மேலும் அறிய

காதலியாய் மாறிய தோழி... பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி..

 வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி பூங்காவில்  இளம் காதல் ஜோடி விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி பூங்கா  கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு தமிழக அரசு நிபந்தனைகள் கூடிய தளர்வுகள் அளிக்கப்படது, அதன் அடிப்படையில்  வந்தவாசியில் உள்ள பூங்கா திறக்கப்ட்டது, இதில்  ஏராளமான பொது மக்கள் காலையிலும், மாலையிலும் உடற் பயிற்சி, மற்றும் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். 

பூங்காவில் காலை 5 மணிமுதல் 8.30 மணிவரையிலும் மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரையில் திறக்கப்பட்டு இருக்கும், பூங்காவிற்கு  வழக்கம் போல் மாலை நேரத்தில் உடற் பயிற்சியில் ஈடுப்பட்டு இருந்த  பொதுமக்கள் பூங்காவில் ஒரு பகுதியில் மரத்தடியில் ஒரு இளம்பெண்ணும், வாலிபர் ஒருவரும் வாயில் நுரைத்தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர், இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், 


காதலியாய் மாறிய தோழி... பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி..

இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல்நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், இறந்து கிடந்தவர்களின் உடல்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்தவர்களின் அருகில் விஷப்பாட்டில், செல்போன் மற்றும் ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டு ஆகியவை கிடந்துள்ளது . செல்போன்கள் மூலம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர்கள் காதல் ஜோடி என்பது தெரியவந்தது.

அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகள் அக்சயா (19) என்றும் அதே கிராமத்தின் அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் பரத் (20 ) என்றும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் பால் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வீட்டில் இருந்து ஒன்றாக  சென்று கொண்டிருந்தனர் அப்போது இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்துள்ளது.  அதுவே சில நாட்களில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 


காதலியாய் மாறிய தோழி... பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி..

ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் குறித்து இருவரின் வீட்டில் தெரியவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள், காதலர்கள் சந்திக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி, வந்தவாசி பகுதியில் உள்ள நகராட்சி பூங்காவில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி தனிமையில் சந்தித்துள்ளது. அங்கு மருந்தை குடித்த இருவரும், தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  பல்வேறு கோணங்களில்  விசாரணை செய்து வருகின்றனர். பெற்றோர் எதிர்ப்பால் இளம் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
"திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்
" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்
" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Suzuki Burgman Street Review: 56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
Brezza Vs Victoris CNG: புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Embed widget