மேலும் அறிய

Crime: கண்ணை மறைத்த கோபம்! பேத்தியால் உயிரிழந்த பாட்டி! பலியான இரு உயிர்கள்!

பெங்களூருவில் பாட்டியை கீழே தள்ளிவிட்டதில் உயிரிழந்தததால், பயத்தில் பேத்தியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ளது ஞானபாரதி பகுதி. இந்த பகுதியில் உள்ள மாருதி லே அவுட் பகுதி. அந்த பகுதியில் வசித்து வருபவர் ஜெயம்மா. அவருக்கு வயது 70. அவரது பேத்தி மமதா. அவருக்கு வயது 25. மமதாவிற்கு திருமணமாகிவிட்டது. அவரது கணவர் அருகில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். பி.காம். பட்டதாரியான மமதாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆன நிலையில், பரிதாபமாக உயிரிழந்தது. இதனால், மமதா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.


Crime: கண்ணை மறைத்த கோபம்! பேத்தியால் உயிரிழந்த பாட்டி! பலியான இரு உயிர்கள்!

கடுமையான மன உளைச்சலில் இருந்த மமதாவிற்கும், அவரது பாட்டி ஜெயம்மாவிற்கும் இடையே நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த மமதா தனது பாட்டியை தள்ளிவிட்டுள்ளார். இதில், வீட்டின் அருகில் இருந்த சுவரில் மோதி ஜெயம்மா கீழே விழுந்துள்ளார். தலையில் பலமாக அடிபட்ட ஜெயம்மா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட மமதா அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால், என்ன செய்வதென்று தெரியாத மமதா வீட்டில் தனது படுக்கை அறைக்கு உள்ளே சென்றுள்ளார். அங்கே கதவை உள்பக்கம் தாழிட்ட மமதா, பாட்டியை கொலை செய்த குற்ற உணர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


Crime: கண்ணை மறைத்த கோபம்! பேத்தியால் உயிரிழந்த பாட்டி! பலியான இரு உயிர்கள்!

மமதாவின் சகோதரர் சேத்தன் தாய் மஞ்சுளாவுடன் திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்தார். நீண்ட நேரம் போன் செய்தும் மமதாவும், ஜெயம்மாவும் போனை எடுக்காததால் இருவரும் பதற்றமடைந்துள்ளனர். உடனே, மமதாவின் கணவர் மஞ்சுநாத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அக்கம்பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருந்துள்ளது. மஞ்சுநாத்தும், அக்கம்பக்கத்தினரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மமதாவை தேடியபோது அவர் படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். ஜெயம்மா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து, உடனே ஞானபாரதி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Watch video : "என் மகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து போங்க".. உக்ரைன் போரில் மகளை கட்டிபிடித்து அழுத தந்தை!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance plan : கூட்டணியே வேண்டாம் என பிளான் போடும் ஸ்டாலின்.? அடுத்த நொடியே ஓடோடி சென்ற பிரேமலதா- பேசியது என்ன.?
கூட்டணியே வேண்டாம் என பிளான் போடும் ஸ்டாலின்.? அடுத்த நொடியே ஓடோடி சென்ற பிரேமலதா- பேசியது என்ன.?
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
Cm Vijay vs EV Velu : முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
Embed widget