மேலும் அறிய

சென்னை: அறையில் சடலமாக இளம்பெண்! உடன் தங்கியிருந்த இளைஞர் கூறிய பொய்க்கதை! நடந்த சம்பவம் வேறு!

சந்தோஷூக்கும், மஞ்சுளாவுக்கு சென்னையில் வெவ்வேறு இடங்களில் பணி கிடைத்துள்ளது. இருவரும் சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.

சென்னையில் ஒருதலைக் காதலால் இளம்பெண் கழுத்தை நெறித்து இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(21). இவர் சென்னை போலீஸ் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடன் தங்கியிருந்த மஞ்சுளா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மின்விசிறியில் தொங்கிய நிலையில் இருந்த அவரை நான் கீழே இறக்கி விட்டு பயத்தில் வீட்டை விட்டு வெளியேறி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்து விட்டேன் என கூறியுள்ளார். உடனடியாக இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து மஞ்சுளாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மஞ்சுளா மரணம் தொடர்பாக சந்தோஷிடம் விசாரணை நடத்த முடிவு செய்த நிலையில், தாமாகவே வந்து அவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. 


சென்னை: அறையில் சடலமாக இளம்பெண்! உடன் தங்கியிருந்த இளைஞர் கூறிய பொய்க்கதை! நடந்த சம்பவம் வேறு!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள சோளக்காடு வெள்ளக்கோவிலைச் சேர்ந்த 23 வயதான மஞ்சுளா பாலிடெக்னிக் வரை படித்து விட்டு அறந்தாங்கியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியுள்ள சின்ன அண்ணாநகர் எல்லன்புரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமாரும் பணியாற்றியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் நட்பாக இருந்துள்ளனர். இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சந்தோஷூக்கும், மஞ்சுளாவுக்கு சென்னையில் வெவ்வேறு இடங்களில் பணி கிடைத்துள்ளது. 

அவர்கள் இருவரும் சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷூக்கு மஞ்சுளா மீது ஒருதலையாக காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் மஞ்சுளாவோ தன்னுடன் பாலிடெக்னிக்கில் படித்து தற்போது பெங்களூருவில் வேலை பார்த்து வரும் அய்யப்பன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால் சந்தோஷ் ஆத்திரமடைந்துள்ளார். 

இதன் காரணமாக சந்தோஷ் - மஞ்சுளா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று , மதுபோதையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ்குமார் மஞ்சுளா போனில் பேசுவதை பார்த்து கோபமடைந்துள்ளார். இதனையடுத்து அவரின் கழுத்தை சந்தோஷ் துப்பாட்டாவால் நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின் தற்கொலை நாடகத்தை நிகழ்த்தி தப்பித்து விடலாம் என நினைத்த சந்தோஷ் போலீஸ் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என பயந்து உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். ஒருதலைக் காதலால் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Embed widget