மேலும் அறிய

இன்ப அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்... உற்சாகமான பள்ளி மாணவ, மாணவிகள்

"கல்வி ஒன்று தான் உயர்வுக்கு வழி. எனவே மாணவர்கள் இந்த வயதில் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்" என அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர்: அமைச்சரின் திடீர் ஆய்வு பள்ளி மாணவ, மாணவிகளை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எங்கள் பள்ளிக்கு அமைச்சர் வந்தாரே என்று உற்சாகமாக சொல்ல வைத்து விட்டது.

சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி
 
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக, ராமநாதபுரம் நோக்கிச் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்று கொண்டிருந்தார்.

திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்

அப்போது பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியை பார்த்தவுடன் சட்டென்று தனது வாகனத்தை நிறுத்த அறிவுறுத்திய அமைச்சர்  முன்னறிவிப்பின்றி திடீரென பள்ளிக்குள் சென்று ஆய்வு செய்தார். 


இன்ப அதிர்ச்சி கொடுத்த கல்வித்துறை அமைச்சர்... உற்சாகமான பள்ளி மாணவ, மாணவிகள்

பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல்

அமைச்சரின் திடீர் வருகை பள்ளி ஆசிரியர்களை திக்குமுக்காட செய்தது. ஆனால் அதை பற்றி கண்டுக்கொள்ளாத அமைச்சர் பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். அமைச்சர் மாணவ, மாணவிகளிடம், "கல்வி ஒன்று தான் உயர்வுக்கு வழி. எனவே மாணவர்கள் இந்த வயதில் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும்" என அறிவுறுத்தினார். மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 

234/ 77 திட்டத்தில் திடீர் ஆய்வு நடத்தும் அமைச்சர்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/ 77 என்ற திட்டத்தின் கீழ், தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள், கல்வித்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட எவருக்கும் தகவல் தெரிவிக்காமல் திடீரென சென்று ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சேதுபாவாசத்திரம் பகுதியில் 196 ஆவது ஆய்வை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. பள்ளி ஆசிரியர்களிடம் அவர் பேசியபோது, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக அப்போது உறுதியளித்தார். 

பள்ளிகளில் உள்ள குறை, நிறைகளை கண்டறிதல்

பள்ளிகளில் உள்ள குறைகள் மற்றும் நிறைகளை கண்டறிந்து, 100 நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இருக்கும் பள்ளிகளை சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆய்வு செய்வதற்கான ‘234/77’ என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை தொடங்கி உள்ள என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்த முதல் பெருமையை அன்பில் மகேஷ் விரைவில் தட்டிச் செல்லவுள்ளார். இதற்கு முன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த எந்த அமைச்சரும் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பயணத் திட்டத்தை வகுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளின் அடிப்படை கட்டுமானமும், மாணவர்களின் கற்றலும் மேம்பாடு அடைய வேண்டுமென்றால் களத்தில் இறங்கி அவர்களுடன் உரையாட வேண்டும். களத்தில் செயலாற்ற வேண்டும். அதற்காகவே தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் நோக்கத்தோடு 234/77 ஆய்வுப் பயணத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் படி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது திடீர் ஆய்வு பயணத்தை யாருக்கும் தெரிவிப்பது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த பள்ளிக்கு அமைச்சர் எப்போது வருவார் என்பது தெரியாததால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Unga kanava sollunga: வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
வீடு தேடி வராங்க... உங்க கனவ சொல்லுங்க- தமிழக மக்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் அரசு
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Heavy Rain Alert: தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தை சுற்றி வளைக்கும் ராட்சசன்.! நெருங்கியது புயல்.? அதீத கனமழை எந்த மாவட்டங்களில்.? வெதர்மேன் எச்சரிக்கை
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
Embed widget