மேலும் அறிய
தமிழி எழுத்தில் விளையாண்டு அசத்தும் அரசுப் பள்ளி மாணவிகள்.. இப்படியும் பொங்கல் வாழ்த்து சொல்லலாம் !
பெரிய பொங்கல் கோலம் வரைந்து அதன் நடுவில் 'பொங்கல் வாழ்த்து' எனவும், கோலத்தின் கீழே 'இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்து' எனவும் பழமையான தமிழி எழுத்துகளில் எழுதி அசத்தினர்

தமிழி எழுத்துக்களுடன் அரசுப் பள்ளி மாணவிகள்
Source : whats app
வித்தியாசமான முறையில் பொங்கல் கொண்டாடிய மாணவிகளுக்கு பாரட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகையில் தான் தமிழர்களின் பாரம்பரியம் ஒவ்வொன்றாக வெளிவரும். தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர். போகிப் பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்புடன் இந்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது பொதுமக்கள் பொங்கல் பொருட்களை மூன்று நாட்களுக்கு முன்பே வாங்க தொடங்குவர். அதில் கோலமாவு, மண் பானைகள், கரும்பு, மஞ்சள் கொத்துகள், வெல்லம், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கி மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். பெரும்பாலும் நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதும் வழக்கம். இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் நமது பண்டைய தமிழி எழுத்துகள் மூலம் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தது வரவேற்பை பெற்றுள்ளது.
பொங்கல் கோலத்தில் அசத்திய அரசு பள்ளி மாணவிகள்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது தண்ணீரில் கோலம் போட்டும், தமிழி எழுத்துகளில் பொங்கல் வாழ்த்து எழுதியும் மாணவிகள் அசத்தினர். பள்ளியில் நடந்த பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தின் போது மாணவிகள் பொங்கல் தொடர்பான கோலங்களை பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளின் முன்பும் போட்டனர். இதில் ஆறாம் வகுப்பு மாணவிகள் தண்ணீரில் வரைந்த கோலமும், பழமையான தமிழி எழுத்து வாழ்த்தும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
தண்ணீரில் கோலம்
ஒரு பெரிய தாம்பாளத்தில் மணல் பரப்பி அதன் மேல் கோலம் வரைந்து, மெழுகை சிறுசிறு துகள்களாக செதுக்கி அதன்மேல் பரப்பி பின்பு தாம்பாள தட்டை சூடு படுத்தினர். இப்பொழுது மேலே உள்ள மெழுகு உருகி ஒரு படலம் உருவாகியிருக்கும். அதன் மீது தண்ணீரை ஊற்றியபோது கோலம் தண்ணீரில் மிதப்பது போல தோற்றமளித்தது. பள்ளி மாணவ மாணவிகள் இதைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். இடைநிலை ஆசிரியர் தமயந்தியின் மேற்பார்வையில் மாணவிகள் சுபாஶ்ரீ, செல்வபிரீத்தி, தனுஶ்ரீ, விசாலினி ஆகியோர் இக்கோலத்தை செய்து அசத்தினர்.
தமிழியில் கோலம்
பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்ற செயலர் வே.ராஜகுரு ஒவ்வொரு ஆண்டும் 25 மாணவர்களுக்கு தமிழி கல்வெட்டு எழுத்துகள் பயிற்சி கொடுத்து வருகிறார். இக்கல்வியாண்டில் இப்பயிற்சி பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் பெரிய பொங்கல் கோலம் வரைந்து அதன் நடுவில் 'பொங்கல் வாழ்த்து' எனவும், கோலத்தின் கீழே 'இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்து' எனவும் பழமையான தமிழி எழுத்துகளில் எழுதி அசத்தினர். மாணவிகளை தலைமையாசிரியர் மகேந்திரன் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ajith Kumar: துபாய் கார் ரேஸில் வெற்றி - அஜித் - ஷாலினி கொண்டாட்டம் - வைரலாகும் க்யூட் வீடியோ!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு ஜனாதிபதி முர்மு வாழ்த்து!
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion