மேலும் அறிய

Om prakash chautala : 86 வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய முன்னாள் முதலமைச்சர்!

12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் பெறுவதற்காக 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு எழுதினார் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா.

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வந்தது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
ஹரியானா மாநிலத்தின் முதல்வராக நான்கு முறை பதவி வகித்தவர் இந்திய தேசிய லோக் தல் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சௌதாலா. அண்மையில் அவர் அங்கே 10 வகுப்பு ஆங்கிலத் தேர்வு எழுத வந்தது பெரிய அளவிலான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் சிர்ஸாவில் உள்ள ஆர்ய கன்யா சீனியர் பள்ளியில் அவர் தனது தேர்வை எழுதினார். 

மிக அண்மையில்தான் ஹரியானா திறந்தவேளிப் பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்புக்கான தேர்வை எழுதியிருந்தார் ஓம் பிரகாஷ் சௌதாலா. ஆனால் அவர் 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை என்கிற அடிப்படையில் அவரது தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. தனது 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகளைப் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் புதன் அன்று 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை எழுதினார் சௌதாலா. 

தேர்வு மையத்துக்கு வந்த சௌதாலாவை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். ‘நான் தற்போது மாணவராக வந்திருக்கிறேன்.அதனால் எந்தக் கருத்தும் கூறப்போவதில்லை’ என பத்திரிகையாளர்களின் அரசியல் கேள்விகளுக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ சொல்லிச் சென்றார் சௌதாலா. இதன் பிறகு 86 வயதான சௌதாலா தேர்வு அறைக்குச் சென்றார். 

2017ல் தனது பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த சௌதாலா அதில் 53.4 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

தனக்கான எழுத்தர் உதவியையும் கேட்டிருந்தார் சௌதாலா. அதனை ஹரியானா பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக்கொண்டு அவருக்கான எழுத்தர் உதவியையும் செய்துகொடுத்தது.சுமார் இரண்டு மணி நேரம் தேர்வு எழுதிய சௌதாலா பிறகு அங்கிருந்து புறப்பட்டார்.

கடந்த 2017ல் தனது பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த சௌதாலா அதில் 53.4 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தார். உருது, அறிவியல், சமூக அறிவியல் மற்றும் இந்தியக் கலாச்சார பண்பாடு ஆகிய பாடங்களில் சிறப்பான தேர்ச்சியை எட்டியிருந்தார். ஆசிரியர் தேர்வாணையத்தின் பலகோடி ரூபாய் ஊழலில் சிக்கி திகார் சிறை சென்றவர் அங்கிருந்தபடியே பத்தாம் வகுப்புக்கான தேர்வை எழுதினார்.கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே அவர் சிறையில் இருந்து இரண்டு முறை பரோலில் விடுவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில்தான் அவர் சிறையிலிருந்து விடுதலையானார். 


Om prakash chautala :  86 வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய முன்னாள் முதலமைச்சர்!

ஆசிரியர் தேர்வாணைய நியமன ஊழல்

ஹரியானா மாநிலத்தில் 1999-2000ம் ஆண்டில் சௌதாலா முதலமைச்சராக இருந்த  காலக்கட்டத்தில் பள்ளிகளுக்கான  மூன்றாயிரம் ஆசிரியர்கள்  நியமனம் செய்ததில் ஊழல் செய்ததாக ஓம் பிரகாஷ் சௌதாலா மற்றும் அவரது மகன் அஜய் சௌதாலா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணை அந்த மாநிலத்தின் ரோகினி நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி  தந்தை மகன் இருவர் உட்பட 53 குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சுமார் ஏழு ஆண்டுகள் திஹார் சிறையில் இருந்த ஓம் பிரகாஷ் சௌதாலா தண்டனைக் காலம் முடிய சில மாதங்களே இருக்கும் நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Embed widget