடா உடன் கைகோர்த்த ஜீப்; நம்ம ஊரில் தயாராகும் புதிய SUV
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
Embed widget