மேலும் அறிய

Krishnagiri: எதிர்வீட்டு பெண்ணுடன் தொடர்பு.. குழந்தையை கொன்ற இளம்பெண்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்துள்ள கெலமங்கலம் காவல் நிலையத்திற்குப்பட்ட பகுதியில் சின்னப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுரேஷ் என்ற 30 வயதுமிக்க நபர்  பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எதிர்வீட்டு பெண்ணுடன் தகாத உறவு இருந்த நிலையில் தன்னுடைய குழந்தையை பெண் ஒருவர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்துள்ள கெலமங்கலம் காவல் நிலையத்திற்குப்பட்ட பகுதியில் சின்னப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுரேஷ் என்ற 30 வயதுமிக்க நபர்  பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இரண்டு பெண் குழந்தைக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் தம்பதியினர் கொண்டாடியுள்ளனர்.

எதிர் வீட்டு பெண்ணுடன் தொடர்பு

இதனிடையே பாரதிக்கும் அவர் எதிர் வீட்டில் வசிக்கும் சுமித்ரா என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவரும் சந்தித்து தனிமையில் நேரம் செலவிட்டுள்ளனர். இருவரும் பெண்கள், அக்கம் பக்கத்தினர் என்பதால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்துள்ளது.

இப்படியான நிலையில் சுமித்ரா மீதான அன்பால் பாரதி அவரது பெயரை தனது மார்பு பகுதியில் டாட்டூ குத்தியுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்குமிடையேயான தொடர்பு சுரேஷூக்கு தெரிய வந்த நிலையில் அவர் பாரதியை கடுமையாக கண்டித்துள்ளார்.  இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சுமித்ராவை அழைத்து இந்த உறவை கைவிடுமாறும் கூறியுள்ளார். 

திடீரென இறந்த குழந்தை 

இதனிடையே நவம்பர் 4ம் தேதி சுரேஷ் மதிய நேரத்தில் உணவருந்த தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தை மூச்சு பேச்சில்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பாரதியிடம் விசாரித்துள்ளார். அவர் தான் குழந்தையை பால் குடித்து தூங்க வைத்ததாக தெரிவித்த நிலையில் புரையேறி இருமல் வந்ததாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவரிடம் அழைத்து சென்ற நிலையில் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் கூறியும் சுரேஷ் மறுத்து உடலை பெற்று நல்லடக்கம் செய்திருக்கிறார். 

ஆடியோவால் வெளியான உண்மை

இதனிடையே பாரதியின் செல்போனை எதேச்சையாக அவர் சோதனை செய்த போது அதில் சுமித்ராவுடன் பேசும் ஆடியோ ஒன்று இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நேரம் செலவிட்டு வந்த நிலையில் குழந்தை அழுததால் பெரும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை கொன்று விடும்படி சுமித்ரா சொல்ல, பாரதியும் அதனை செய்து குழந்தையை வாயைப் பொத்தி மூச்சு திணற வைத்து கொலை செய்திருக்கிறார். 

இதன் புகைப்படங்களையும் அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து சுரேஷ் போலீசுக்கு செல்வதை அறிந்த பாரதி அவரை தொடர்பு கொண்டு பேசி உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து பாரதி, சுமித்ரா மீது கெலமங்கலம் போலீசில் புகாரளித்தார். இருவரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Top 10 News Headlines: SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
Gold Rate Dec.25th: 1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Top 10 News Headlines: SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
Gold Rate Dec.25th: 1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
Tamilnadu Roundup: முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Election Commission: SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
OTP Mandatory Tatkal Ticket Booking : இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வழிமுறை.! என்ன தெரியுமா.? தெற்கு ரயில்வே அறிவிப்பு
இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வழிமுறை.! என்ன தெரியுமா.? தெற்கு ரயில்வே அறிவிப்பு
Embed widget