மேலும் அறிய

அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!

சரியாக 2 நிமிடங்களுக்குள் 15 லட்சம் ஊடுருவல் முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்ததால், இணையதளத்தின் வேகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிபிஎஸ்இ போர்ட்டல் தற்காலிகமாக முடங்கியது.

சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நடைபெற்ற மாபெரும் சைபர் தாக்குதல் சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் சரிபார்ப்புப் பணிகளுக்காக திறக்கப்பட்ட புதிய போர்ட்டலில், வெறும் இரண்டு நிமிடங்களில் சுமார் பதினைந்து லட்சம் முறை சைபர் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளது அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முறையில் ஓஎஸ்எம் எனப்படும் டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டதில், குளறுபடிகள் எழுந்துள்ளதாகக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், விடைத்தாள்கள் காணும் பணி, மறு மதிப்பீட்டுப் பணிகள் ஆகியவை இன்று (ஜூன் 2) தொடங்கின.

ஆதார் கட்டாயம்

மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தற்போது ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதற்காக மாணவர்கள் தங்களின் ஆதார் எண் உள்ளிட்ட அதிமுக்கிய விவரங்களை உள்ளீடு செய்து போர்ட்டலில் உள்நுழைய வேண்டும் என சிபிஎஸ்இ ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், போர்ட்டல் திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஹேக்கர்கள் இந்தத் தளத்தை முடக்கும் நோக்கத்தோடு ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான போலி கோரிக்கைகளை அனுப்பி, சர்வரை செயலிழக்கச் செய்யும் ‘டிடாஸ்’ (DoS- denial of service) வகையான இணையத் தாக்குதலை மிகத் தீவிரமாக நடத்தியுள்ளனர்.

2 நிமிடங்களுக்குள் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்

சரியாக 2 நிமிடங்களுக்குள் 15 லட்சம் ஊடுருவல் முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்ததால், இணையதளத்தின் வேகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இணைய போர்ட்டல் தற்காலிகமாக முடங்கியது. ஆதார் தகவல்கள் திருடப்பட்டிருக்குமோ என்று விண்ணப்பித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகினர்.

உடனடியாகச் சுதாரித்த சிபிஎஸ்இ தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் தேசிய தகவலியல் மையத்தின் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்  துரிதமாகச் செயல்பட்டு, இந்தத் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தனர். மேலும், இந்த ஊடுருவல் முயற்சிகள் அனைத்தும் வெளிநாட்டு ஐபி முகவரிகளில் இருந்து திட்டமிட்டு வந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் வலுவாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து டெல்லி சைபர் கிரைம் போலீசாரிடம் முறையான புகாரும் உடனடியாக அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான நிலையில் தரவுகள் 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்இ உயர் அதிகாரிகள், "மாணவர்களின் தரவுகள் அனைத்தும் எங்கள் சர்வரில் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. ஹேக்கர்களால் எவ்விதத் தகவலையும் திருட முடியவில்லை. இணையதளத்தின் பாதுகாப்பு கட்டமைப்புகள் உடனடியாகப் பலப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எவ்வித அச்சமுமின்றி தொடர்ந்து தங்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்" என்று உறுதியளித்துள்ளனர். கல்வி சார்ந்த அரசு இணையதளங்கள் மீது இதுபோன்ற மிகப்பெரிய அளவில் சைபர் தாக்குதல்கள் நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு இன்று தொடக்கம்; ஆதாரை கட்டாயமாக்கிய அரசு!
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு இன்று தொடக்கம்; ஆதாரை கட்டாயமாக்கிய அரசு!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
EV Car Sales Peaks: பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்ந்ததன் விளைவு.! உச்சத்தை தொட்ட மின்சார வாகனங்களின் விற்பனை.!
பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்ந்ததன் விளைவு.! உச்சத்தை தொட்ட மின்சார வாகனங்களின் விற்பனை.!
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Embed widget