மேலும் அறிய

கல்வியில் முன்னேறிக் கொண்டிருக்கும் மாவட்டம் தர்மபுரி - ஆட்சியர் சாந்தி பெருமிதம்

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் உயர்கல்வி பயிலும் 220 மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் 13 கோடியே 83 லட்சம் கல்வி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் உயர்கல்வி பயிலும் 220 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் ரூ.13 கோடியே 83 லட்சம் கல்வி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையில் கல்வி பெற்று முன்னேற்றம் அடைவதற்கும் அவர்கள் குடும்ப பொருளாதார வளர்ச்சி அடைவதற்காகவும் அவசியமாவதால் கல்வி கடனுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. 

தமிழக அரசு மாணவர்களுக்கு கொடுத்த தமிழ் புதல்வன் திட்டம்

பிளஸ் 2  முடிக்கும் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையில் கல்லூரிகளுக்கு கள ஆய்வு அழைத்துச் செல்லுதல் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அரசின் புதுமைப்பெண் திட்டம் மாணவர்களுக்கு தமிழ் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் உதவித்தொகை ₹1000 வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. 

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் அதிகரித்துள்ளது

இதனால் மாணவர்கள் உயர்கல்வி ஆர்வம் அதிகரித்துள்ளது. இன்ஜினியரிங் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிகளில் கல்விக் கடன்கள் வழங்கி வருகிறது. மாணவர்களின் கல்லூரி கனவே நினைவாக்கிட எளிதாக கல்வி கடன் பெறுவதற்காக வித்யா லட்சுமி குறித்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து கல்வி கடன் வழங்கும் முகாம் நேற்று நல்லம்பள்ளி விஜய் வித்யாலயா கல்லூரியில் நடந்தது.

கல்வியில் முன்னேறிக் கொண்டிருக்கும் மாவட்டம் தர்மபுரி - ஆட்சியர் சாந்தி பெருமிதம்

மாவட்ட ஆட்சியர் சாந்தி முகாமை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் உதவி வழங்கி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2023- 2024 ஆம் ஆண்டில்,1009 மாணவர்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலமாக ₹23 கோடி கல்வி கடனாக வழங்கப்பட்டுள்ளது.

2024-2025 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு,1,568 பேருக்கு சுமார் 22.44 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 1.4.2024 முதல் 30.6.2024 வரை 121 பேருக்கு சுமார் ₹6கோடியே 23 லட்சமும் 1.7.2024 முதல் தற்போது வரை 77 பேருக்கு₹5 கோடியே 11 லட்சமும் கல்வி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 

இன்றைய முகாமில், 22 மாணவர்களுக்கு₹2 கோடியே 67 லட்சம் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் 2024-2025 ஆம் நிதியாண்டில் இதுவரை மொத்தம் 220 மாணவர்களுக்கு ₹13 கோடியே 83 லட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே கல்வி கடனின் வட்டி தொகையை மட்டும் செலுத்துவதன் மூலம் கடன் சுமையை குறைக்கலாம் மேலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ் புதன் திட்டங்களில் மூலம்  மாணவர்கள் தங்கள் கல்வி கனவை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமல்லாது எதிர்கால உயர்வான வாழ்வில் காண அடித்தளமாகவும் அமையும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்  பால் பிரின்சி ராஜ் குமார், துணை கலெக்டர்கள் பயிற்சி சவுந்தர்யா, கார்த்திகா மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் பிரசன்னா பாலமுருகன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராம ஜெயம் நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார், விஜய் வித்யாலயா கல்லூரி முதல்வர் பாலசுந்தரம் வங்கியாளர்கள் அரசு அலுவலர்கள் கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget