மேலும் அறிய

Central Government Scholarship: கல்லூரி முடிக்கும்வரை மத்திய அரசு உதவித்தொகை; யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம்?- முழு விவரம்

Central Sector Scholarship Scheme: மத்திய அரசு உயர் கல்வி படிக்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கி வருகிறது. யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். 

CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIPS FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS

மத்திய அரசு உயர் கல்வி படிக்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கி வருகிறது. யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். 

நாடு முழுவதும் சிறப்பாகப் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித் தொகை  (CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIPS FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS) வழங்கப்படுகிறது. மத்திய உயர் கல்வி அமைச்சகம் இந்த உதவித்தொகையை வழங்குகிறது. 

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கல்வித் தகுதி (மெரிட்)  அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

என்ன தகுதி?

* வழக்கமான கல்லூரி படிப்பைப் படிப்பவராக இருக்க வேண்டும். அஞ்சல் வழிக் கற்றலுக்கோ, திறந்தநிலைப் படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கோ உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. 

* ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கக் கூடாது. 

* டிப்ளமோ மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடையாது. 

* வேறு எந்த உதவித் தொகையையும் பெறும் மாணவராக இருக்கக் கூடாது. 

* உதவித்தொகை இரு பாலருக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும். அதாவது 50 சதவீத உதவித்தொகை மாணவர்களுக்கும் 50 சதவீத உதவித்தொகை மாணவிகளுக்கும் வழங்கப்படும். 

* அதிகபட்சமாக 82 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மானுடவியல், அறிவியல் மற்றும் வணிகப் படிப்புகளுக்கு 3:3:1 என்ற விகிதத்தில் அரசு உதவித்தொகையை வழங்கி வருகிறது. 

* ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும் வழங்கப்பட உள்ளது. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 5% கிடைமட்ட இட ஒதுக்கீடு உண்டு. 

எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது?

கல்லூரி படிப்புகளில் முதல் 3 ஆண்டுகளுக்கு ஆண்டுக்குத் தலா ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். முதுகலைப் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 4 மற்றும் 5ஆம் ஆண்டுகளில் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்

மாணவர்கள் ஆண்டுதோறும் இந்த உதவித்தொகையைப் பெற புதுப்பிக்க வேண்டும். அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு தொகை செலுத்தப்படும். 

இந்த நிலையில் இந்த உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.

மாணவர்கள் முதலில் மத்திய அரசின் உதவித்தொகைக்கான தளத்தில், (National Scholarship Portal) முன்பதிவு செய்ய வேண்டும். 


Central Government Scholarship: கல்லூரி முடிக்கும்வரை மத்திய அரசு உதவித்தொகை; யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம்?- முழு விவரம்

பொதுவாக என்னென்ன ஆவணங்கள் அவசியம்?

* மாணவரின் ஆதார் எண்
*  மாணவர்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு
*  வங்கிக் கணக்கு எண் விவரங்கள் (சொந்த வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, பெற்றோர்/ பாதுகாவலர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள்).
*  தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ்.
*  இ- மெயில் முகவரி
* மொபைல் எண்

ஆகியவற்றை உள்ளிட்டு, “Central Sector Scheme of Scholarship for College and University Students” என்ற பக்கத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு உயர் கல்வி உதவித் தொகை பற்றிய விதிமுறைகளை https://scholarships.gov.in/public/schemeGuidelines/Guidelines_DOHE_CSSS.pdf என்ற இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.

உதவித் தொகை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/FAQ_DOHE_CSSS.pdf

மேலும் விவரங்களை அறிய: https://scholarships.gov.in/

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்... தேர்வு மையத்தில் ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்...
10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்... தேர்வு மையத்தில் ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
MBBS BDS Seats: ஹேப்பி நியூஸ்! MBBS, BDS சீட் எண்ணிக்கை உயர்வு: அரசு அதிரடி அறிவிப்பு- யாருக்கெல்லாம்?
MBBS BDS Seats: ஹேப்பி நியூஸ்! MBBS, BDS சீட் எண்ணிக்கை உயர்வு: அரசு அதிரடி அறிவிப்பு- யாருக்கெல்லாம்?
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Toyota Fortuner Finance Plan: விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
Embed widget