மேலும் அறிய

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் சர்ச்சை; சென்னை மையத்தில் நிகழ்ந்த குழப்பத்தால் மாணவர்கள் போராட்டம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் சென்னை மையம் ஒன்றில் தேர்வர்களை 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வை முடிக்கச் சொன்னதால், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் சென்னை மையம் ஒன்றில் தேர்வர்களை 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வை முடிக்கச் சொன்னதால், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள்  இன்று (மே 21) 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் நடைபெற்றன. தேர்வுகள் பெரும்பாலும் எளிதாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 5,529 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கு, மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். பொது ஆங்கிலம் பகுதியில் தேர்வெழுத 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பம் செய்தனர். பொதுத் தமிழ் பகுதியில் தேர்வெழுத, 9 லட்சத்துக்கு 46 ஆயிரத்து 589 பேர் விண்ணப்பித்தனர். இதில் இருந்து 5,500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதன்மைத் தேர்வுக்கு அனுப்பப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் மையத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் அறை கண்காணிப்பாளரின் கைக்கடிகாரம் பழுதானதால், தவறுதலாக 45 நிமிடங்கள் முன்பாகவே தேர்வர்கள் விடைத்தாளை முடிக்கக் கட்டாயப் படுத்தப்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வர்கள் கைக்கடிகாரத்தைக் கட்டிச் செல்ல டிஎன்பிஎஸ்சி அனுமதி அளித்திருந்தது. எனினும் ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்திருந்தது. 

இதுகுறித்து செயின்ட் தாமஸ் மவுண்ட் தேர்வு மையத்தில் எழுதிய தேர்வர் தென்னரசு 'ஏபிபி நாடு'விடம் பேசினார். அவர் கூறும்போது, ''தேர்வு நேரம் காலை 9:30 மணி முதல் 12:45 மணி வரை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எங்கள் அறையில் 20 தேர்வர்கள் தேர்வு எழுதுவதாக இருந்தது. 5 பேர் தேர்வுக்கு வரவில்லை. 15 தேர்வர்கள் தேர்வை எழுதினோம். 


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் சர்ச்சை; சென்னை மையத்தில் நிகழ்ந்த குழப்பத்தால் மாணவர்கள் போராட்டம்

தேர்வு மையத்துக்குள் கடிகாரத்தைக் கட்டிச் செல்ல எல்லோருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எங்கள் அறைக்கு மட்டும்  அறை கண்காணிப்பாளர் அனுமதி அளிக்கவில்லை. விதிகளை மீறி அனைவரின் கடிகாரங்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்.

அறை கண்காணிப்பாளரின் கைக்கடிகாரம் பழுதாகி இருந்ததா என்று தெரியவில்லை. தவறான அறிவுறுத்தலை எங்களுக்கு வழங்கிவிட்டார். மணி கேட்டதற்கு அவர் தவறான நேரத்தைக் கூறிவிட்டார். கொள்குறி வகைத் தேர்வு என்பதால், எவ்வளவு நேரம் ஆனது என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. இதனால், 12.30-க்கு முடிக்க வேண்டிய தேர்வை 11.45 மணிக்கே முடிக்க வைத்தார். 45 நிமிடங்கள் முன்கூட்டியே முடிக்க வேண்டி இருந்தது. இதனால் குழப்பத்தில் அவசரம் அவசரமாக, கடைசி 100 கேள்விகளுக்குத் தவறாக விடை அளித்தோம். 

வெளியே வந்த பிறகுதான் நேரம் தெரிந்தது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகம் இருக்கும் இடமான பிராட்வே பகுதிக்குச் சென்று 15 பேரும் முறையிட்டோம். அவர்கள் எங்கள் அனைவரின் தொடர்பு எண்களையும் வாங்கிவைத்துக் கொண்டனர். ஆணையத்திடம் பேசிவிட்டு, விரைவில் தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்தனர்'' என்று தென்னரசு கூறினார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Part Time Teachers: திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்; தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
Part Time Teachers: திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்; தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி! பாலக்காட்டில் ஒருவர் உயிரிழப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி! பாலக்காட்டில் ஒருவர் உயிரிழப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
TNEA 2025: தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு; படிப்பு தேர்வு, கல்லூரி சேர்க்கை.. முக்கிய விவரம்!
TNEA 2025: தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு; படிப்பு தேர்வு, கல்லூரி சேர்க்கை.. முக்கிய விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Part Time Teachers: திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்; தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
Part Time Teachers: திடீரென போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்; தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி! பாலக்காட்டில் ஒருவர் உயிரிழப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பீதி! பாலக்காட்டில் ஒருவர் உயிரிழப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
Saroja Devi Death: பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்
TNEA 2025: தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு; படிப்பு தேர்வு, கல்லூரி சேர்க்கை.. முக்கிய விவரம்!
TNEA 2025: தொடங்கிய பொறியியல் கலந்தாய்வு; படிப்பு தேர்வு, கல்லூரி சேர்க்கை.. முக்கிய விவரம்!
கிளாம்பாக்கம் தலைவலிக்கு முற்றுப்புள்ளி! ரூ.100 கோடியில் ஆகாய நடைபாதை! தேதி குறித்த அதிகாரிகள்!
கிளாம்பாக்கம் தலைவலிக்கு முற்றுப்புள்ளி! ரூ.100 கோடியில் ஆகாய நடைபாதை! தேதி குறித்த அதிகாரிகள்!
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
IND vs ENG 3rd Test: 135 ரன்கள்தான் வேணும்.. மிரட்டும் இங்கிலாந்து பவுலிங்! லார்ட்ஸில் வெற்றி பெறுமா இந்தியா?
Trump on Putin: “நல்லா தான் பேசுறாரு, ஆனா சாய்ந்தரம் எல்லார் மேலயும் குண்டு போட்டுட்றாரு“ - ட்ரம்ப் கூறியது யாரை.?
“நல்லா தான் பேசுறாரு, ஆனா சாய்ந்தரம் எல்லார் மேலயும் குண்டு போட்டுட்றாரு“ - ட்ரம்ப் கூறியது யாரை.?
‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’  பரபரப்பு Press Meet!
‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’ பரபரப்பு Press Meet!
Embed widget