மேலும் அறிய

காதலை மறுத்த இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர்: ஜார்கண்டில் கொடூரம்

காதலை மறுத்த 19 வயது இளம் பெண் மீது வெறிபிடித்த இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காதலை மறுத்த 19 வயது இளம் பெண் மீது வெறிபிடித்த இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. 

நடந்தது என்ன?

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஷாருக் என்ற இளைஞர் அடிக்கடி தொந்தரவு கொடுத்துவந்துள்ளார். கட்டுமானப் பணியாளராக இருக்கும் ஷாருக் அப்பெண் பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துள்ளார். தன்னிடம் பேச வேண்டும் பழக வேண்டும் என்று நிர்பந்தித்துள்ளார்.

10 நாட்களுக்கு முன்னர் ஷாருக் அப்பெண்ணின் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து தொந்தரவு செய்துள்ளார். இதனால் அப்பெண் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். கடைசியாக நேற்று ஆகஸ்ட் 22 இரவு 8 மணியளவில் அப்பெண்ணுக்கு ஷாருக், என்னுடன் பேசாமல் இருப்பதால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அப்பெண், உடனடியாக தனது தந்தையிடம் இத்தனை நாட்களாக தான் அனுபவித்து வந்த வேதனையைப் பற்றி தெரிவித்திருக்கிறார்.

உடனே அவரது தந்தை மகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் கவலைப்பட வேண்டாம் நாளை அந்தப் பையனின் பெற்றோரை சந்தித்துப் பேசுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அப்பெண் திடீரென உடலில் வலியும் எரிச்சலும் மிகுவதை உணர்ந்து கண்விழித்தார். அப்போதுதான் அவர் மீது தீப்பற்றி எறிவது அவருக்குத் தெரிந்தது. அதனால் அவர் அதிர்ந்து போய் வேதனையில் அலறிக் கொண்டே தந்தையின் அறையை நோக்கி ஓடினார். மகள் எரிந்து கொண்டே வருவதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அந்த இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


காதலை மறுத்த இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர்: ஜார்கண்டில் கொடூரம்

சம்பந்தப்பட்ட இளைஞர் ஷாருக்கை கைது செய்துள்ளதாக காவல் நிலைய பொறுப்பாளர் நிதிஷ் குமார் கூறினார். இப்போது அப்பெண் 90% காயங்களுடன் பூலோ ஜானோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தும்கா மாவட்டத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலையாக காதலிப்பது. காதல் என்றுகூட சொல்லக் கூடாது பெண்ணின் மீது வெறி கொண்டு அவள் விருப்பம் இல்லாவிட்டாலும் அவளைப் பின் தொடர்வது. அந்தப் பெண் ஏற்க மறுத்தால் அவள் மீது ஆசிட் வீசுவது, தீ வைப்பது, கத்தியால் குத்திக் கொல்வது என்று பல்வேறு கொடூரங்கள் இந்தியாவில் நடைபெறுவது தொடர்கதையாகிவிட்டது.

தமிழகத்தில் ஆசிட் வீச்சுக்கு பலியான வினோதினி, கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட ஸ்வாதி என நிறைய சம்பவங்களை நாம் பார்த்துவிட்டோம்.

பாலின சமத்துவத்தை வீட்டிலிருந்தே ஆண் பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கும் காலம் வரும் வரை இதுபோன்ற குற்றங்கள் ஓயப்போவதில்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget