மேலும் அறிய

Krishnagiri: எதிர்வீட்டு பெண்ணுடன் தொடர்பு.. குழந்தையை கொன்ற இளம்பெண்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்துள்ள கெலமங்கலம் காவல் நிலையத்திற்குப்பட்ட பகுதியில் சின்னப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுரேஷ் என்ற 30 வயதுமிக்க நபர்  பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எதிர்வீட்டு பெண்ணுடன் தகாத உறவு இருந்த நிலையில் தன்னுடைய குழந்தையை பெண் ஒருவர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்துள்ள கெலமங்கலம் காவல் நிலையத்திற்குப்பட்ட பகுதியில் சின்னப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுரேஷ் என்ற 30 வயதுமிக்க நபர்  பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இரண்டு பெண் குழந்தைக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் தம்பதியினர் கொண்டாடியுள்ளனர்.

எதிர் வீட்டு பெண்ணுடன் தொடர்பு

இதனிடையே பாரதிக்கும் அவர் எதிர் வீட்டில் வசிக்கும் சுமித்ரா என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவரும் சந்தித்து தனிமையில் நேரம் செலவிட்டுள்ளனர். இருவரும் பெண்கள், அக்கம் பக்கத்தினர் என்பதால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்துள்ளது.

இப்படியான நிலையில் சுமித்ரா மீதான அன்பால் பாரதி அவரது பெயரை தனது மார்பு பகுதியில் டாட்டூ குத்தியுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்குமிடையேயான தொடர்பு சுரேஷூக்கு தெரிய வந்த நிலையில் அவர் பாரதியை கடுமையாக கண்டித்துள்ளார்.  இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சுமித்ராவை அழைத்து இந்த உறவை கைவிடுமாறும் கூறியுள்ளார். 

திடீரென இறந்த குழந்தை 

இதனிடையே நவம்பர் 4ம் தேதி சுரேஷ் மதிய நேரத்தில் உணவருந்த தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தை மூச்சு பேச்சில்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பாரதியிடம் விசாரித்துள்ளார். அவர் தான் குழந்தையை பால் குடித்து தூங்க வைத்ததாக தெரிவித்த நிலையில் புரையேறி இருமல் வந்ததாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவரிடம் அழைத்து சென்ற நிலையில் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் கூறியும் சுரேஷ் மறுத்து உடலை பெற்று நல்லடக்கம் செய்திருக்கிறார். 

ஆடியோவால் வெளியான உண்மை

இதனிடையே பாரதியின் செல்போனை எதேச்சையாக அவர் சோதனை செய்த போது அதில் சுமித்ராவுடன் பேசும் ஆடியோ ஒன்று இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நேரம் செலவிட்டு வந்த நிலையில் குழந்தை அழுததால் பெரும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை கொன்று விடும்படி சுமித்ரா சொல்ல, பாரதியும் அதனை செய்து குழந்தையை வாயைப் பொத்தி மூச்சு திணற வைத்து கொலை செய்திருக்கிறார். 

இதன் புகைப்படங்களையும் அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து சுரேஷ் போலீசுக்கு செல்வதை அறிந்த பாரதி அவரை தொடர்பு கொண்டு பேசி உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து பாரதி, சுமித்ரா மீது கெலமங்கலம் போலீசில் புகாரளித்தார். இருவரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
வேட்டையாடிய 8 தனிப்படைகள்: 4 கிலோ தங்கத்துடன் சிக்கிய புதுச்சேரி கொள்ளை கும்பல் - விழுப்புரம் போலீஸ் அதிரடி!
வேட்டையாடிய 8 தனிப்படைகள்: 4 கிலோ தங்கத்துடன் சிக்கிய புதுச்சேரி கொள்ளை கும்பல் - விழுப்புரம் போலீஸ் அதிரடி!
கள்ளக் காதலனுடன் உல்லாசம் !! கூலி தொழிலாளியால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கள்ளக் காதலனுடன் உல்லாசம் !! கூலி தொழிலாளியால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு !! பலத்த சத்தத்துடன் விழுந்த பாட்டில்கள் !! நடந்தது என்ன ?
பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு !! பலத்த சத்தத்துடன் விழுந்த பாட்டில்கள் !! நடந்தது என்ன ?
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
Embed widget