மேலும் அறிய

தமிழகம் முழுவதும் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் சீர்காழியில் கைது - சிக்கியது எப்படி..?

தமிழகம் முழுவதும் ஏராளமான இருசக்க வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த இளைஞரை சீர்காழி காவல்துறையினர் கைது செய்து, விலை உயர்ந்த 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை, பாண்டிச்சேரி, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞரை சீர்காழி காவல்துறை கைது செய்து, அந்த இளைஞனிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.  மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி உள்ளிட்ட பல பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாக தொடர் புகார்கள் காவல்துறையினருக்கு வந்த வண்ணம் இருந்தது. இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா இருசக்கர வாகனங்களை களவாடும் திருடர்களை உடனடியாக பிடிப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.


தமிழகம் முழுவதும் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் சீர்காழியில் கைது - சிக்கியது எப்படி..?

அவரின் உத்தரவின் பேரில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் மேற்பார்வையில், சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன், உதவி ஆய்வாளர் சிதம்பரம், அசோக்குமார், ராஜேஷ்குமார் மற்றும் காவல்துறை சீர்காழி புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மற்றும் சிறுவன் ஒருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 


தமிழகம் முழுவதும் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் சீர்காழியில் கைது - சிக்கியது எப்படி..?

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின்னான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை சீர்காழி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  விசாரணையில் சீர்காழி பிடாரி கீழ வீதி பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் 22 வயதான மகன் கோகுலகிருஷ்ணன் என்பதும், இந்த இளைஞர் சீர்காழி, சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், போன்ற பகுதிகளில் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி, தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.மேலும் அவருடன் வந்த இளம் சிறார் ஒருவர் திருட்டுக்கு துணை போனதும் தெரியவந்தது.  இதனை அடுத்து திருடி மறைத்து வைத்திருந்த விலை உயர்ந்த 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த சீர்காழி காவல்துறையினர் கோகுல கிருஷ்ணன் மற்றும் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். 


தமிழகம் முழுவதும் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் சீர்காழியில் கைது - சிக்கியது எப்படி..?

இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் பகுதியில் மர்ம நபர்களால் தொடர்ந்து டூவீலர்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கே.டி.எம். பைக்கை திருடுவதை கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் சீர்காழியில் கைது - சிக்கியது எப்படி..?

அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை அருகே உள்ள சோழசக்கர நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த  அஷ்ரப் அலி என்பவரின் 24 வயதான மகன் ரஷீத் அலி என்பதும், அவர் தற்போது ஓசூர் பகுதியில் வசித்து வருவதும், கொள்ளிடம் பகுதியில் டூ வீலர்களை திருடி ஓசூர் பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து ரஷீத் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Embed widget