மேலும் அறிய

TN 12th Exam: அதிர்ச்சி.. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,674 மாணவர்கள் ஆப்சென்ட்; காரணம், தீர்வுகள் என்ன?

கொரோனா கால கட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தின் நீட்சியாக இன்றும்  ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கு வர விருப்பமின்றி இருக்கின்றனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று (மார்ச் 14) தொடங்கிய நிலையில் தேர்வு எழுத 8.51 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். எனினும் மொழிப்பாடத் தேர்வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் கல்வித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   
 
இதற்காக காரணங்கள் குறித்தும் தீர்வுகள் பற்றியும் அரசுப்பள்ளி ஆசிரியரும் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான உமா மகேஸ்வரி ABP Naduவிடம் விரிவாகப் பேசினார். 

''6ஆம் வகுப்பில் இருந்தே இந்த பிரச்சனை தொடங்குகிறது. முன்பெல்லாம் நேரடியாக வருகைப் பதிவேட்டை நிர்வகிக்கும் வரை, 2, 3 மாதங்கள் பார்ப்பார்கள். மாணவர்கள் வரவில்லையெனில் பெயரை எடுத்துவிடுவார்கள். ஆனால் இப்போது எமிஸ் செயலியில் அவ்வாறு செய்வதில்லை. பள்ளிக்கு ஒரு நாள் வந்தால்கூட பெயர் இருக்க வேண்டும் என்கிறார்கள். 


TN 12th Exam: அதிர்ச்சி.. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,674 மாணவர்கள் ஆப்சென்ட்; காரணம், தீர்வுகள் என்ன?

இடை நிற்றல் ஏன்?

கொரோனா கால கட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தின் நீட்சியாக இன்றும்  ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கு வர விருப்பமின்றி இருக்கின்றனர். அத்துடன் மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணங்கள், மாணவர்கள் வேலைக்குச் செல்வது உள்ளிட்ட காரணங்களாலும் இடை நிற்றல் ஏற்படுகிறது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைக் கையாள்வதில், அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதில் மிகப்பெரிய அளவில் சவால்களை எதிர்கொள்கின்றனர். பெற்றோர்களை ஏமாற்றி, பள்ளிக்கு வருவதுபோல் வந்துவிட்டு வெளியே போய் போதை, குடிப் பழக்கங்களுக்கு ஆளாவது, மாணவர்கள்- மாணவிகள் சேர்ந்து சுற்றுவது ஆகியவற்றையும் காண முடிகிறது. வேலைக்குச் சென்று கையில் காசு பார்த்துவிட்டு, பள்ளியைத் தவிர்ப்பதும் உண்டு.

பள்ளிக்கே வராமல் பொதுத் தேர்வுகளுக்கு மட்டும் வந்துசெல்லும் குழந்தைகளும் உண்டு. இந்த சூழலில் ஆன்லைனை மட்டுமே நம்பாமல் நேரடியாக பள்ளிக்குச் சென்று பார்த்தால்தான் கள எதார்த்தம் புரியும். இதைச் செய்யாமல் எல்லாமே சரியாக இருக்கிறது என்று அரசு சொல்வதுதான் பிரச்சினை. 

இப்படிப்பட்ட சூழலில் எத்தனை குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை என்று யாராவது கேட்டால், கல்வித்துறை எமிஸ் கணக்கைக் காட்டும். ஒரு குழந்தைகூட பள்ளிக்கு வராமல் இல்லை என உறுதியாகச் சொல்லும். நாங்கள் இல்லத்திற்குச் சென்று கல்வி தருவோம் என்று சூளுரைப்பார்கள். கள எதார்த்தத்தைப் பேசி தீர்வை நோக்கி நகர இங்கு எவருக்கும்  நேரமில்லை.

என்னதான் தீர்வு?

முதலில் வகுப்பறைகளில் உரையாடல் சாத்தியப்பட வேண்டும். ஆசிரியர்கள் அதிகாரத்தை விடுத்து, அன்பைக் காட்ட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்ற முக்கோண உறவு இடைவெளி இல்லாமல் இருக்க வேண்டும். பெற்றோர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை அரசு புகட்ட வேண்டும். 

அதேபோல ஆசிரியர்கள் மாணவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்களைக் கற்பித்தல் வேலையை மட்டும் செய்யவிட வேண்டும். பிற எழுத்து, நிர்வாகப் பணிகளுக்குத் தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும். மேல்மட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் உத்தரவுகளை மட்டுமே பிறப்பிக்காமல், அடிமட்டத்தில் உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து, தீர்வு காண முயல வேண்டும்'' என்று  அரசுப் பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

மாணவர்களே நாட்டின் எதிர்காலம் என்பதை உணர்ந்து அரசும் கல்வித்துறையும் செயல்பட வேண்டும். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pakistan Economy Affect: எங்க கிட்டயா ஆட்டம் காட்டுற.? ஆபரேஷன் சிந்தூரால் சிதறும் பாகிஸ்தானின் பொருளாதாரம்...
எங்க கிட்டயா ஆட்டம் காட்டுற.? ஆபரேஷன் சிந்தூரால் சிதறும் பாகிஸ்தானின் பொருளாதாரம்...
Sophia Qureshi: இந்திய ராணுவத்தின் சிங்கப்பெண்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
இந்திய ராணுவத்தின் சிங்கப்பெண்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
Jemimah Rodrigues: ரோலக்ஸாக மாறிய ரோட்ரிக்ஸ்! லேடீசே ராணுவ படை! 337 ரன்களை விளாசிய இந்தியா
Jemimah Rodrigues: ரோலக்ஸாக மாறிய ரோட்ரிக்ஸ்! லேடீசே ராணுவ படை! 337 ரன்களை விளாசிய இந்தியா
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசு! – சாதித்தது என்ன?
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசு! – சாதித்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION SINDOOR என்றால் என்ன?ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டது?ஆபரேசன் சிந்தூர் பின்னணி?Operation Sindoor Indian Army: ”ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா அதிரடி தாக்குதல்! மிரண்டு போன பாகிஸ்தான்Kovil Festival Fight | தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகள்! திருவிழாவில் வெடித்த மோதல்! நடந்தது என்ன?Prakash Raj slams TVK Vijay | ”விஜய்க்கு அரசியல் புரியல பவன் கூட கம்பேர் பண்ணாதீங்க” அட்டாக் செய்த பிரகாஷ்ராஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pakistan Economy Affect: எங்க கிட்டயா ஆட்டம் காட்டுற.? ஆபரேஷன் சிந்தூரால் சிதறும் பாகிஸ்தானின் பொருளாதாரம்...
எங்க கிட்டயா ஆட்டம் காட்டுற.? ஆபரேஷன் சிந்தூரால் சிதறும் பாகிஸ்தானின் பொருளாதாரம்...
Sophia Qureshi: இந்திய ராணுவத்தின் சிங்கப்பெண்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
இந்திய ராணுவத்தின் சிங்கப்பெண்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
Jemimah Rodrigues: ரோலக்ஸாக மாறிய ரோட்ரிக்ஸ்! லேடீசே ராணுவ படை! 337 ரன்களை விளாசிய இந்தியா
Jemimah Rodrigues: ரோலக்ஸாக மாறிய ரோட்ரிக்ஸ்! லேடீசே ராணுவ படை! 337 ரன்களை விளாசிய இந்தியா
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசு! – சாதித்தது என்ன?
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசு! – சாதித்தது என்ன?
’’ஆபரேஷன் சிந்தூர் பெயரைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது; இன்னும் அழுகிறேன்’’ பஹல்காமில் பலியானோரின் மனைவிகள் உருக்கம்!
’’ஆபரேஷன் சிந்தூர் பெயரைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது; இன்னும் அழுகிறேன்’’ பஹல்காமில் பலியானோரின் மனைவிகள் உருக்கம்!
Operation Sindoor: பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர்! இந்தியா தாக்கிய 9 இடங்கள் எது? எது?
Operation Sindoor: பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர்! இந்தியா தாக்கிய 9 இடங்கள் எது? எது?
Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
Operation Sindoor: “பயங்கரவாதிகளின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது“ வெளியுறவுத்துறை பகிரங்க தாக்கு...
“பயங்கரவாதிகளின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது“ வெளியுறவுத்துறை பகிரங்க தாக்கு...
Embed widget