மேலும் அறிய

Crime: பள்ளிக்கரணை: ஆணவ படுகொலை செய்யப்பட்ட கணவன்: மனைவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை பள்ளிக்கரணை அருகே கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அங்குள்ள மதுபானக்கடை வாசலில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

பள்ளிக்கரணையில் கணவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட 4 மாதத்தில் மனைவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணை அருகே கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அங்குள்ள மதுபானக்கடை வாசலில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியது. அதாவது அந்த இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

பள்ளிகரணையில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன். 26 வயதான இவர் தனது தந்தையுடன் இணைந்து பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். ஜல்லடியான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் பிரவீனுடனான காதலுக்கு ஷர்மி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டை  விட்டு வெளியேறிய ஷர்மி பிரவீன் வீட்டுக்கு சென்றுள்ளார். பின் இருவரும் சுயமரியாதை திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து ஷர்மி வீட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவரோ பிரவீனுடன் செல்வதாக உறுதியாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவீட்டாரிடமும் ஒப்புதல் எழுதி வாங்கி கொண்டு பிரச்சினையை முடித்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் ஷர்மி - பிரவீன் திருமணத்தால், பெண்ணின் குடும்பத்தின் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். குறிப்பாக ஷர்மியின் அண்ணன் தினேஷ் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று பிரவீனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி பிப்ரவரி 25 ஆம் தேதி பிரவீனை தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் படுகொலை செய்தனர். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தினேஷ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சாதிய ஆணவப் படுகொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்நிலையில் பிரவீன் இறந்த சோகத்தில் இருந்த ஷர்மி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென பிரவீனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
Embed widget