மேலும் அறிய

Crime News: உறவினரை காதலித்த இளம்பெண்.. மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொன்ற குடும்பம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆணவக்கொலை சம்பவம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோண்டா மாவட்டத்தில் இளம்பெண் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தூரத்து உறவினரை திருமணம் செய்ய விரும்பிய பெண்ணை தந்தை மற்றும் சகோதரன் இணைந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு 19 வயது தான் ஆகியுள்ளது. அங்கிருக்கும் தோர்ஹான்ஸ் கிராமத்தில் கடந்த ஜனவரி 30ம் தேதி வீட்டில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் இறந்ததாக குடும்பத்தினர் அவசர உதவி எண் 112க்கு போன் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். 

அப்போது அந்த பெண்ணின் வருங்கால கணவர் பரமேஷ்வர் பதக் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு அந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் சந்திர பிரகாஷ் மற்றும் சகோதரர் ராகுல் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் இருவர் மீதும் போலீசார் சந்தேகப் பார்வை திரும்பியது. 

அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். புகார் அளித்த பரமேஸ்வர் பதக் தங்களுடைய தூரத்து உறவினர் என்றும், அவரை திருமணம் செய்ய இந்த பெண் விரும்பியதாகவும், அதற்கு மறுத்த நிலையில் முற்றிய தகராறில் இந்த கொலை நடந்ததாகவும் அவர்கள் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

அதன்படி ஜனவரி 30ம் தேதி அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி பரமேஸ்வர் பதக்கை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இது தெரிந்த சந்திர பிரகாஷ் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் அப்பெண்ணை ஒரு அறையில் அடைத்து வைத்ததோடு மட்டுமல்லாமல் கை, கால்களை கட்டி மின்சார கேபிள் மூலம் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்துள்ளனர். 

ஆனால் அந்த பெண் காதலித்த நாட்களில் தான் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனுக்கு மிகவும் பயப்படுவதாகவும், அவர்கள் தன்னை ஏதாவது செய்யக்கூடும் என கடிதம் எழுதி பரமேஸ்வரிடம் கொடுத்திருக்கிறார். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பரமேஸ்வர் பதக் புகார் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்த கொலை சம்பவம் வெளியே தெரிந்திருக்காது என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த கொலையை விபத்தாக சித்தரிக்க ஒரு பழுதான அயர்ன் பாக்ஸை வைத்ததும் போலீசாஅர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மப்ளர், துப்பட்டா, மொபைல் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!
புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!
மதுபோதையில் ரவுசு! கார் கண்ணாடியை நொறுக்கி வாகனங்களை மறித்து ரகளை: விழுப்புரத்தில் பரபரப்பு!
மதுபோதையில் ரவுசு! கார் கண்ணாடியை நொறுக்கி வாகனங்களை மறித்து ரகளை: விழுப்புரத்தில் பரபரப்பு!
" கணவரின் காலைப் பிடித்த மனைவி " தலையணையால் அமுக்கிய கள்ளக் காதலன் —தப்பிய கணவனின் அலறல் சத்தம்
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget