மேலும் அறிய

Crime: கண்ணை மறைத்த கோபம்! பேத்தியால் உயிரிழந்த பாட்டி! பலியான இரு உயிர்கள்!

பெங்களூருவில் பாட்டியை கீழே தள்ளிவிட்டதில் உயிரிழந்தததால், பயத்தில் பேத்தியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ளது ஞானபாரதி பகுதி. இந்த பகுதியில் உள்ள மாருதி லே அவுட் பகுதி. அந்த பகுதியில் வசித்து வருபவர் ஜெயம்மா. அவருக்கு வயது 70. அவரது பேத்தி மமதா. அவருக்கு வயது 25. மமதாவிற்கு திருமணமாகிவிட்டது. அவரது கணவர் அருகில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். பி.காம். பட்டதாரியான மமதாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆன நிலையில், பரிதாபமாக உயிரிழந்தது. இதனால், மமதா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.


Crime: கண்ணை மறைத்த கோபம்! பேத்தியால் உயிரிழந்த பாட்டி! பலியான இரு உயிர்கள்!

கடுமையான மன உளைச்சலில் இருந்த மமதாவிற்கும், அவரது பாட்டி ஜெயம்மாவிற்கும் இடையே நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த மமதா தனது பாட்டியை தள்ளிவிட்டுள்ளார். இதில், வீட்டின் அருகில் இருந்த சுவரில் மோதி ஜெயம்மா கீழே விழுந்துள்ளார். தலையில் பலமாக அடிபட்ட ஜெயம்மா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட மமதா அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால், என்ன செய்வதென்று தெரியாத மமதா வீட்டில் தனது படுக்கை அறைக்கு உள்ளே சென்றுள்ளார். அங்கே கதவை உள்பக்கம் தாழிட்ட மமதா, பாட்டியை கொலை செய்த குற்ற உணர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


Crime: கண்ணை மறைத்த கோபம்! பேத்தியால் உயிரிழந்த பாட்டி! பலியான இரு உயிர்கள்!

மமதாவின் சகோதரர் சேத்தன் தாய் மஞ்சுளாவுடன் திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்தார். நீண்ட நேரம் போன் செய்தும் மமதாவும், ஜெயம்மாவும் போனை எடுக்காததால் இருவரும் பதற்றமடைந்துள்ளனர். உடனே, மமதாவின் கணவர் மஞ்சுநாத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அக்கம்பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருந்துள்ளது. மஞ்சுநாத்தும், அக்கம்பக்கத்தினரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மமதாவை தேடியபோது அவர் படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். ஜெயம்மா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து, உடனே ஞானபாரதி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Watch video : "என் மகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து போங்க".. உக்ரைன் போரில் மகளை கட்டிபிடித்து அழுத தந்தை!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget