மேலும் அறிய

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் - சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பு..!

நடப்பு கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 30:30:40 என்ற அடிப்படையில் அந்த மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. நிர்வாக இயக்குனர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “அடுத்த ஆணடுக்கான சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இவ்வாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் தேர்வுகளின் முதற் கட்டமும், அடுத்தாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வுகளின் இரண்டாம் கட்டமும் நடைபெறும். 

இதற்காக நடப்பு கல்வியாண்டின் பாடத்திட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். அத்துடன் கடந்த கல்வியாண்டைப்போல நடப்பு கல்வியாண்டிலும் பாடத்திட்டம் குறைக்கப்படும். அதுதொடர்பாக, இம்மாதம் அறிவிக்கை வெளியிடப்படும்.


10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் - சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பு..!

மதிப்பெண்கள் நியாயமான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக சி.பி.எஸ்.இ. அறிவிக்க உள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கையின்படி அகமதிப்பீட்டு மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வுகள் மற்றும் பிராஜெக்டுகளை நம்பகமானதாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிங் ஆலோசனைகளையும் பள்ளிகள் பெறும்” என அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக இயங்காத காரணத்தாலும், மாணவர்களுக்கு தேர்வுகள் முறையாக நடத்தப்படாத காரணத்தாலும் தேர்வுகளை இரண்டு கட்டங்களாக நடத்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் - சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பு..!

முன்னதாக, கொரோனா தொற்று காரணமாக சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நேற்றுதான் கடைசி நாள் என்பதால் நேற்று மதிப்பெண் பட்டியல் தொடர்புடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மதிப்பெண்கள் 30:30:40 என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஊரடங்கிற்கு முன்பாக நடத்தப்பட்ட செய்முறைத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அப்படியே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த மாத இறுதிக்குள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல்கள் வௌியாகி இருந்தது. இந்த நிலையில், வரும் 12-ந் தேதி சி.பி.எஸ்.இ. 12 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும், இதனால் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் தயார் செய்ய கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget