மேலும் அறிய

Crime: இளைஞருடன் தொடர்பு.. கண்டித்த மாமியார்.. மருமகளின் கொடூரச் செயல்..

பக்கத்து வீடு என்பதால் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் நேரம் செலவிட்டு வந்தனர். இந்த விவகாரம் நாளடைவில் அலமேலுவுக்கு தெரிய வந்த நிலையில் கண்டித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் மாமியாரை, தனது ஆண் நண்பருடன் இணைந்து மருமகள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள சிங்காரப்பேட்டையில் கரியபெருமாள் வலசை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 60 வயதுமிக்க அலமேலு என்ற பெண் திடீரென காணாமல் போனார். அவரை இளைய மகன் சேட்டு என்பவர் தன் நண்பர்களுடன் பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள காட்டில் ஒரு பெண் உடல் எரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகே சென்று பார்த்தபோது அது அலமேலு என தெரிய வந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் சிங்காரப்பேட்டை போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து அலமேலு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அலமேலுவின் மருமகள் பவித்ரா தான் தான் இந்த கொலைக்கு காரணம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. 
மேலும் பவித்ராவின் ஆண் நண்பர் மணிகண்டனும் இதற்கு உடந்தையாக செயல்பட்டது தெரிய வந்ததால் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

இதில், அலமேலுவின் மூத்த மகனான ஏழுமலைக்கும், அவரின் அண்ணன் மகளான பவித்ராவுக்கும் 3 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் ஏழுமலை கோவையில் வேலை செய்து வந்தார். இதனால் தனிமையில் வசித்து வந்த பவித்ராவுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் பழக்கம் ஏற்பட்டது.

பக்கத்து வீடு என்பதால் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் நேரம் செலவிட்டு வந்தனர். இந்த விவகாரம் நாளடைவில் அலமேலுவுக்கு தெரிய வந்த நிலையில், தன் மகனுக்கு துரோகம் செய்யாதே என கண்டித்துள்ளார். ஆனாலும் பவித்ரா மணிகண்டனுடனான தனது உறவை தொடர்ந்துள்ளார். இதன்பின்னர் பவித்ரா ஆடு மேய்ப்பதால் மணிகண்டனுடனான உறவை காட்டுப்பகுதுயில் தொடர்ந்துள்ளார். 

மீண்டும் ஒருமுறை அலமேலுவிடன் இருவரும் சிக்க, அவர் கண்டித்துள்ளார். இதனால் மாமியாருடம் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே மணிகண்டன் அலமேலு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை எரித்தால் அடையாளம் தெரியாது என வீட்டில் உள்ள பெட்ரோலை எடுத்து வந்து ஊற்றி நெருப்பு வைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் உடல் பாதி மட்டுமே எரிந்திருக்கிறது. 

வீட்டுக்கு சென்ற பவித்ராவும், மணிகண்டனும் ஒன்றுமே நடக்காதது போல இருந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Embed widget