மேலும் அறிய

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ! புடவைக்குள் வைத்து புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தல்

புடவைக்குள் மது பாட்டில்கள் கடத்தி வருவதற்காக பிரத்தேகமான ஆடை தயாரித்து அதில் 230 மது பாட்டில்கள் கடத்தி வந்த செஞ்சி பகுதியை சேர்ந்த இரு பெண்கள் கைது.

விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து செஞ்சிக்கு புடவைக்குள் மது பாட்டில்கள் கடத்தி வருதற்கென்றே பிரத்யேகமான ஆடை தயாரித்து அதில் 230 மது பாட்டில்கள் கடத்தி வந்த செஞ்சி பகுதியை சேர்ந்த இரு பெண்களை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள செஞ்சி பேருந்து நிலையம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் செல்வதுரை வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த இரண்டு பெண்களை அழைத்து விசாரணை செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் இரு பெண்களும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து அவர்களை திண்டிவனம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் மதுபாட்டில்கள் கடத்தி வர புடவைக்குள் பிரத்யேகமான உடைதயாரித்து அதில் புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து புதுச்சேரி மதுபாட்டில்கள் கடந்தி வந்த செஞ்சி பகுதியை சேர்ந்த சின்ன பாப்பா, யசோதா ஆகிய இரு பெண்களையும் கைது செய்து அவர்களிடமிருந்த 230 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர். புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் வழியாக செஞ்சி பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்தி சென்று விற்பனைக்காக கொண்டு சென்றதாக இரு பெண்களும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர்., வழியாக பைக்கில் மது பாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில், ஏட்டுகள் செல்வம், வெங்கடேசன், பாண்டியன் ஆகியோர், இ.சி.ஆர்., புத்துப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் இருந்து மரக்காணம் நோக்கி பைக்கில் சென்ற இருவரை மடக்கி விசாரித்து பைக்கை சோதனை செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் வாங்கி சென்று மரக்காணத்தில் விற்பனை செய்ய கடத்தி செல்வது தெரியவந்தது. மதுபாட்டில் கடத்திய மரக்காணம் வேளாங்கண்ணி மகன் ஜெயசூர்யா 26; எழிலரசன் மகன் ஏழுமலை, 24; ஆகிய இருவரை கைது செய்து, 65 மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு தனி அறை அமைத்து 90 எம்எல் பிராந்தி கடத்திய வரை விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்

விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் காவலர்கள் தலைமையில் மதுரபாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் இருந்த போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் இருசக்கர வாகனத்தில் தனிஅரை அமைத்து  புதுச்சேரி மாநில மது பானங்கள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து காவலர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், வண்டியை ஓட்டி வந்தவர் விழுப்புரம் ஜி.ஆர்.பி தெரு ராஜகோபால் என்பவரின் மகன் நாகராஜ் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த சில தினங்களாக புதுச்சேரி மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு மது பாட்டில்கள் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஒரு சிலர் மட்டுமே சிக்கிக் கொள்கின்றனர் பலர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Embed widget