மேலும் அறிய

Exclusive : ‘நீட் விலக்கு அறிக்கை, காமாலை கண்கொண்டவர் தயாரித்ததுபோல் உள்ளது’ ஆளுநர் ஆர்.என்.ரவி. அரசுக்கு அனுப்பிய முழு ரிப்போர்ட்..!

Tamil Nadu NEET Exemption : ‘நீட் தேர்வின் முக்கியத்துவத்தை உணராமல் ‘சமூக நீதிக்கு எதிரானது’ என்ற வாதத்தினை மட்டுமே முன் வைத்து, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என நான் கருதுகிறேன்’

நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், நாளை சிறப்பு சட்டப்பேரவை கூடி மீண்டும் இந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப உள்ளது. இந்நிலையில், ஆளுநர் இந்த மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை விளக்கமாக சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருந்தது. ஆர்.என்.ரவி என்ன காரணங்களை எல்லாம் அடுக்கி இந்த மசோதாவை திருப்பி அனுப்பினார் என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்தது.

Exclusive : ‘நீட் விலக்கு அறிக்கை, காமாலை கண்கொண்டவர் தயாரித்ததுபோல் உள்ளது’ ஆளுநர் ஆர்.என்.ரவி. அரசுக்கு அனுப்பிய முழு ரிப்போர்ட்..!
ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் முழு விவரங்கள் இடம்பெறவில்லையென்பதால், அது குறித்த தெளிவு இல்லாமல் பலரும் அனுமாங்களின் அடிப்படையில் பேசிவந்தனர். அதுமட்டுமில்லாமல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் அனுப்பிய அறிக்கையின் முழு விவரத்தினை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிடவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஆளுநர் ஆ.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்யச்சொல்லி சபாநாயருக்கு அனுப்பிய முழு அறிக்கையின் விவரங்கள் ’ABP நாடு’ செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Exclusive : ‘நீட் விலக்கு அறிக்கை, காமாலை கண்கொண்டவர் தயாரித்ததுபோல் உள்ளது’ ஆளுநர் ஆர்.என்.ரவி. அரசுக்கு அனுப்பிய முழு ரிப்போர்ட்..!
நீதியரசர் ஏ.கே.ராஜன்

அந்த அறிக்கையில், நீட் விலக்கு தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவை ஆளுநர் ஆர்.என்.ரவி  கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட காரணமாக உள்ள ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை ‘காமாலை கண் கொண்டவர்கள் தயாரித்ததுபோல்’ உள்ளது என்று சபாநாயகருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளார் என தகவல் கிடைக்கப்பெற்றிருக்கிறது. ஆனால். ஏ.கே.ராஜன் பெயரை குறிப்பிடாமல் குழு, குழு என்றே தனது கடிதத்தில் சொல்லியுள்ளார் ஆளுநர்.

சமூகத்திலும் நீதித்துறையிலும் மதிப்புமிக்க நீதிபதியாக இருந்து, பல்வேறு குழுக்களில் அங்கம் வகித்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜனையும் அவர் சார்ந்த குழுவையும் ’காமாலை கண்கொண்டவர்கள்’ என அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட ஆளுநர் குறிப்பிட்டு சபாநாயகருக்கு அனுப்பியிருப்பது அவர் ஏ.கே.ராஜனை மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசையும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார் என சட்டமன்ற உறுப்பினர்களும் சமூக நீதிக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும் கொதித்திருக்கிறார்கள்.

அதோடு, இந்த நீட் விலக்கு மசோதாவை நான் ஏன் திரும்ப அனுப்புகிறேன் என்ற காரணத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டியலிட்டுள்ளார்Exclusive : ‘நீட் விலக்கு அறிக்கை, காமாலை கண்கொண்டவர் தயாரித்ததுபோல் உள்ளது’ ஆளுநர் ஆர்.என்.ரவி. அரசுக்கு அனுப்பிய முழு ரிப்போர்ட்..!

  • நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதாரமாக உள்ள ஆய்வு குழுவின் அறிக்கை ஆதாரங்களை அடிப்படையாக கொள்ளாமல் அனுமாங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
  • நீட் இலக்கு இல்லாத ஒரு தேர்வு என பொத்தம்பொதுவாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
  • தகுதியற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் வழிவகை செய்யும் என அறிக்கையில் பொவாக குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்க முடியாது
  • பொருளாதார ரீதியாக செல்வாக்குள்ள மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு உகந்தது என்பதுபோல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
  • நீட் தேர்வின் முக்கியத்துவத்தை உணராமல் ‘சமூக நீதிக்கு எதிரானது’ என்ற வாதத்தினை மட்டுமே முன் வைத்து, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது

இந்த காரணங்கள் எல்லாம் ஏற்கத்தக்கதாக இல்லை என நான் கருதுகிறேன் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளதாகவும்,  இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பாடங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டதாக நீட் தேர்வு உள்ளது என்றும் அனைத்து பாடங்களை கொண்ட அறிவை சோதிக்க நீட் தேர்வு தவறியிருக்கிறது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை தான் மறுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது

Exclusive : ‘நீட் விலக்கு அறிக்கை, காமாலை கண்கொண்டவர் தயாரித்ததுபோல் உள்ளது’ ஆளுநர் ஆர்.என்.ரவி. அரசுக்கு அனுப்பிய முழு ரிப்போர்ட்..!

மருத்துவ படிப்பு என்பதே ’இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் அறிவை கொண்ட விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டதுதான் என்றும், அதனை குற்றச்சாட்டாக கூறுவதை ஏற்க முடியாது எனவும் ஆளுநர் ஆர்.ரவி சபாநாயகருக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடுள்ளார் என்றும்,  அதுமட்டுமின்றி நீட் தேர்வு வந்த பிறகுதான் ஏழை அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என நமக்கு கிடைத்த தகவல்கள் சொல்கின்றன.

முக்கியமாக, இந்த நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும், தனியார் மூலம் பயிற்சி பெறும் வசதி படைத்த மாணவர்களுக்கானதாக இந்த நீட் உள்ளது என்றும் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானது என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அதேபோல், அரசியலமைப்பு சட்டத்துடன் நீட் தேர்வு ஒத்துப்போகிறது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றும், நீட் தேர்வு சமூகநீதிக்கு ஒருபோதும் எதிரானது அல்ல என்பதையும் அழுத்தம் திருத்தமாக ஆளுநர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என கூறப்படுகிறது

Exclusive : ‘நீட் விலக்கு அறிக்கை, காமாலை கண்கொண்டவர் தயாரித்ததுபோல் உள்ளது’ ஆளுநர் ஆர்.என்.ரவி. அரசுக்கு அனுப்பிய முழு ரிப்போர்ட்..!
சபாநாயகர்  அப்பாவு - ஆளுநர் ரவி

மேலும், நீட் தேர்வு என்பது தேச நலனை கருத்தில்கொண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றமே கருத்து சொல்லியிருப்பதையும் தனது அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த நீட் விலக்கு மசோதா மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்றும், இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியிருப்பதால் அரசியலமைப்பு சட்டம் 200ன் படி இதனை மறுபரிசீலனை செய்ய தாம் திரும்ப அனுப்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget