மேலும் அறிய

ஒரே நபர் பல கல்லூரிகளில் பணி; முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை- அண்ணா பல்கலை. அதிரடி

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளில் முறைகேடாகப் பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான் என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

முறைகேடு செய்து பல கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணியில் இருக்கும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 50% பொறியியல் கல்லூரிகளில் முழு நேரப் பேராசிரியர்கள் நியமனத்தில் மோசடி நடைபெற்று இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஒரே நேரத்தில் 11 பொறியியல் கல்லூரிகள் வரை ஒரே பேராசிரியர் பணிபுரியும் அதிர்ச்சித் தகவலும், 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் வேலை செய்யும் அவல விவரமும் ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்துத் தகவல் அளித்த அறப்போர் இயக்கம் அமைப்பு, மோசடியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் மீது தமிழக அரசு மற்றும் உயர் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளில் முறைகேடாகப் பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான் என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மீதும், கல்வி நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளில் முறைகேடாகப் பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான். பொறியியல் கல்லூரிகளில் 52,500 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் 50,600 பேர் பணியாற்றுகின்றனர். மீதம் உள்ள 900 இடங்களில் 189 ஆசிரியர்கள் முறைகேடாகப் பணியாற்றுகின்றனர். இவர்கள் பல கல்லூரிகளில் முறைகேடாகப் பதிவு செய்து பணி செய்கின்றனர்.

ஆதார் எண்களில் மாற்றம் செய்து மோசடி

சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் ஆதார் எண்களில் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆதார் எண்களில் மாற்றம் செய்து ஒரே நபர் 32 கல்லூரிகளில் சேர்ந்தது கண்டறியப்பட்டு உள்ளது.

இவ்வாறு முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் விவரங்களை கண்டறிய நேற்றே குழு அமைக்கப்பட்டு விட்டது’’.  

இவ்வாறு துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

குழுவில் ஏஐசிடிஇ சார்பில் ஒரு நபர், அரசு சார்பில் ஒருவர், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒருவர் என 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குழுவின் அறிக்கைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாம்: ஒரே நேரத்தில் 11 பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள்; 353 பேர் பல கல்லூரிகளில் வேலை செய்யும் அவலம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Meendum Manjappai Campaign : மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம்.. வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு..
மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம்.. வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு..
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
Group 2 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு கேள்வித்தாள் எப்படி? கட் ஆஃப் எவ்வளவு தேவை?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு கேள்வித்தாள் எப்படி? கட் ஆஃப் எவ்வளவு தேவை?
Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப்போகும் சுந்தர் சி! வெளியானது அறிவிப்பு! - நடிகை இவர்தான்!
Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப்போகும் சுந்தர் சி! வெளியானது அறிவிப்பு! - நடிகை இவர்தான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?Nitin Gadkari on Congress : ’’எனக்கு பிரதமர் பதவி’’எதிர்க்கட்சி பக்கா ஸ்கெட்ச்! போட்டுடைத்த  கட்காரிMK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meendum Manjappai Campaign : மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம்.. வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு..
மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம்.. வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு..
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
Group 2 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு கேள்வித்தாள் எப்படி? கட் ஆஃப் எவ்வளவு தேவை?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு கேள்வித்தாள் எப்படி? கட் ஆஃப் எவ்வளவு தேவை?
Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப்போகும் சுந்தர் சி! வெளியானது அறிவிப்பு! - நடிகை இவர்தான்!
Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப்போகும் சுந்தர் சி! வெளியானது அறிவிப்பு! - நடிகை இவர்தான்!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
SIIMA Winner List : ஐந்து விருதுகளை தட்டித்தூக்கிய ஜெயிலர்...சைமா விருது வென்றோர் முழுப் பட்டியல் இதோ
SIIMA Winner List : ஐந்து விருதுகளை தட்டித்தூக்கிய ஜெயிலர்...சைமா விருது வென்றோர் முழுப் பட்டியல் இதோ
"கடைசி முறையா கூப்பிடுறேன்" விடாபிடியாக இருக்கும் மருத்துவர்கள்.. மீண்டும் இறங்கி வந்த மம்தா!
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Embed widget