மேலும் அறிய

CM Breakfast Scheme: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே... இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #ThankYouCMSir 

’தமிழ்நாட்டு வகுப்பறைகளில் இனி பசியுடன் எந்தக் குழந்தையும் இருக்காது’, ’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே...!’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. 

அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் இன்று (ஆக.25) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விரிவு படுத்தப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முதல்வர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தால், சுமார் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்திற்காக நன்றி தெரிவிக்கும் வகையிலான ட்வீட்டுகள், இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

முன்னதாக, தமிழ்நாட்டில்‌ உள்ள 38 மாவட்டங்களில்‌ இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 417 மாநகராட்சி பள்ளிகளில்‌ 43,681 மாணவர்கள்‌, 163 நகராட்சி பள்ளிகளில்‌ 17,427 மாணவர்கள்‌, 728 வட்டாரம்‌ மற்றும்‌ கிராம ஊராட்சி பள்ளிகளில்‌ 42,826 மாணவர்கள்‌, 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில்‌ 10,161 மாணவர்கள்‌, என மொத்தம்‌ 1545 பள்ளிகளில்‌ தொடங்கப்பட்டது. இதன்மூல, 114,095 மாணவர்கள்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டத்தில்‌ பயன்பெற்று வருகின்றனர்‌.

CM Breakfast Scheme: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே... இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #ThankYouCMSir 

மேலும்‌, 28.02.2023 முதல்‌ இத்திட்டம்‌ மேலும்‌ நீட்டிக்கப்பட்டு முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்ட செயலியின்‌ படி 1,005 நகர்ப்புற மையங்களில்‌ 112,883 குழந்தைகளும்‌, 963 கிராமப்புற மையங்களில்‌ 41,225 குழந்தைகளும்‌ பயனடைந்து வருகின்றனர்‌.

திட்டத்தின் நோக்கம் என்ன?

* மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கூடம் வர வேண்டும், 
* ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படக்கூடாது, 
* ரத்த சோகை என்ற குறைபாட்டை நீக்க வேண்டும், 
* மாணவர்களின் வருகைப்ப திவு அதிகரிக்க வேண்டும், 
* வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் ஆகியவை காலை உணவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும். 

CM Breakfast Scheme: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே... இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #ThankYouCMSir 

திட்டம்‌ செயல்படும்‌ முறை

பெருநகர சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள்‌ மற்றும்‌ நகராட்சிகளில்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌ ஒருங்கிணைந்த சமையற்கூடங்கள்‌ மூலம்‌ பள்ளி சத்துணவு மையங்களை இணைத்து செயல்படுத்தப்பட்‌டு வருகிறது. கிராம ஊராட்சி மற்றும்‌ மலைப்‌ பகுதி மையங்களில்‌ இத்திட்டம்‌ சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி / சுய உதவிக்‌ குழு மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 1,319 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில் 31,008 பள்ளிகளில்‌ பயிலும்‌ 17 லட்சம்‌ மாணவர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ரூ.404.41 கோடி செலவில்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளியில்‌, 1 முதல்‌ 5ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரே இன்று உணவு பரிமாறினார். தொடர்ந்து அவர்களுடன்‌ கலந்துரையாடியவாறே உணவருந்தினார்‌. 


CM Breakfast Scheme: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே... இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #ThankYouCMSir 

இதற்கிடையே இத்திட்டத்திற்காக நன்றி தெரிவிக்கும் வகையிலான #ThankYouCMSir என்ற ஹேஷ்டேகைக் கொண்ட ட்வீட்டுகள், இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

’தமிழ்நாட்டு வகுப்பறைகளில் இனி பசியுடன் எந்தக் குழந்தையும் இருக்காது’, ’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே...!’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
Embed widget