ஆசைக்கு தடை சொன்ன கணவர் கொலை.. இரவு முழுவதும் சடலத்துடன் தூங்கிய மனைவி!
மனைவி ரூஹியின் கள்ளக்காதல் விவகாரம் கணவன் மெஹ்ராஜூக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் அதன்பிறகு திருந்தாத ரூஹி கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

தகாத உறவை கண்டித்த கணவனை கொலை செய்து விட்டு இரவு முழுவதும் சடலத்தின் அருகில் மனைவி தூங்கிய சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் தான் இந்த கொடூரமான சம்பவடம் நடைபெற்றது. அங்குள்ள பிப்லௌதி காலா கிராமத்தைச் சேர்ந்த மெஹ்ராஜ் என்பவர் கொத்தனாராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரூஹி என்ற மனைவியும் , இரு குழந்தைகளும் உள்ளனர். இப்படியான நிலையில் ரூஹிக்கு அவரது சகோதரியின் மைத்துனரான ஃபர்மானுடன் தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் மெஹ்ராஜ் இல்லாத சமயத்தில் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இப்படியான நிலையில் மனைவி ரூஹியின் கள்ளக்காதல் விவகாரம் கணவன் மெஹ்ராஜூக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் அதன்பிறகு திருந்தாத ரூஹி மைத்துனரான ஃபர்மானுடன் சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். அதற்கு இடையூறாக இருக்கும் தன் கணவன் மெஹ்ராஜை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார்..
இதற்காக தனது திட்டத்தின்படி, மெஹ்ராஜின் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட கணவர், மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து ஃபர்மானையும் அவனது நண்பன் அத்னானையும் வீட்டிற்கு வரவழைத்த ரூஹி மெஹ்ராஜின் கால்களைக் கயிற்றால் கட்டியுள்ளார். கூர்மையான கத்தியால் அவரது கழுத்தை அறுத்து மூன்று பேரும் சேர்ந்து மெஹ்ராஜை கொலை செய்தனர். இந்த கொடூர செயலை அரங்கேறிய பிறகு ஃபர்மான், அத்னான் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
ஆனால் ரூஹி துளியும் கவலையும், பயமுமின்றி அருகே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தைகளுடன் சென்று இரவு முழுவதும் தூங்கியுள்ளார். மறுநாள் காலை மெஹ்ராஜின் தந்தை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பகுதியில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் தன் மகன் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அலறி துடித்தார்.
இதுதொடர்பாக மருமகள் ரூஹியிடம் கேட்டபோது, திருடர்கள் வந்த நிலையில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் மெஹ்ராஜ் தாக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்திருக்கிறார். எனினும் மாமனாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக காவல்துறையில் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரூஹியிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் உண்மை வெளிப்பட்டது. இந்த கொலைக்கு காரணமான ரூஹி, ஃபர்மான், அத்னான் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து மெஹ்ராஜ் கொலையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகளையும், இரண்டு கைபேசிகளையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















