மேலும் அறிய

Crime News: உறவினரை காதலித்த இளம்பெண்.. மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொன்ற குடும்பம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆணவக்கொலை சம்பவம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோண்டா மாவட்டத்தில் இளம்பெண் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தூரத்து உறவினரை திருமணம் செய்ய விரும்பிய பெண்ணை தந்தை மற்றும் சகோதரன் இணைந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு 19 வயது தான் ஆகியுள்ளது. அங்கிருக்கும் தோர்ஹான்ஸ் கிராமத்தில் கடந்த ஜனவரி 30ம் தேதி வீட்டில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் இறந்ததாக குடும்பத்தினர் அவசர உதவி எண் 112க்கு போன் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். 

அப்போது அந்த பெண்ணின் வருங்கால கணவர் பரமேஷ்வர் பதக் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு அந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் சந்திர பிரகாஷ் மற்றும் சகோதரர் ராகுல் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் இருவர் மீதும் போலீசார் சந்தேகப் பார்வை திரும்பியது. 

அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். புகார் அளித்த பரமேஸ்வர் பதக் தங்களுடைய தூரத்து உறவினர் என்றும், அவரை திருமணம் செய்ய இந்த பெண் விரும்பியதாகவும், அதற்கு மறுத்த நிலையில் முற்றிய தகராறில் இந்த கொலை நடந்ததாகவும் அவர்கள் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

அதன்படி ஜனவரி 30ம் தேதி அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி பரமேஸ்வர் பதக்கை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இது தெரிந்த சந்திர பிரகாஷ் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் அப்பெண்ணை ஒரு அறையில் அடைத்து வைத்ததோடு மட்டுமல்லாமல் கை, கால்களை கட்டி மின்சார கேபிள் மூலம் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்துள்ளனர். 

ஆனால் அந்த பெண் காதலித்த நாட்களில் தான் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனுக்கு மிகவும் பயப்படுவதாகவும், அவர்கள் தன்னை ஏதாவது செய்யக்கூடும் என கடிதம் எழுதி பரமேஸ்வரிடம் கொடுத்திருக்கிறார். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பரமேஸ்வர் பதக் புகார் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்த கொலை சம்பவம் வெளியே தெரிந்திருக்காது என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த கொலையை விபத்தாக சித்தரிக்க ஒரு பழுதான அயர்ன் பாக்ஸை வைத்ததும் போலீசாஅர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மப்ளர், துப்பட்டா, மொபைல் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget