மேலும் அறிய

Central Government Scholarship: கல்லூரி முடிக்கும்வரை மத்திய அரசு உதவித்தொகை; யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம்?- முழு விவரம்

Central Sector Scholarship Scheme: மத்திய அரசு உயர் கல்வி படிக்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கி வருகிறது. யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். 

CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIPS FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS

மத்திய அரசு உயர் கல்வி படிக்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கி வருகிறது. யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். 

நாடு முழுவதும் சிறப்பாகப் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித் தொகை  (CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIPS FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS) வழங்கப்படுகிறது. மத்திய உயர் கல்வி அமைச்சகம் இந்த உதவித்தொகையை வழங்குகிறது. 

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கல்வித் தகுதி (மெரிட்)  அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

என்ன தகுதி?

* வழக்கமான கல்லூரி படிப்பைப் படிப்பவராக இருக்க வேண்டும். அஞ்சல் வழிக் கற்றலுக்கோ, திறந்தநிலைப் படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கோ உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. 

* ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கக் கூடாது. 

* டிப்ளமோ மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடையாது. 

* வேறு எந்த உதவித் தொகையையும் பெறும் மாணவராக இருக்கக் கூடாது. 

* உதவித்தொகை இரு பாலருக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும். அதாவது 50 சதவீத உதவித்தொகை மாணவர்களுக்கும் 50 சதவீத உதவித்தொகை மாணவிகளுக்கும் வழங்கப்படும். 

* அதிகபட்சமாக 82 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மானுடவியல், அறிவியல் மற்றும் வணிகப் படிப்புகளுக்கு 3:3:1 என்ற விகிதத்தில் அரசு உதவித்தொகையை வழங்கி வருகிறது. 

* ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும் வழங்கப்பட உள்ளது. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 5% கிடைமட்ட இட ஒதுக்கீடு உண்டு. 

எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது?

கல்லூரி படிப்புகளில் முதல் 3 ஆண்டுகளுக்கு ஆண்டுக்குத் தலா ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். முதுகலைப் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 4 மற்றும் 5ஆம் ஆண்டுகளில் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்

மாணவர்கள் ஆண்டுதோறும் இந்த உதவித்தொகையைப் பெற புதுப்பிக்க வேண்டும். அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு தொகை செலுத்தப்படும். 

இந்த நிலையில் இந்த உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.

மாணவர்கள் முதலில் மத்திய அரசின் உதவித்தொகைக்கான தளத்தில், (National Scholarship Portal) முன்பதிவு செய்ய வேண்டும். 


Central Government Scholarship: கல்லூரி முடிக்கும்வரை மத்திய அரசு உதவித்தொகை; யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம்?- முழு விவரம்

பொதுவாக என்னென்ன ஆவணங்கள் அவசியம்?

* மாணவரின் ஆதார் எண்
*  மாணவர்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு
*  வங்கிக் கணக்கு எண் விவரங்கள் (சொந்த வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, பெற்றோர்/ பாதுகாவலர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள்).
*  தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ்.
*  இ- மெயில் முகவரி
* மொபைல் எண்

ஆகியவற்றை உள்ளிட்டு, “Central Sector Scheme of Scholarship for College and University Students” என்ற பக்கத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு உயர் கல்வி உதவித் தொகை பற்றிய விதிமுறைகளை https://scholarships.gov.in/public/schemeGuidelines/Guidelines_DOHE_CSSS.pdf என்ற இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.

உதவித் தொகை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/FAQ_DOHE_CSSS.pdf

மேலும் விவரங்களை அறிய: https://scholarships.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.