மேலும் அறிய

சென்னை கல்லூரிகளில் கணிதத்தை தேர்வு செய்யும் மாணவர்கள் குறைவு: கல்வியாளர்கள் கவலை..

சென்னையில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மற்ற பாடப்பிரிவுகள் எல்லாம் வேகமாக நிரம்பிவரும் சூழலில் கணிதப் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் குறைகிறார்கள்

சென்னையில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மற்ற பாடப்பிரிவுகள் எல்லாம் வேகமாக நிரம்பிவரும் சூழலில் கணிதப் பாடப் பிரிவை எடுக்கும் மாணவர்கள் குறைந்துவருகிறார்கள். முன்னணி கல்லூரிகள் பலவும் பிஎஸ்சி கணிதப் பாடத்தில் மாணவர்கள் சேர காத்திருக்கின்றன. 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலைமை முற்றிலுமாக வேறாக இருந்தது. லயோலா கல்லூரியில் கணிதப் பாடப்பிரிவுக்கு மட்டுமே அதிக டிமாண்ட் இருந்த காரணத்தால் 2வது ஷிஃப்ட் ஒன்றும் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு லயோலா கல்லூரியில் கணிதப் பாடப்பிரிவில் வெறும் 70 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இரண்டாவது ஷிஃப்ட் மொத்தமாக காலியாக இருக்கிறது. அதேபோல் வேதியியல், இயற்பியல் பாடப் பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருக்கின்றன.

அண்மைக்காலமாக மாணவர்கள் கணினி சார் கல்வி மற்றும் வணிகவியல் சார்ந்த படிப்புகளிலும் அதிக ஆர்வம் காட்டுவதாலேயே இவ்வாறாக கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது எனக் கல்லூரி முதல்வர் தாமஸ் அமிர்தம் கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்தமாகவே கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 10 முதல் 15 சதவீதம் குறைவு. கணிதப் பாடப் பிரிவில் மாணவர்களை நிரப்ப இதுவரை இப்படியொரு சிக்கலை சந்தித்ததே இல்லை எனக் கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. இந்த மாற்றம் குறித்து ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் ஏ.சுதாகர் கூறுகையில், இந்த ஆண்டு நிகழும் பாடப்பிரிவு தேர்விலான மாற்றத்தை 12-ஆம் வகுப்பில் அறிவிக்கப்பட்ட 100 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே வெற்றி பெற்றுள்ள நிலையில் பெரும்பாலானோர் தொழில்முறைப் பாடப்பிரிவுகளில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர். இல்லாவிட்டால் கணினி அறிவியல் அவர்களின் தேர்வாக இருக்கிறது என்றார்.


சென்னை கல்லூரிகளில் கணிதத்தை தேர்வு செய்யும் மாணவர்கள் குறைவு: கல்வியாளர்கள் கவலை..

சென்னை குருநானக் கல்லூரி முதல்வர் எம்.ஜி.ரகுநாதன் இது குறித்து கூறும்போது, ”இது நிச்சயமாக அசாதாரண சூழல். எல்லா பாடப் பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில் கணிதப் பாடத்தில் மட்டுமே ஏன் மாணவர்கள் சேர விரும்பவில்லை எனத் தெரியவில்லை. எங்கள் கல்லூரிகளில் கணிதப் பாடத்தில் உள்ள 50 இடங்களில் 10 இடங்களில் இன்னும் மாணவர்கள் சேரவில்லை.

ஆனால், சென்னை எம்ஓபி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணனோ நிலைமை தற்காலிகமானது எனக் கூறுகிறார். இப்போது நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் பலரும் தேர்வு முடிவு வெளியான பின்னர், கணிதப் பாடத்தைத் தேடி வருவார்கள் எனக் கூறுகிறார். எம்ஓபி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரியில் இளங்கலை கணிதப் பாடப்பிரிவில் மொத்தமுள்ள 70 இடங்களில் 15 இடங்கள் காலியாக இருக்கிறது. அவை அனைத்துமே நீட் தேர்வு முடிவான பின்னர் நிரம்பிவிடும் என்றார்.

அக்டோபர் 6 ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. நீட் தேர்வில் நல்ல ரேங்க் கிடைக்காதவர்களும், பொறியல் கல்லூரியில் இடம் கிடைக்காதவர்களும் கணிதப் பாடத்தைத் தேர்வு செய்வார்கள் என்றார். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், கணிதப் பாடத்துக்கான ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைவது கவலையளிக்கிறது. செயற்கை நுண்ணறிவுக்கு தேவையான அல்காரிதம்களை கணித அறிவு இல்லாமல் எப்படி மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள்” என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழ் கஷ்டம்னு சொல்றவங்களுக்கு இதோ சான்று; 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் படைத்த அசாத்திய சாதனை; மார்க் எவ்வளவு தெரியுமா?
தமிழ் கஷ்டம்னு சொல்றவங்களுக்கு இதோ சான்று; 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் படைத்த அசாத்திய சாதனை; மார்க் எவ்வளவு தெரியுமா?
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
வசதிகள் இல்லைனா என்ன.. வெறித்தனம் இருந்தா போதும்! 10வது தேர்வில் மிரட்டிய கூலித்தொழிலாளி மகள்; தளபதியின் வழியில் கல்விக்கு உதவிய தவெகவினர்..!
வசதிகள் இல்லைனா என்ன.. வெறித்தனம் இருந்தா போதும்! 10வது தேர்வில் மிரட்டிய கூலித்தொழிலாளி மகள்; தளபதியின் வழியில் கல்விக்கு உதவிய தவெகவினர்..!
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் செல்லும் பள்ளி வாகனம் பாதுகாப்பானது தானா? மயிலாடுதுறை கலெக்டரின் அதிரடி 'ஆன் தி ஸ்பாட்' செக்கப்!
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் செல்லும் பள்ளி வாகனம் பாதுகாப்பானது தானா? மயிலாடுதுறை கலெக்டரின் அதிரடி 'ஆன் தி ஸ்பாட்' செக்கப்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget