மேலும் அறிய

காதலியாய் மாறிய தோழி... பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி..

 வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி பூங்காவில்  இளம் காதல் ஜோடி விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி பூங்கா  கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு தமிழக அரசு நிபந்தனைகள் கூடிய தளர்வுகள் அளிக்கப்படது, அதன் அடிப்படையில்  வந்தவாசியில் உள்ள பூங்கா திறக்கப்ட்டது, இதில்  ஏராளமான பொது மக்கள் காலையிலும், மாலையிலும் உடற் பயிற்சி, மற்றும் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். 

பூங்காவில் காலை 5 மணிமுதல் 8.30 மணிவரையிலும் மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரையில் திறக்கப்பட்டு இருக்கும், பூங்காவிற்கு  வழக்கம் போல் மாலை நேரத்தில் உடற் பயிற்சியில் ஈடுப்பட்டு இருந்த  பொதுமக்கள் பூங்காவில் ஒரு பகுதியில் மரத்தடியில் ஒரு இளம்பெண்ணும், வாலிபர் ஒருவரும் வாயில் நுரைத்தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர், இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், 


காதலியாய் மாறிய தோழி... பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி..

இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல்நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், இறந்து கிடந்தவர்களின் உடல்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்தவர்களின் அருகில் விஷப்பாட்டில், செல்போன் மற்றும் ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டு ஆகியவை கிடந்துள்ளது . செல்போன்கள் மூலம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர்கள் காதல் ஜோடி என்பது தெரியவந்தது.

அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகள் அக்சயா (19) என்றும் அதே கிராமத்தின் அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் பரத் (20 ) என்றும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் பால் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வீட்டில் இருந்து ஒன்றாக  சென்று கொண்டிருந்தனர் அப்போது இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்துள்ளது.  அதுவே சில நாட்களில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 


காதலியாய் மாறிய தோழி... பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி..

ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் குறித்து இருவரின் வீட்டில் தெரியவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள், காதலர்கள் சந்திக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி, வந்தவாசி பகுதியில் உள்ள நகராட்சி பூங்காவில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி தனிமையில் சந்தித்துள்ளது. அங்கு மருந்தை குடித்த இருவரும், தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  பல்வேறு கோணங்களில்  விசாரணை செய்து வருகின்றனர். பெற்றோர் எதிர்ப்பால் இளம் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

40 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; லிப்ட் கொடுத்த வாலிபரின் வெறிச்செயல் - பொன்னேரி அருகே பரபரப்பு
40 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; லிப்ட் கொடுத்த வாலிபரின் வெறிச்செயல் - பொன்னேரி அருகே பரபரப்பு
மாறாத தலைநகர்..! 3 குழந்தைகளின் தாய் பரிதாபம், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
மாறாத தலைநகர்..! மூன்று குழந்தைகளின் தாய் பரிதாபம், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
சுடுகாடு அருகே ரகசிய சாராய விற்பனை: சுமித்ராவை தட்டித்தூக்கிய போலீஸ்...
சுடுகாடு அருகே ரகசிய சாராய விற்பனை: சுமித்ராவை தட்டித்தூக்கிய போலீஸ்...
போதையில் கதவைத் திறந்து வைத்துத் தூக்கம்: புதுச்சேரியில் கார் திருடிய 'பக்கத்து அறை' வாலிபர் 24 மணிநேரத்தில் கைது!
போதையில் கதவைத் திறந்து வைத்துத் தூக்கம்: புதுச்சேரியில் கார் திருடிய 'பக்கத்து அறை' வாலிபர் 24 மணிநேரத்தில் கைது!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Modi: “இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
“இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
Aadhav Arjuna: போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
US Iran War: ''ஹார்முஸ் ஜலசந்திய திறந்தாலும், இப்போதைக்கு பிரச்னை தீராது.!'' எச்சரிக்கும் சிங்கப்பூர் பிரதமர்
''ஹார்முஸ் ஜலசந்திய திறந்தாலும், இப்போதைக்கு பிரச்னை தீராது.!'' எச்சரிக்கும் சிங்கப்பூர் பிரதமர்
Dharmarajan IPS : ’முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன் IPS..?
’முதல்வர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன்..?
Work From Home: அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
Hyundai Cheapest EV: டாடா, மஹிந்திரா எல்லாம் காலி.! மிகக் குறைந்த விலை EV SUV-ஐ இறக்கும் ஹூண்டாய்; அம்சங்கள் என்ன.?
டாடா, மஹிந்திரா எல்லாம் காலி.! மிகக் குறைந்த விலை EV SUV-ஐ இறக்கும் ஹூண்டாய்; அம்சங்கள் என்ன.?
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
Embed widget