மேலும் அறிய

Crime: கண்ணை மறைத்த கோபம்! பேத்தியால் உயிரிழந்த பாட்டி! பலியான இரு உயிர்கள்!

பெங்களூருவில் பாட்டியை கீழே தள்ளிவிட்டதில் உயிரிழந்தததால், பயத்தில் பேத்தியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ளது ஞானபாரதி பகுதி. இந்த பகுதியில் உள்ள மாருதி லே அவுட் பகுதி. அந்த பகுதியில் வசித்து வருபவர் ஜெயம்மா. அவருக்கு வயது 70. அவரது பேத்தி மமதா. அவருக்கு வயது 25. மமதாவிற்கு திருமணமாகிவிட்டது. அவரது கணவர் அருகில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். பி.காம். பட்டதாரியான மமதாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆன நிலையில், பரிதாபமாக உயிரிழந்தது. இதனால், மமதா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.


Crime: கண்ணை மறைத்த கோபம்! பேத்தியால் உயிரிழந்த பாட்டி! பலியான இரு உயிர்கள்!

கடுமையான மன உளைச்சலில் இருந்த மமதாவிற்கும், அவரது பாட்டி ஜெயம்மாவிற்கும் இடையே நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த மமதா தனது பாட்டியை தள்ளிவிட்டுள்ளார். இதில், வீட்டின் அருகில் இருந்த சுவரில் மோதி ஜெயம்மா கீழே விழுந்துள்ளார். தலையில் பலமாக அடிபட்ட ஜெயம்மா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட மமதா அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால், என்ன செய்வதென்று தெரியாத மமதா வீட்டில் தனது படுக்கை அறைக்கு உள்ளே சென்றுள்ளார். அங்கே கதவை உள்பக்கம் தாழிட்ட மமதா, பாட்டியை கொலை செய்த குற்ற உணர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


Crime: கண்ணை மறைத்த கோபம்! பேத்தியால் உயிரிழந்த பாட்டி! பலியான இரு உயிர்கள்!

மமதாவின் சகோதரர் சேத்தன் தாய் மஞ்சுளாவுடன் திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்தார். நீண்ட நேரம் போன் செய்தும் மமதாவும், ஜெயம்மாவும் போனை எடுக்காததால் இருவரும் பதற்றமடைந்துள்ளனர். உடனே, மமதாவின் கணவர் மஞ்சுநாத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அக்கம்பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருந்துள்ளது. மஞ்சுநாத்தும், அக்கம்பக்கத்தினரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மமதாவை தேடியபோது அவர் படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். ஜெயம்மா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து, உடனே ஞானபாரதி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Watch video : "என் மகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து போங்க".. உக்ரைன் போரில் மகளை கட்டிபிடித்து அழுத தந்தை!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget