மேலும் அறிய

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் - சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பு..!

நடப்பு கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 30:30:40 என்ற அடிப்படையில் அந்த மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. நிர்வாக இயக்குனர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “அடுத்த ஆணடுக்கான சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இவ்வாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் தேர்வுகளின் முதற் கட்டமும், அடுத்தாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வுகளின் இரண்டாம் கட்டமும் நடைபெறும். 

இதற்காக நடப்பு கல்வியாண்டின் பாடத்திட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். அத்துடன் கடந்த கல்வியாண்டைப்போல நடப்பு கல்வியாண்டிலும் பாடத்திட்டம் குறைக்கப்படும். அதுதொடர்பாக, இம்மாதம் அறிவிக்கை வெளியிடப்படும்.


10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் - சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பு..!

மதிப்பெண்கள் நியாயமான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக சி.பி.எஸ்.இ. அறிவிக்க உள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கையின்படி அகமதிப்பீட்டு மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வுகள் மற்றும் பிராஜெக்டுகளை நம்பகமானதாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிங் ஆலோசனைகளையும் பள்ளிகள் பெறும்” என அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக இயங்காத காரணத்தாலும், மாணவர்களுக்கு தேர்வுகள் முறையாக நடத்தப்படாத காரணத்தாலும் தேர்வுகளை இரண்டு கட்டங்களாக நடத்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் - சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பு..!

முன்னதாக, கொரோனா தொற்று காரணமாக சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நேற்றுதான் கடைசி நாள் என்பதால் நேற்று மதிப்பெண் பட்டியல் தொடர்புடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மதிப்பெண்கள் 30:30:40 என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஊரடங்கிற்கு முன்பாக நடத்தப்பட்ட செய்முறைத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அப்படியே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த மாத இறுதிக்குள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல்கள் வௌியாகி இருந்தது. இந்த நிலையில், வரும் 12-ந் தேதி சி.பி.எஸ்.இ. 12 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும், இதனால் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் தயார் செய்ய கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

PM YASASVI கல்வி உதவித்தொகை: ரூ.1.25 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு!
PM YASASVI கல்வி உதவித்தொகை: ரூ.1.25 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசு - விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசு - விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!
மாணவர்களுக்கு மெகா வாய்ப்பு! செமிகண்டக்டர் துறையில் புதிய வாய்ப்புகள்! சென்னை CIT வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மாணவர்களுக்கு மெகா வாய்ப்பு! செமிகண்டக்டர் துறையில் புதிய வாய்ப்புகள்! CIT வெளியிட்ட அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
Minister Nirmalkumar: ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
September Holidays : செப்டம்பரில் கொத்தாக வரும் 13 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி - வெளியான அறிவிப்பு
செப்டம்பரில் கொத்தாக வரும் 13 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி - வெளியான அறிவிப்பு
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? தவெக MLA-விற்கு எதிராக சீறிய நயினார்
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? தவெக MLA-விற்கு எதிராக சீறிய நயினார்
Upcoming Budget Cars: அடுத்தடுத்து 4 புது கார்கள்..! ரூ.6 லட்சம் தான் பட்ஜெட்டே, உங்களுக்கான சாய்ஸ் எது? வசதி, அம்சங்கள்
அடுத்தடுத்து 4 புது கார்கள்..! ரூ.6 லட்சம் தான் பட்ஜெட்டே, உங்களுக்கான சாய்ஸ் எது? வசதி, அம்சங்கள்
Sugar Cut: ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?
ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?
Embed widget