மேலும் அறிய

காதலியாய் மாறிய தோழி... பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி..

 வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி பூங்காவில்  இளம் காதல் ஜோடி விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி பூங்கா  கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு தமிழக அரசு நிபந்தனைகள் கூடிய தளர்வுகள் அளிக்கப்படது, அதன் அடிப்படையில்  வந்தவாசியில் உள்ள பூங்கா திறக்கப்ட்டது, இதில்  ஏராளமான பொது மக்கள் காலையிலும், மாலையிலும் உடற் பயிற்சி, மற்றும் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். 

பூங்காவில் காலை 5 மணிமுதல் 8.30 மணிவரையிலும் மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரையில் திறக்கப்பட்டு இருக்கும், பூங்காவிற்கு  வழக்கம் போல் மாலை நேரத்தில் உடற் பயிற்சியில் ஈடுப்பட்டு இருந்த  பொதுமக்கள் பூங்காவில் ஒரு பகுதியில் மரத்தடியில் ஒரு இளம்பெண்ணும், வாலிபர் ஒருவரும் வாயில் நுரைத்தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர், இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், 


காதலியாய் மாறிய தோழி... பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி..

இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல்நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், இறந்து கிடந்தவர்களின் உடல்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்தவர்களின் அருகில் விஷப்பாட்டில், செல்போன் மற்றும் ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டு ஆகியவை கிடந்துள்ளது . செல்போன்கள் மூலம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர்கள் காதல் ஜோடி என்பது தெரியவந்தது.

அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகள் அக்சயா (19) என்றும் அதே கிராமத்தின் அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் பரத் (20 ) என்றும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் பால் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வீட்டில் இருந்து ஒன்றாக  சென்று கொண்டிருந்தனர் அப்போது இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்துள்ளது.  அதுவே சில நாட்களில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 


காதலியாய் மாறிய தோழி... பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி..

ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் குறித்து இருவரின் வீட்டில் தெரியவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள், காதலர்கள் சந்திக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி, வந்தவாசி பகுதியில் உள்ள நகராட்சி பூங்காவில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி தனிமையில் சந்தித்துள்ளது. அங்கு மருந்தை குடித்த இருவரும், தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  பல்வேறு கோணங்களில்  விசாரணை செய்து வருகின்றனர். பெற்றோர் எதிர்ப்பால் இளம் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget