மேலும் அறிய

All pass | குறுக்கே வந்த ஒமிக்ரான்... இந்த முறையும் ஆல்பாஸ்..!? என்ன திட்டமிடுகிறது பள்ளிக் கல்வித்துறை?

இரண்டு மாதங்களே பள்ளிகள் இயங்கிய நிலையில், கொரோனா காரணமாக நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றித் தேர்ச்சி வழங்கப்பட்டது.  

தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020- 21ஆம் கல்வி ஆண்டு வழக்கமாகத் தொடங்கும் 2021  ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனினும் கொரோனா விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. இதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

கொரோனா 2-வது அலை

கொரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பிப்.8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கின. எனினும் கொரோனா 2-வது அலை திடீரெனத் தாக்கியது. இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டன. 

2020-21ஆம் கல்வியாண்டில் 1 முதல் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றித் தேர்ச்சி தேர்ச்சி வழங்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டுத் தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு, இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் 2021-22ஆம் கல்வியாண்டு ஜூன் மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதம் தொடங்கியது. செப்.1 முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நேரடி வகுப்புகளில் சுழற்சி முறையில் இயங்கி வந்தன. கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்த நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வந்தன.

வேகமெடுக்கும் ஒமிக்ரான் தொற்று

தற்போது ஒமிக்ரான் தொற்று வேகமெடுத்து வருவதால், 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு மாதங்களே பள்ளிகள் இயங்கிய நிலையில், கொரோனா காரணமாக நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தொற்று பாதிப்பைப் பொறுத்து மேலும் நீட்டிக்கப்படலாம். இதனால் இந்த ஆண்டும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதே நேரத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
சிலம்பம் முதல் டிஜிட்டல் இதழியல் வரை: நுழைவுத் தேர்வு இல்லாமல் மத்திய பல்கலைக்கழகத்தில் பயில அரிய வாய்ப்பு..!
சிலம்பம் முதல் டிஜிட்டல் இதழியல் வரை: நுழைவுத் தேர்வு இல்லாமல் மத்திய பல்கலைக்கழகத்தில் பயில அரிய வாய்ப்பு..!
ஏழை குழந்தைகளை ராஜாக்களாக்கிய முன்னாள் மாணவி; உதவி செய்வதிலும் இப்படியொரு மாண்பா? - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி
ஏழை குழந்தைகளை ராஜாக்களாக்கிய முன்னாள் மாணவி; உதவி செய்வதிலும் இப்படியொரு மாண்பா? - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
Lance Naik Meenatchi Sundaram : ’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர் – யார் இந்த மீனாட்சி சுந்தரம்..?
’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர்..!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 123 கிலோமீட்டர் மைலேஜ்! ட்ராஃபிக்கிலும் டயர்ட் இல்லாமல் போக BGauss C12 இ ஸ்கூட்டர்!
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 123 கிலோமீட்டர் மைலேஜ்! ட்ராஃபிக்கிலும் டயர்ட் இல்லாமல் போக BGauss C12 இ ஸ்கூட்டர்!
Embed widget