மேலும் அறிய

All pass | குறுக்கே வந்த ஒமிக்ரான்... இந்த முறையும் ஆல்பாஸ்..!? என்ன திட்டமிடுகிறது பள்ளிக் கல்வித்துறை?

இரண்டு மாதங்களே பள்ளிகள் இயங்கிய நிலையில், கொரோனா காரணமாக நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றித் தேர்ச்சி வழங்கப்பட்டது.  

தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020- 21ஆம் கல்வி ஆண்டு வழக்கமாகத் தொடங்கும் 2021  ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனினும் கொரோனா விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. இதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

கொரோனா 2-வது அலை

கொரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பிப்.8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கின. எனினும் கொரோனா 2-வது அலை திடீரெனத் தாக்கியது. இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டன. 

2020-21ஆம் கல்வியாண்டில் 1 முதல் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றித் தேர்ச்சி தேர்ச்சி வழங்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டுத் தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு, இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் 2021-22ஆம் கல்வியாண்டு ஜூன் மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதம் தொடங்கியது. செப்.1 முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நேரடி வகுப்புகளில் சுழற்சி முறையில் இயங்கி வந்தன. கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்த நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வந்தன.

வேகமெடுக்கும் ஒமிக்ரான் தொற்று

தற்போது ஒமிக்ரான் தொற்று வேகமெடுத்து வருவதால், 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு மாதங்களே பள்ளிகள் இயங்கிய நிலையில், கொரோனா காரணமாக நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தொற்று பாதிப்பைப் பொறுத்து மேலும் நீட்டிக்கப்படலாம். இதனால் இந்த ஆண்டும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதே நேரத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

anna university case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
anna university case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Harry Potter: 90ஸ் கிட்ஸ்களா - புதிய ஹாரிபாட்டர் ரெடி, இனி இந்த புள்ள தான் ஹெர்மாய்னி - ரிலீஸ் எப்போ?
Harry Potter: 90ஸ் கிட்ஸ்களா - புதிய ஹாரிபாட்டர் ரெடி, இனி இந்த புள்ள தான் ஹெர்மாய்னி - ரிலீஸ் எப்போ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
anna university case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
anna university case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Harry Potter: 90ஸ் கிட்ஸ்களா - புதிய ஹாரிபாட்டர் ரெடி, இனி இந்த புள்ள தான் ஹெர்மாய்னி - ரிலீஸ் எப்போ?
Harry Potter: 90ஸ் கிட்ஸ்களா - புதிய ஹாரிபாட்டர் ரெடி, இனி இந்த புள்ள தான் ஹெர்மாய்னி - ரிலீஸ் எப்போ?
அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை..கிடைத்தது அனுமதி.. காஞ்சிபுரம் மக்கள் ஹேப்பி
அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை..கிடைத்தது அனுமதி.. காஞ்சிபுரம் மக்கள் ஹேப்பி
Australian Model's Record: 6 மணி நேரம், 583 ஆண்கள்; ஆஸ்திரேலிய மாடல் அழகி படைத்த ‘அந்த‘ சாதனை - பின்னர் நடந்த விபரீதம்.!!
6 மணி நேரம், 583 ஆண்கள்; ஆஸ்திரேலிய மாடல் அழகி படைத்த ‘அந்த‘ சாதனை - பின்னர் நடந்த விபரீதம்.!!
Trump Offers Canada: இதுக்கு ஒத்துக்கிட்டா அது Free; குசும்புக்கார ட்ரம்ப் கனடாவிற்கு கொடுத்திருக்கும் Offer என்ன தெரியுமா.?
இதுக்கு ஒத்துக்கிட்டா அது Free; குசும்புக்கார ட்ரம்ப் கனடாவிற்கு கொடுத்திருக்கும் Offer என்ன தெரியுமா.?
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
Embed widget