மேலும் அறிய

சென்னை: அறையில் சடலமாக இளம்பெண்! உடன் தங்கியிருந்த இளைஞர் கூறிய பொய்க்கதை! நடந்த சம்பவம் வேறு!

சந்தோஷூக்கும், மஞ்சுளாவுக்கு சென்னையில் வெவ்வேறு இடங்களில் பணி கிடைத்துள்ளது. இருவரும் சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.

சென்னையில் ஒருதலைக் காதலால் இளம்பெண் கழுத்தை நெறித்து இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(21). இவர் சென்னை போலீஸ் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடன் தங்கியிருந்த மஞ்சுளா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மின்விசிறியில் தொங்கிய நிலையில் இருந்த அவரை நான் கீழே இறக்கி விட்டு பயத்தில் வீட்டை விட்டு வெளியேறி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்து விட்டேன் என கூறியுள்ளார். உடனடியாக இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து மஞ்சுளாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மஞ்சுளா மரணம் தொடர்பாக சந்தோஷிடம் விசாரணை நடத்த முடிவு செய்த நிலையில், தாமாகவே வந்து அவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. 


சென்னை: அறையில் சடலமாக இளம்பெண்! உடன் தங்கியிருந்த இளைஞர் கூறிய பொய்க்கதை! நடந்த சம்பவம் வேறு!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள சோளக்காடு வெள்ளக்கோவிலைச் சேர்ந்த 23 வயதான மஞ்சுளா பாலிடெக்னிக் வரை படித்து விட்டு அறந்தாங்கியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியுள்ள சின்ன அண்ணாநகர் எல்லன்புரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமாரும் பணியாற்றியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் நட்பாக இருந்துள்ளனர். இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சந்தோஷூக்கும், மஞ்சுளாவுக்கு சென்னையில் வெவ்வேறு இடங்களில் பணி கிடைத்துள்ளது. 

அவர்கள் இருவரும் சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷூக்கு மஞ்சுளா மீது ஒருதலையாக காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் மஞ்சுளாவோ தன்னுடன் பாலிடெக்னிக்கில் படித்து தற்போது பெங்களூருவில் வேலை பார்த்து வரும் அய்யப்பன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால் சந்தோஷ் ஆத்திரமடைந்துள்ளார். 

இதன் காரணமாக சந்தோஷ் - மஞ்சுளா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று , மதுபோதையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ்குமார் மஞ்சுளா போனில் பேசுவதை பார்த்து கோபமடைந்துள்ளார். இதனையடுத்து அவரின் கழுத்தை சந்தோஷ் துப்பாட்டாவால் நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின் தற்கொலை நாடகத்தை நிகழ்த்தி தப்பித்து விடலாம் என நினைத்த சந்தோஷ் போலீஸ் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என பயந்து உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். ஒருதலைக் காதலால் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget