Madras University: புயலால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள்: புதிய தேதிகளை அறிவித்த சென்னை பல்கலைக்கழகம்
'மிக்ஜாம்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், டிசம்பர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

'மிக்ஜாம்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், டிசம்பர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான மழை பெய்தது. தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், வெள்ளம் சூழ்ந்து நிலைகுலைந்து போயின.
இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழை கோரத் தாண்டவம் ஆடிய நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
டிசம்பர் 11 முதல் செமஸ்டர் தேர்வுகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















