மேலும் அறிய

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் சர்ச்சை; சென்னை மையத்தில் நிகழ்ந்த குழப்பத்தால் மாணவர்கள் போராட்டம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் சென்னை மையம் ஒன்றில் தேர்வர்களை 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வை முடிக்கச் சொன்னதால், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் சென்னை மையம் ஒன்றில் தேர்வர்களை 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வை முடிக்கச் சொன்னதால், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள்  இன்று (மே 21) 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் நடைபெற்றன. தேர்வுகள் பெரும்பாலும் எளிதாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 5,529 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கு, மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். பொது ஆங்கிலம் பகுதியில் தேர்வெழுத 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பம் செய்தனர். பொதுத் தமிழ் பகுதியில் தேர்வெழுத, 9 லட்சத்துக்கு 46 ஆயிரத்து 589 பேர் விண்ணப்பித்தனர். இதில் இருந்து 5,500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதன்மைத் தேர்வுக்கு அனுப்பப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் மையத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் அறை கண்காணிப்பாளரின் கைக்கடிகாரம் பழுதானதால், தவறுதலாக 45 நிமிடங்கள் முன்பாகவே தேர்வர்கள் விடைத்தாளை முடிக்கக் கட்டாயப் படுத்தப்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வர்கள் கைக்கடிகாரத்தைக் கட்டிச் செல்ல டிஎன்பிஎஸ்சி அனுமதி அளித்திருந்தது. எனினும் ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்திருந்தது. 

இதுகுறித்து செயின்ட் தாமஸ் மவுண்ட் தேர்வு மையத்தில் எழுதிய தேர்வர் தென்னரசு 'ஏபிபி நாடு'விடம் பேசினார். அவர் கூறும்போது, ''தேர்வு நேரம் காலை 9:30 மணி முதல் 12:45 மணி வரை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எங்கள் அறையில் 20 தேர்வர்கள் தேர்வு எழுதுவதாக இருந்தது. 5 பேர் தேர்வுக்கு வரவில்லை. 15 தேர்வர்கள் தேர்வை எழுதினோம். 


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் சர்ச்சை; சென்னை மையத்தில் நிகழ்ந்த குழப்பத்தால் மாணவர்கள் போராட்டம்

தேர்வு மையத்துக்குள் கடிகாரத்தைக் கட்டிச் செல்ல எல்லோருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எங்கள் அறைக்கு மட்டும்  அறை கண்காணிப்பாளர் அனுமதி அளிக்கவில்லை. விதிகளை மீறி அனைவரின் கடிகாரங்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்.

அறை கண்காணிப்பாளரின் கைக்கடிகாரம் பழுதாகி இருந்ததா என்று தெரியவில்லை. தவறான அறிவுறுத்தலை எங்களுக்கு வழங்கிவிட்டார். மணி கேட்டதற்கு அவர் தவறான நேரத்தைக் கூறிவிட்டார். கொள்குறி வகைத் தேர்வு என்பதால், எவ்வளவு நேரம் ஆனது என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. இதனால், 12.30-க்கு முடிக்க வேண்டிய தேர்வை 11.45 மணிக்கே முடிக்க வைத்தார். 45 நிமிடங்கள் முன்கூட்டியே முடிக்க வேண்டி இருந்தது. இதனால் குழப்பத்தில் அவசரம் அவசரமாக, கடைசி 100 கேள்விகளுக்குத் தவறாக விடை அளித்தோம். 

வெளியே வந்த பிறகுதான் நேரம் தெரிந்தது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகம் இருக்கும் இடமான பிராட்வே பகுதிக்குச் சென்று 15 பேரும் முறையிட்டோம். அவர்கள் எங்கள் அனைவரின் தொடர்பு எண்களையும் வாங்கிவைத்துக் கொண்டனர். ஆணையத்திடம் பேசிவிட்டு, விரைவில் தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்தனர்'' என்று தென்னரசு கூறினார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget